Google search engine
வடசென்னை வளர்ச்​சித்​திட்​டத்​தின் கீழ், சிஎம்டிஏ சார்​பில், ஏழு கிணறு பகு​தி​யில ரூ.147 கோடி​யில் கட்​டப்​பட்ட 776 அடுக்​கு​மாடி குடியிருப்புகள் கொண்ட முதல்​வர் நகர்ப்​புற குடி​யிருப்​பு​களை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று திறந்து வைத்​தார். இதுகுறித்​து, தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: வடசென்னை வளர்ச்சி திட்​டத்​தின் ஒரு பகு​தி​யாக, மண்​ணடி, முத்​தி​யால்​பேட்​டை, ஏழுகிணறு, பிராட்வே பிர​காசம் சாலை, வால்​டாக்ஸ் சாலை, ஜட்​காபுரம், கல்​யாணபுரம், வுட்​வொர்ஃப் போன்ற இடங்​களில் நீண்ட கால​மாக சாலை...
திருப்போரூர் கந்​த​சாமி கோயில் மற்​றும் ஆளவந்​தார் அறக்​கட்​டளைக்கு சொந்​த​மான இடங்​களில் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை முழு​மை​யாக அகற்​றி, 3 வாரங்​களில் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டுமென, அறநிலை​யத்​துறை மற்​றும் வரு​வாய் துறைக்கு கெடு விதி்த்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. இதுதொடர்​பாக, வழக்​கறிஞர் பி. ஜெகந்​நாத் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், ‘செங்​கல்​பட்டு மாவட்​டம், திருப்​போரூரில் உள்ள கந்​த​சாமி கோயில் மற்​றும் ஆளவந்​தார் அறக்​கட்​டளைக்கு சொந்​த​மான பல ஆயிரம் கோடி ரூபாய்...
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயமானது தொடர்பாக கேரள உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வரும் நிலையில், அக்குழு பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கைகளின் அடிப்படையில் அமலாக்கத் துறை தனது விசாரணையை தொடங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக, தமிழகம், கேரளா, கர்நாடகாவில் 21 இடங்களில் அமலாக்கத் துறை கடந்த 20-ம் தேதி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் ரூ.1.30 கோடி மதிப்புள்ள அசையா...
புத்தகங்கள் வாழ்க்​கையை உன்​னத​மாக்​கும், தொடர் வாசிப்பு அறிவை அகலப்​படுத்​தும் என்று சென்னை புத்தக காட்சி நிறைவு​விழா​வில் உச்​ச நீ​தி​மன்ற நீதிபதி ஆர்​.ம​காதேவன் கூறி​னார். தென்​னிந்​திய புத்தக விற்​பனை​யாளர் மற்​றும் பதிப்​பாளர் சங்​கம் (பபாசி) சார்​பில் 49-வது சென்னை புத்தக காட்சி ஜனவரி 8-ம் தேதி தொடங்கி நேற்​றுடன் முடிவடைந்​தது. சுமார் ஆயிரம் அரங்​கு​கள் இடம்​பெற்ற இந்த புத்தக காட்​சியை 13 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் பார்​வை​யிட்​டுள்​ளனர். புத்தக காட்சி நிறைவு ​விழா நேற்று...
தமிழகத்​தில் மாநில அளவி​லான பயிற்​சிகளின் போது கற்​றல்​-கற்​பித்​தல் செயல்​பாடு​களில் ஆசிரியர்​களுக்கு ஆய்வக வழி அனுபவக் கற்​றலை வழங்​கும் நோக்​கில், மாநில வள மையம் உரு​வாக்​கப்​படும் என்று பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் அறி​வித்​தார். வேக​மாக வளர்ந்து வரும் புதிய தொழில்​நுட்​பங்​கள் அடிப்​படையி​லான கற்​றல், கற்​பித்​தல் உத்​தி​களை ஆய்வு செய்து வகுப்​பறைக்கு தேவை​யான பரிந்​துரைகளை தரு​வது, மாணவர்​கள் செய்து பார்த்து கற்​ப​தற்​கான ஆய்வக மாதிரி​களை உரு​வாக்​கு​வது ஆகியவை இந்த மையத்​தின்...
மறைந்த முன்​னாள் முதல்​வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354 மறு வரையறை, ஆரம்ப சுகா​தார நிலைய மருத்​து​வர்​களுக்​கான படிகள் ரூ.3 ஆயிரம், நோயாளி​களின் எண்​ணிக்​கைக்கு ஏற்ப புதிய மருத்​துவ பணி​யிடங்​கள் உள்​ளிட்ட கோரிக்​கைகளுக்​காக அரசு மருத்துவர்கள் நீண்​ட​கால​மாக போராடி வரு​கின்​றனர். இந்​நிலை​யில், கடந்த 12-ம் தேதி​யில் இருந்து ஒரு​வாரமாக கோரிக்​கைகளை நிறைவேற்​றக்​கோரி, தமிழகம் முழு​வதும் அரசு மருத்​து​வ​மனை​களில் பணி​யாற்​றும் சுமார் 20 ஆயிரம் மருத்துவர்கள் கோரிக்​கைகள் அடங்​கிய அட்டை...
கருவிழி ஒளி வில​கல் அறுவை சிகிச்​சைக்​கான சர்​வ​தேச மருத்​துவ அமைப்​பில் (ஐஎஸ்​ஆர்​எஸ்) உலகம் முழு​வதும் 90 நாடு​களை சேர்ந்த லட்​சக்​கணக்​கான மருத்​துவ வல்​லுநர்​கள் உறுப்​பினர்​களாக உள்​ளனர். இந்த அமைப்​பின் தலை​வ​ராக டாக்​டர் அகர்​வால்ஸ் மருத்​து​வ​மனை​யின் முது​நிலை மருத்​துவ நிபுணர் சூசன் ஜேக்கப் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ளார். ஐஎஸ்​ஆர்​எஸ் அமைப்​பின் தலைமை பொறுப்​பில் அகர்​வால்ஸ் மருத்​துவ குழு​மத்​தின் தலை​வர் மருத்​து​வர் அமர் அகர்​வால் ஏற்​கெனவே இருந்​துள்​ளார். அவருக்கு அடுத்​த​படி​யாக தற்​போது இந்த கவுர​வம், மருத்​து​வர்...
பு​திய பாரத எழுத்தறிவுத் திட்​டத்​தில் சிறப்​பாக செயல்​பட்ட 342 மையங்​களுக்கு அமைச்​சர் அன்​பில் மகேஸ் சிறப்பு விருதுகள் வழங்கி கவுர​வித்​தார். நாடு முழு​வதும் கல்வி கற்​காத 15 வயதுக்கு மேற்​பட்​ட​வர்​களுக்கு தன்​னார்​வலர்​களை கொண்டு அடிப்​படை எழுத்தறிவு பயிற்​று​ விப்​ப​தற்​காக மத்​திய அரசால் ‘பு​திய பாரத எழுத்தறிவுத் திட்​டம்’, 2022-ம் ஆண்டு அறி​முகம் செய்​யப்​பட்​டது. இந்த திட்​டத்​தின்​கீழ் 2027-ம் ஆண்​டுக்​குள் 5 கோடி பேருக்கு கல்வி கற்​பிக்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. தமிழகத்​தில் பள்​ளி​சாரா...
சென்​னை, போரூரில் உள்ள ஸ்ரீராமச்​சந்​திரா உயர் கல்வி மற்​றும் ஆராய்ச்சி நிறு​வனத்​தில், பிற​விலேயே காது கேளாத குழந்​தைகளுக்கு காக்ளியர் கருவி பொருத்​தும் சிகிச்​சை​யின் 20-வது ஆண்டு நிறைவு விழா நேற்று நடை​பெற்​றது. விழா​வில், சிகிச்சை பெற்ற குழந்​தைகள் ஆடல், பாடல் மற்​றும் பல்​வேறு கலை நிகழ்ச்​சிகள் நடை​பெற்​றன. ராமச்​சந்​தி​ரா​வின் முதல் காக்ளியர் கருவி பொருத்​தும் அறுவை சிகிச்​சையை 3 வயதில் செய்து கொண்ட, முதுகலை பட்​டப்​ படிப்பு படித்து வரும்...
தமிழக பாஜக செய்​தித் தொடர்​பாளர் ஏ.என்​.எஸ்​.பிர​சாத் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: கடந்த ஜனவரி 3-ம் தேதி அரசு ஊழியர் சங்​கங்​களின் போராட்​டத்​தின் போது, தமிழக அரசு அறி​வித்த புதிய அறி​விப்​பு​களில் சத்துணவு ஊழியர்​களின் கோரிக்​கைகள் முற்​றி​லு​மாகப் புறக்​கணிக்​கப்​பட்​டுள்​ளன. அரசுடன் நடத்​திய பேச்​சு​வார்த்​தை​யும் தோல்​வி​யில் முடிந்​த​தால், 71 ஆயிரம் சத்துணவு ஊழியர்​கள் கால​வரையற்ற வேலைநிறுத்​தம் மற்​றும் மறியல் போராட்​டத்​தில் ஈடு​படு​கின்​றனர். 2021 சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது, சத்துணவு ஊழியர்​களுக்கு கால​முறை ஊதி​யம், பணிக்​கொடைத் தொகை ரூ.5...