Google search engine
சென்னை சைதாப்​பேட்​டை​யில் உள்ள தாடண்​டர் நகர் அரசு ஊழியர் குடி​யிருப்​பில் தூய்​மைப் பணி சென்னை மாநகராட்​சி​யிடம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளது. இதன் சேவையை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் நேற்று தொடங்​கி​வைத்​தார். சென்னை மாநக​ராட்​சி, அடை​யார் மண்​டலத்​துக்கு உட்​பட்ட 169-வது வார்​டு, தாடண்​டர் நகர் அரசு குடி​யிருப்பு பகு​தி, 70.73 ஏக்​கர் பரப்​பளவு கொண்​டது. இங்கு 1844 குடி​யிருப்​பு​கள் உள்​ளன. மேலும் 1500 குடி​யிருப்​பு​கள் வரவுள்​ளன. இவ்​வளாகத்​தில் தூய்​மைப் பணி மற்​றும் இதர பராமரிப்பு பணி​கள்...
ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு ஏற்​பட்டு உயி​ரிழந்​தார். அந்த பேருந்து மோதிய விபத்​தில் சாலை​யில் நடந்து சென்று கொண்​டிருந்த முதி​ய​வர் உயி​ரிழந்​தார். 4 கார்​களும் சேதம் அடைந்​தன. அரும்​பாக்​கம் 100 அடி சாலை, தவசு குட்டி பிரி​யாணி கடை வழி​யாக நேற்று காலை 6.10 மணி​யள​வில் அரசுப் பேருந்து ஒன்று கிளாம்​பாக்​கத்​திலிருந்து கோயம்​பேடு நோக்கி சென்று கொண்​டிருந்​தது. பேருந்தை தரு​மபுரி மாவட்​டம், அரூரைச் சேர்ந்த வேலுமணி (58) என்​பவர்...
கடலூர் ரயில் விபத்து சம்​பவம் எதிரொலி​யாக, இன்​டர்​லாக் செய்​யப்​ப​டாத கேட்​களில் விரும்​பத்​த​காத சம்​பவங்​களை தவிர்க்க முக்​கிய நடவடிக்​கைகளை எடுக்க தெற்கு ரயில்வே பொது​மேலா​ளர் ஆர்​.என். சிங் அறி​வுறுத்​தி​ உள்​ளார். கடலுார் மாவட்டம் செம்​மங்​குப்​பத்​தில் பள்ளி வாக​னம் மீது பயணி​கள் ரயில் மோதிய சம்​பவத்​தில் மூன்று மாணவர்​கள் உயி​ரிழந்​தனர். இந்த சம்​பவத்தை தொடர்ந்​து, லெவல் கிராசிங் பகு​தி​களில் பாது​காப்பு அம்​சங்​களை மேம்​படுத்​து​வது, இன்​டர்​லாக்​கிங் தொழில்​நுட்​பத்​துக்கு மாற்​றப்​ப​டாத பகு​தி​களில் உள்ள லெவல் கிராசிங்...
அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி 2-ம் கட்ட பிரச்​சார சுற்​றுப்​பயணத்தை ஜூலை 24-ம் தேதி தொடங்​கி, 36 தொகு​தி​களுக்கு செல்​கிறார். அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, 2026 தேர்​தலை முன்​னிட்டு பல்​வேறு பகு​தி​களில் உள்ள நகர்ப்​புற உள்​ளாட்சி அமைப்​பு​கள் மற்​றும் திமுக அரசை கண்​டித்து அதி​முக ஆர்ப்​பாட்​டங்​களை அறி​வித்து வரு​கிறது. இதனிடையே “மக்​களை காப்​போம்: தமிழகத்தை மீட்​போம்” என்ற தலைப்பில் கடந்த ஜூலை 7-ம் தேதி முதல்​கட்ட பிரச்​சார சுற்றுப்​பயணத்தை பழனி​சாமி கோவை​யில்...
திரு​வண்​ணா​மலை நகராட்​சி, மாநக​ராட்​சி​யாகத் தரம் உயர்த்​தப்​பட்​டதையடுத்து நேற்று மாநக​ராட்சி அலு​வல​கத்​தில் மேயருக்கு தங்​கச் சங்​கி​லி, செங்​கோல் மற்​றும் அங்கி அணிவிக்​கும் விழா நடந்​தது. அமைச்​சர் எ.வ.வேலு தலைமை வகித்​தார். சட்​டப்​பேரவை துணைத் தலை​வர் கு.பிச்​சாண்​டி, எம்​.பி. அண்​ணாதுரை, ஆட்​சி​யர் க.தர்ப்​பக​ராஜ் முன்​னிலை வகித்தனர். துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், மேயர் நிர்​மலா வேல்​மாறனுக்கு தங்​கச் சங்​கி​லி, வெள்ளி செங்​கோல் வழங்​கி, மேயருக்​கான அங்​கியை அணி​வித்​தார். பின்​னர் அவர் பேசி​ய​தாவது: இங்கு...
மின் கணக்​கீட்டு பணி​யாளர்​களுக்​கு, கணக்​கீட்டு கரு​வியை மின்​வாரியமே கொள்​முதல் செய்து தர வேண்​டும் என, தமிழக மின்​ஊழியர் மத்​திய அமைப்பு வலி​யுறுத்​தி​யுள்​ளது. இது குறித்​து, அந்த அமைப்பு வெளி​யிட்ட அறிக்​கை: தமிழகத்​தில் உள்ள 44 மின் வட்​டங்​களில், ஒவ்​வொரு மின் வட்​டத்​துக்​கும் 10 பிரிவு அலு​வல​கங்​களை தேர்வு செய்​து, அதில் பணிபுரி​யும் கணக்​கீட்​டாளர்​கள் தங்​களின் ஆன்ட்​ராய்டு செல்​போன்​களை பயன்படுத்தி மின்​வாரி​யத்​தின் செயலியை பதி​விறக்​கம் செய்து கணக்​கீட்டு பணியை செய்ய மின்​வாரிய...
விருதுநகரில் சங்​கக் கட்​டிடத்தை நிர்​வகிப்​பது யார் என்​பது தொடர்​பாக அரசு ஊழியர் சங்​கத்​தினரிடையே நேற்று மோதல் ஏற்​பட்​டது. இது தொடர்​பாக 44 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர். விருதுநகர் முத்​து​ராமலிங்​கம் தெரு​வில் 3,700 சதுர அடியில் கட்​டிய அரசு ஊழியர் சங்​கக் கட்​டிடம் உள்​ளது. கடந்த 2019-ல் தமிழ்​நாடு அரசு ஊழியர் சங்​கத்​தின் மாநிலப் பொதுச் செய​லா​ளர் அன்​பரசனுக்​கும், விருதுநகர் மாவட்ட நிர்​வாகி​களுக்​கும் இடையே கருத்து வேறு​பாடு ஏற்​பட்​ட​தால்,...
பழநி மலை​யில் மாலிப்​டினம் சுரங்​கம் தோண்​டி​னால், முருக பக்​தர்​களை ஒருங்​கிணைத்து போராட்​டம் நடத்​து​வோம் என்று கொமதேக பொதுச் செய​லா​ளர் ஈஸ்​வரன் எம்​எல்ஏ தெரி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: திண்​டுக்​கல் மாவட்​டம் பழநி மலைப் பகு​தி​யில் மத்​திய புவி​யியல் துறை மூலம் மாலிப்​டினம் உலோகம் இருப்​பது கண்​டு​பிடிக்​கப்​பட்​டுள்​ள​தாக மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது. மாலிப்​டினம் சுரங்​கம் தோண்டி எடுத்​தால் பழநி மலைப் பகு​தி​கள் அனைத்​தும் அழிந்து போகும். பழநி மலை​யின்...
​காது கேளாத, வாய் பேச முடி​யாத மாற்​றுத் திற​னாளி​களுக்கு பதவி உயர்​வில் மொழி திறன் தேர்ச்​சி​யில் இருந்து மின் வாரி​யம் விலக்கு அளித்​துள்​ளது. தமிழகத்​தில் அரசு பணி​யில் உள்​ளவர்​கள் தமிழ் மொழி அறிந்​தவர்​களாக இருக்க வேண்​டும் என்பது விதி. தற்​போது டிஎன்​பிஎஸ்சி மூலம் நடத்​தப்​படும் தேர்​வு​களில் தமிழ் மொழி தாள் இடம்​பெற்​றுள்​ளது. அதில் தேர்ச்சி பெற்றால்​தான் அடுத்​தகட்ட தேர்வு நடை​முறைக்​குச் செல்ல முடி​யும். ஆனால் டிஎன்​பிஎஸ்​சி-க்கு முன் பணி​யில் சேர்ந்​தவர்​களுக்கு...
தேனி வனப் பகு​தி​யில் ஆக.3-ல் ஆடு, மாடு மேய்க்​கும் போராட்​டம் நடத்​தப்​படும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் கூறி​னார். மதுரை மாவட்​டம் விராதனூரில் ‘மேய்ச்​சல் நிலம் எங்​கள் உரிமை’ என்ற பெயரில் ஆடு-​மாடு​கள் மாநாடு நேற்று நடை​பெற்​றது. இதில் சீமான் பேசி​ய​தாவது: ஆடு, மாடு​கள் எங்​களின் செல்​வங்​கள். எங்​கள் வாழ்க்​கை, கலாச்​சா​ரத்​துடன் இணைந்து வாழும் உயி​ரினங்​கள். ஒவ்​வொரு​வர் வீட்​டிலும் உறவினர்​போல ஆடு, மாடு​களை வளர்த்து வருகிறோம்....