பத்திரிகையாளர் சங்கத்தின் பிரநிதிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்தனர். அப்போது அவர்கள் பெற்றுவரும் ஓய்வூதியத்தில் உயர்வு, மருத்துவக் காப்பீடு, வீட்டுவசதி உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வரிடம் முன்வைத்தனர்.
பத்திரிகையாளர்கள் சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்கும் வகையில் பத்திரிகையாளர்கள் தற்போது பெற்று வரும் ஓய்வூதியம் மாதம் ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாகவும் குடும்ப ஓய்வூதியம் ரூ.6ஆயிரத்தில் இருந்து ரூ.7,500ஆகவும் உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சென்னை பத்திரிகையாளர்கள் குடியிருக்க...
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தும் போரால், காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள காஸ் ஏஜென்சி அலுவலகங்களை காஸ் சிலிண்டர் கேட்டு பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் நடத்தி வரும் தீவிர தாக்குதல் காரணமாக,ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகம்...
வடசென்னை பகுதியில் ரூ.50 கோடியில் புதிய திட்டப் பணிகள்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
admin - 0
வடசென்னை பகுதியில் ரூ.50 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்ட பணிகளுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில், வால்டாக்ஸ் சாலை, தண்ணீர்தொட்டி தெருவில் ரூ.179.04 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகள், முதல்வர் திருமண மாளிகை, மாநகராட்சி அச்சகம், முதல்வர் விளையாட்டுத் திடல், ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையம், பெருங்களத்தூரில் ரூ.4.73 கோடி செலவில்...
தமிழக சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், திருவள்ளூர், பல்லாவரத்தில் நேற்று துணை ராணுவப் படையினர், போலீஸாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதியை விரைவில் தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துவிடும்.
ஆகவே, திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் பணி மேற்கொள்ள துணை ராணுவப் படையினர் 90 பேர் உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் சென்னை,...
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஒரு தொகுதியில் மட்டும் தனி சின்னத்தில் போட்டியிடுகிறது.
ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட 26 கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
திமுக சார்பில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையானது கடந்த பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கி நடத்தப்பட்டுவருகிறது. இதில் காங்கிரசுக்கு 28, முஸ்லீம் லீக், மமக-க்கு தலா...
துறைமுகம் – மதுரவாயல் 2 அடுக்கு மேம்பாலப் பணி 2027-ல் நிறைவடையும்: தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி தகவல்
admin - 0
சென்னை துறைமுகம் - மதுரவாயல் 2 அடுக்கு மேம்பாலப் பணிகள் 2027-ம் ஆண்டில் நிறைவடையும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய மண்டல அலுவலர் வீரேந்தர் சாம்பியால் தெரிவித்தார்.
சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே 21 கி.மீ. தூரம் கொண்ட புதிய 4 வழித்தட 2 அடுக்கு மேம்பாலப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மண்டல அலுவலர் வீரேந்தர் சாம்பியால் கூறியதாவது: தொடக்கத்தில் ஒற்றை அடுக்காக...
மலேரியா, டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்: கொசு உற்பத்தியை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன? – நீதிமன்றம் கேள்வி
admin - 0
மலேரியா, டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால், தமிழகம் முழுவதும் கொசு உற்பத்தியைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த விஜயராஜா என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சமீபகாலமாக கொசுக்களின் உற்பத்தி பன்மடங்கு அதிகரித்து வருகிறது.
கொசுக்கடியால் குழந்தைகளும், முதியோரும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்....
மகனை பறிகொடுத்த தாய்க்கு ரூ.3 லட்சம் இழப்பீடு: மனித உரிமை ஆணையத்தின் உத்தரவு அமல்படுத்தப்பட்டதா?
admin - 0
மகனை பறிகொடுத்த தாய்க்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவு அமல்படுத்தப்பட்டதா என்பது குறித்து தமிழக அரசு ஒரு வாரத்தில் விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த ரேவதி என்பவரின் மகனான ராதாகிருஷ்ணன் தனது நண்பர் சுரேஷுடன் கடந்த 2018 ஆக.4 அன்று நண்பரின் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அடையாறு பாலம் அருகே அவரை மடக்கி சோதனையிட்ட போக்குவரத்து...
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பெயரில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை: சென்னை ஆட்சியர் எச்சரிக்கை
admin - 0
சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் பெயர் மற்றும் முகவரியை தவறாகப் பயன்படுத்தி வதந்தி பரப்புபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் பெயரைப் பயன்படுத்தி, நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென தவறான தகவல்கள் பல்வேறு செல்போன் எண்களுக்கு தொடர்ச்சியாக குறுஞ்செய்திகள் மூலம் அனுப்பப்பட்டு வந்தன.
இதையடுத்து எழுப்பப்பட்ட புகார்களை தொடர்ந்து, தவறான தகவல்களை...
அரசு மருத்துவமனைகளில் விறகு, மின் அடுப்புகளை தயாராக வைக்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்
admin - 0
காஸ் தட்டுப்பாடு வரும்பட்சத்தில் அரசு மருத்துவமனைகளில் மின்சார ஸ்டவ், விறகு அடுப்புகளை தயார் நிலையில் வைக்குமாறு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
சைதாப்பேட்டை எம்எல்ஏ தொகுதி வளர்ச்சி நிதி ரூ.1.15 கோடியில், சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள காத்திருப்புக் கூடத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார்.
முதல்வர் மருத்துவக் காப்பீட்டு திட்ட நிதியின் மூலம் இயன்முறை பயிற்றுநர் நியமிக்கப்பட்டு, ரூ.1.50 லட்சத்தில் புதிய இயன்முறை கருவிகளின்...










