Google search engine
பத்திரிகையாளர் சங்​கத்​தின் பிரநி​தி​கள் முதல்​வர் மு.க.ஸ்​டா​லினை சென்னை தலை​மைச் செயலகத்​தில் நேற்று சந்​தித்​தனர். அப்​போது அவர்கள் பெற்​று​வரும் ஓய்​வூ​தி​யத்​தில் உயர்​வு, மருத்​து​வக் காப்​பீடு, வீட்​டு​வசதி உள்​ளிட்ட கோரிக்​கைகளை முதல்​வரிடம் முன்​வைத்​தனர். பத்திரிகையாளர்கள் சங்​கத்​தினரின் கோரிக்​கையை ஏற்​கும் வகை​யில் பத்திரிகையாளர்கள் தற்​போது பெற்​று ​வரும் ஓய்​வூ​தி​யம் மாதம் ரூ.12 ஆயிரத்​தில் இருந்து ரூ.15 ஆயிர​மாக​வும் குடும்ப ஓய்​வூ​தி​யம் ரூ.6ஆ​யிரத்​தில் இருந்து ரூ.7,500ஆக​வும் உயர்த்தி முதல்​வர் ஸ்டா​லின் உத்​தர​விட்​டுள்​ளார். மேலும், சென்னை பத்திரிகையாளர்கள் குடி​யிருக்க...
 ஈ​ரான் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் நடத்​தும் போரால், காஸ் சிலிண்டர் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்ள நிலை​யில், சென்​னை​யில் பல்​வேறு இடங்​களில் உள்ள காஸ் ஏஜென்சி அலு​வல​கங்​களை காஸ் சிலிண்டர் கேட்டு பொது​மக்​கள் நேற்று முற்​றுகை​யிட்​டனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்​பட்​டது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்​ரேல் நாடு​கள் நடத்​தி வரும் தீவிர தாக்​குதல் காரணமாக,ஹார்​முஸ் ஜலசந்​தியை ஈரான் மூடியது. இதனால், இந்​தியா உள்பட பல்​வேறு நாடு​களுக்கு கச்சா எண்​ணெய் விநி​யோகம்...
வடசென்னை பகு​தி​யில் ரூ.50 கோடி மதிப்​பீட்​டிலான புதிய திட்ட பணி​களுக்​கு, முதல்​வர் மு.க.ஸ்டா​லின் அடிக்​கல் நாட்​டி​னார். வடசென்னை வளர்ச்​சித் திட்​டத்​தின் கீழ் சென்​னைப் பெருநகர் வளர்ச்​சிக் குழு​மம் சார்​பில், வால்​டாக்ஸ் சாலை, தண்​ணீர்​தொட்டி தெரு​வில் ரூ.179.04 கோடி செல​வில் கட்​டப்​பட்​டுள்ள முதல்​வர் நகர்ப்​புற குடி​யிருப்​பு​கள், முதல்​வர் திருமண மாளி​கை, மாநக​ராட்சி அச்​சகம், முதல்​வர் விளை​யாட்​டுத் திடல், ரத்த சுத்​தி​கரிப்பு நிலை​யம் மற்​றும் மறு​வாழ்வு மையம், பெருங்​களத்​தூரில் ரூ.4.73 கோடி செல​வில்...
தமிழக சட்​டப்​பேரவை தேர்​தல் விரை​வில் நடை​பெறவுள்ள நிலை​யில், திரு​வள்​ளூர், பல்லாவரத்தில் நேற்று துணை ராணுவப் படை​யினர், போலீஸாரின் கொடி அணிவகுப்பு நடை​பெற்​றது. தமிழக சட்​டப்​பேரவை தேர்​தல் தேதியை விரை​வில் தேர்​தல் ஆணை​யம் அறிவிக்க உள்​ளது. தேதி அறிவிக்​கப்​பட்ட உடனேயே தேர்​தல் நடத்தை விதி​முறை​களும் அமலுக்கு வந்​து​விடும். ஆகவே, திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் தேர்​தல் பணி மேற்​கொள்ள துணை ராணுவப் படை​யினர் 90 பேர் உத்​தரபிரதேச மாநிலத்​தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் சென்​னை,...
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஒரு தொகுதியில் மட்டும் தனி சின்னத்தில் போட்டியிடுகிறது. ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட 26 கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. திமுக சார்பில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையானது கடந்த பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கி நடத்தப்பட்டுவருகிறது. இதில் காங்கிரசுக்கு 28, முஸ்லீம் லீக், மமக-க்கு தலா...
சென்னை துறைமுகம் - மதுர​வாயல் 2 அடுக்கு மேம்​பாலப் பணி​கள் 2027-ம் ஆண்​டில் நிறைவடை​யும் என்று தேசிய நெடுஞ்​சாலை ஆணைய மண்டல அலு​வலர் வீரேந்​தர் சாம்​பி​யால் தெரி​வித்​தார். சென்னை துறைமுகம் - மதுர​வாயல் இடையே 21 கி.மீ. தூரம் கொண்ட புதிய 4 வழித்தட 2 அடுக்கு மேம்​பாலப் பணி​கள் முழு​வீச்​சில் நடந்து வரு​கின்​றன. இதுகுறித்து, தேசிய நெடுஞ்​சாலை ஆணை​யத்​தின் மண்டல அலு​வலர் வீரேந்​தர் சாம்​பி​யால் கூறிய​தாவது: தொடக்​கத்​தில் ஒற்றை அடுக்​காக...
மலேரி​யா, டெங்கு காய்ச்​சல் போன்ற நோய்​கள் பரவும் அபா​யம் உள்​ள​தால், தமிழகம் முழு​வதும் கொசு உற்​பத்​தி​யைத் தடுக்க எடுக்​கப்​பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. இது தொடர்​பாக சென்னை கோட்​டூர்​புரத்​தைச் சேர்ந்த விஜய​ராஜா என்​பவர் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட பகு​தி​களில் சமீப​கால​மாக கொசுக்களின் உற்​பத்தி பன்​மடங்கு அதி​கரித்து வரு​கிறது. கொசுக்கடியால் குழந்​தைகளும், முதி​யோ​ரும் பெரிதும் பாதிக்​கப்​பட்டு வரு​கின்​றனர்....
மகனை பறி​கொடுத்த தாய்க்கு ரூ.3 லட்​சம் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணை​யம் பிறப்​பித்த உத்​தரவு அமல்​படுத்​தப்​பட்​டதா என்​பது குறித்து தமிழக அரசு ஒரு வாரத்​தில் விளக்​கமளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. சென்னை ராஜா அண்​ணா​மலைபுரத்​தைச் சேர்ந்த ரேவதி என்​பவரின் மகனான ராதாகிருஷ்ணன் தனது நண்​பர் சுரேஷுடன் கடந்த 2018 ஆக.4 அன்று நண்​பரின் இருசக்கர வாக​னத்​தில் வீடு திரும்​பிக்​கொண்​டிருந்​தார். அடை​யாறு பாலம் அருகே அவரை மடக்கி சோதனை​யிட்ட போக்​கு​வரத்து...
சென்னை மாவட்ட சட்​டப்​பணி​கள் ஆணைக் குழு​வின் பெயர் மற்​றும் முகவரியை தவறாகப் பயன்​படுத்தி வதந்தி பரப்​புபவர்​கள் மீது சட்​டப்​படி கடுமை​யான நடவடிக்கை எடுக்​கப்​படும் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். சென்னை மாவட்ட சட்​டப்​பணி​கள் ஆணைக் குழு​வின் பெயரைப் பயன்​படுத்​தி, நீதி​மன்​றத்​தில் ஆஜராக வேண்​டுமென தவறான தகவல்​கள் பல்​வேறு செல்​போன் எண்​களுக்கு தொடர்ச்​சி​யாக குறுஞ்​செய்​தி​கள் மூலம் அனுப்​பப்​பட்டு வந்​தன. இதையடுத்து எழுப்​பப்​பட்ட புகார்​களை தொடர்ந்​து, தவறான தகவல்​களை...
காஸ் தட்​டுப்​பாடு வரும்​பட்​சத்​தில் அரசு மருத்​து​வ​மனை​களில் மின்​சார ஸ்டவ், விறகு அடுப்​பு​களை தயார் நிலை​யில் வைக்​கு​மாறு சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் அறி​வுறுத்​தி​யுள்​ளார். சைதாப்​பேட்டை எம்​எல்ஏ தொகுதி வளர்ச்சி நிதி ரூ.1.15 கோடி​யில், சைதாப்​பேட்டை அரசு மருத்​து​வ​மனை​யில் அமைக்​கப்​பட்​டுள்ள காத்​திருப்​புக் கூடத்தை சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் நேற்று திறந்து வைத்​தார். முதல்​வர் மருத்​து​வக் காப்​பீட்டு திட்ட நிதி​யின் மூலம் இயன்​முறை பயிற்​றுநர் நியமிக்​கப்​பட்​டு, ரூ.1.50 லட்​சத்​தில் புதிய இயன்​முறை கருவி​களின்...