சுவிட்சர்லாந்தின் பாசல் நகரில் சுவிஸ் ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று ஆடவருக்கான இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடியானது டென்மார்க்கின் கிறிஸ்டியன் ஃபாஸ்ட் கேஜர், ராஸ்மஸ் கேஜர் ஜோடியுடன் மோதுவதாக இருந்தது.
ஆனால் போட்டிக்கு முன்னதாக சாட்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டிக்கு திடீரென வலது தோள்பட்டையில் வலி ஏற்பட்டது. இதனால் கால் இறுதி சுற்றில் இருந்து சாட்விக், ஷிராக்...
தாய்லாந்தின் பாங்காக் நகரில் உலக குத்துச்சண்டை ஃபியூச்சர்ஸ் கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 48 கிலோ எடை பிரிவு கால் இறுதி சுற்றல் இந்தியாவின் கன்ஜன் 5-0 என்ற கணக்கில் அஜர்பைஜானின் குலார் ஹுசைனோவா வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.
54 கிலோ எடைப் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் ஜாய் தேவி, ஜப்பானின் யூரா கனேமருவை தோற்கடித்து அரை இறுதி சுற்றில் நுழைந்தார். 50 கிலோ...
ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனையொட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஜிம்பாப்வே அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான பிளெசிங் முசரபானியை ஒப்பந்தம் செய்துள்ளது. ஐபிஎல் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், முசரபானி பாகிஸ்தான் சூப்பர் லீக் ஒப்பந்தத்தைக் கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் முடிவடைந்த டி 20 உலகக் கோப்பை தொடரில் முசரபானி சிறந்த செயல் திறனை வெளிப்படுத்தியிருந்தார். இந்தத் தொடரில் அவர், 13 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். 6 அடி 8...
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் 28-ம் தேதி பெங்களூருவில் கோலாகலமாக தொடங்குகிறது. இதையொட்டி இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் அனைத்து அணிகளும் கடந்த சில வாரங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), ஐபிஎல் அணிகளுக்கான பயிற்சி வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து அணிகளுக்கும் 5 பக்கங்கள் கொண்ட வழிகாட்டு நெறிமுறைகளை பிசிசிஐ அனுப்பிவத்துள்ளது. இதன்படி எதிரணிகள் தங்களது வலைப்பயிற்சியின் போது பயன்படுத்திய...
இந்திய அணிக்கு நடப்பாண்டில் ஏற்கெனவே போட்டிகள் நிறைந்த கால அட்டவணை உள்ளது. இந்நிலையில் வரும் 2027-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி உலகக் கோப்பைக்கு முன்னதாக, இருதரப்பு தொடர்களில் கூடுதல் ஒருநாள் போட்டிகளை சேர்க்குமாறு பல்வேறு கிரிக்கெட் வாரியங்கள் பிசிசிஐ-க்கு கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த வகையில் இந்திய அணி வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது இருதரப்பு ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு இங்கிலாந்து, நியூஸிலாந்து,...
சமீபத்தில் நிறைவடைந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருந்தது. இறுதிப் போட்டியில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை தோற்கடித்து இருந்தது.
இந்நிலையில் 24 அணிகள் கலந்து கொண்ட இந்தத் தொடரில் ஒவ்வொரு அணிக்கும் வழங்கப்பட்ட பரிசுத் தொகையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு சுமார் ரூ.25...
அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில் இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, சுவீடனின் ஆண்ட்ரே கோரன்சன் ஜோடி, செக்குடியரசின் ஜிரி லெஹெக்கா, நெதர்லாந்தின் சாண்டர் அரெண்ட்ஸ் ஜோடியை எதிர்த்து விளையாடியது.
ஒரு மணி நேரம் 14 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் யுகி பாம்ப்ரி, ஆண்ட்ரே கோரன்சன் ஜோடி 6-4, 6-4...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய அணியின் தொடக்க வீரரான அபிஷேக் சர்மா 875 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக அபிஷேக் சர்மா அரை சதம் விளாசியதால் தரவரிசையில் சரிவை சந்திக்கவில்லை. மற்றொரு அதிரடி வீரரான இஷான் கிஷன் 871 புள்ளிகளுடன் 2...
ஐபிஎல் 2026 சீசன் முதற்கட்ட அட்டவணை வெளியீடு: சிஎஸ்கே 30-ம் தேதி ராஜஸ்தானுடன் பலப்பரீட்சை
admin - 0
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் போட்டிகள் வரும் 28-ம் தேதி முதல் மே 31 வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. இதற்கிடையே தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வெளியிடுவதில் தாமதம் நிலவி வந்தது.
இதற்கிடையே 19-வது சீசனுக்கான ஐபிஎல் போட்டி அட்டவணை 12-ம் தேதிக்குள் வெளியிடப்படும் என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்திருந்தார்....
2026 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதையடுத்து பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் இந்திய அணியை புகழ்ந்து தள்ளி வருகின்றனர். முன்னாள் கேப்டனும் லெக் ஸ்பின்னரும் அதிரடி பேட்டருமான ஷாஹித் அஃப்ரீடி 2011 உலகக்கோப்பை அரையிறுதியில் எப்படி தோனி படை தங்களை கடும் அழுத்தத்திற்குக் கொண்டு சென்றது என்பதைப் பகிர்ந்துள்ளார்.
பாகிஸ்தான் ஊடகமான சாம்னா டிவியில் அஃப்ரீடி இது தொடர்பாகக் கூறும்போது, மொஹாலி நினைவுகளை பகிர்ந்த ஷாஹித் அஃப்ரிடி –...










