Google search engine
மருத்​துவக் கல்லூரி​களில் இடம், வேலை வாங்கி தருவதாக சொல்வதை கேட்டு யாரும் ஏமாற வேண்​டாம் என்று சுகா​தாரத் துறை அமைச்சர் மா.சுப்​பிரமணியன் எச்சரித்துள்​ளார். சென்னை - சைதாப்​பேட்டை பெண்கள் மேல்​நிலைப்​பள்​ளி​யில் ‘ஊட்​டச்​சத்து உறுதி செய்’ திட்டம் நிகழ்வு நேற்று நடைபெற்​றது. இதில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்​பிரமணியன் தாய்​மார்​களுக்கு ஊட்டச்​சத்து பெட்​டகங்களை வழங்​கினார். ஒருங்​கிணைந்த குழந்தை வளர்ச்​சித் திட்ட மாவட்ட அலுவலர் கிருஷ்ணவேணி, கவுன்​சிலர்கள் த.மோகன்​கு​மார், சுப்​பிரமணி உள்ளிட்​டோர் உடன் இருந்​தனர். அப்போது,...
தமிழ்ப் பல்கலைக்​கழகத்தில் 40 பேர் பணி நியமனம் தொடர்பாக ஓய்வு​பெற்ற நீதிபதி தலைமை​யில் விசா​ரணைக் குழு அமைத்து ஆளுநர் ஆர்.என்​.ரவி உத்தர​விட்​டுள்​ளார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்​தின் 13-வது துணைவேந்​தராக வி.திரு​வள்​ளுவன் 2021-ம் ஆண்டு டிச.11-ம் தேதி பொறுப்​பேற்​றார். இவரது பணிக்​காலம் டிச. 12-ம் தேதி​யுடன் நிறைவடைய உள்ள நிலை​யில், தமிழக ஆளுநரால் நேற்று முன்​தினம் பணியிடை நீக்கம் செய்​யப்​பட்​டார். 2017-2018-ம் ஆண்டில் பல்கலைக்​கழகத்​தில் துணைவேந்​தராக பாஸ்​கரன் இருந்த​போது, பேராசிரியர்,...
மேட்டூர் அணைக்கு நேற்று முன் தினம் விநாடிக்கு 9,269 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 8,355 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 1,000 கனஅடி, கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் நேற்று 107.91 அடியில் இருந்து 108.32 அடியாகவும், நீர் இருப்பு 75.47 டிஎம்சியில் இருந்து 76.04 டிஎம்சியாகவும் உயர்ந்தது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 19-ம்...
இந்து சமய அறநிலையத் துறை கோயில் பணத்தை சூறை​யாடி வருகிறது. எனவே, அறநிலையத் துறையை கலைத்துவிட வேண்​டும் என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்​னாள் ஐ.ஜி. பொன் மாணிக்க​வேல் கூறினார். சேலம் சுகவனேஸ்​வரர் கோயி​லில் சுவாமி தரிசனம் செய்த பொன்​.​மாணிக்க​வேல், பின்னர் செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: அறநிலையத் துறை அமைச்சர் தொடங்கி அதிகாரிகள் வரை, மக்கள் வரிப் பணத்​திலிருந்து ஆண்டுக்கு ரூ.428 கோடி ஊதியம் வழங்​கப்​படு​கிறது. கோயில் கணக்​குகளை தணிக்கை...
முன்​னாள் முதல்வர் ஜெயலலி​தா​வின் பணத்தை வைத்து சசிகலா, டிடி​வி.​தினகரன் என ஆயிரம் குடும்​பங்கள் கோடீஸ்​வரர்​களாகி​விட்​டனர் என்று அதிமுக முன்​னாள் அமைச்சர் திண்​டுக்கல் சீனிவாசன் கூறினார். நாகை மாவட்ட அதிமுக அலுவல​கத்​தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்​றது. முன்​னாள் அமைச்​சர்கள் திண்​டுக்கல் சீனிவாசன், தங்கமணி, ஓ.எஸ்​.மணியன் உள்ளிட்டோர் பங்கேற்​றனர். கூட்​டத்​தில் திண்​டுக்கல் சீனிவாசன் பேசி​ய​தாவது: முன்​னாள் முதல்வர் ஜெயலலி​தாவுக்கு உதவியாக வந்தவர்​கள்​தான் சசிகலா, டிடி​வி.​தினகரன் உள்ளிட்​டோர். ஆனால், அவர்​கள், அவர்​களைச் சேர்ந்​தவர்கள்...
திருச்​செந்​தூர் கோயி​லின் ‘தெய்​வானை’ உட்பட சில கோயில் யானைகள் வனத்​துறை அனும​தி​யின்றி பயன்​படுத்​தப்​படு​வதாக அமைச்சர் பொன்​முடி தெரி​வித்​துள்ளார். சென்னை தலைமைச் செயல​கத்​தில் வனத்​துறை அமைச்சர் பொன்​முடி கூறிய​தாவது: மாமல்​லபுரம் - புதுச்​சேரி இடையே தேசிய நெடுஞ்​சாலை அமைக்க திட்​ட​மிடப்​பட்டு, அந்த சாலை​யின் நடுவே சில இடங்​களில் வனத்​துறை நிலங்கள் வருவ​தால் சாலை பணிகள் முழுமை பெறாமல் உள்ளன. அப்பகு​தி​களில் வனத்​துறை சார்​பில் தேசிய நெடுஞ்​சாலை ஆணையத்​துக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக...
மதுரை மாவட்டம் நாயக்​கர்​பட்​டி​யில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்​தான் ஜிங்க் நிறு​வனத்​துக்கு தமிழக அரசு சார்​பில் எந்த அனும​தி​யும் வழங்​கப்​பட​வில்லை என்று தமிழக இயற்கை வளங்கள் துறை தெரி​வித்​துள்ளது. ஸ்டெர்​லைட் நிறு​வனத்தை நடத்திய வேதாந்தா குழு​மத்தை சேர்ந்தது இந்துஸ்​தான் ஜிங்க் நிறு​வனம். இந்த நிறு​வனம், டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்​ப​தற்காக மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்​தில் உள்ள அரிட்​டாபட்டி, மீனாட்​சிபுரம், கூலானிப்​பட்டி, செட்​டி​யார்​பட்டி, அ.வல்​லா​ளப்​பட்டி, சண்முகநாத​புரம், நடுவளவு, தெற்கு வளவு,...
லண்டனில் படிப்பை முடித்து​விட்டு தமிழகம் திரும்​பும் அண்ணாமலை பல்வேறு புதிய செயல்​திட்​டங்களை வகுத்​திருப்​ப​தாக​வும், குறிப்பாக 2026 சட்டப்​பேரவை தேர்​தலில் திமுக அரசை வீழ்த்த புது வியூகங்களை அமைத்​திருப்​ப​தாக​வும் தகவல் வெளி​யாகி உள்ளது. ஆக்ஸ்​போர்டு பல்கலைக்​கழகத்​தில் அரசியல் படிப்பை மேற்​கொள்ள ஆக.28-ம் தேதி லண்டன் புறப்​பட்டு சென்​ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, படிப்பை முடித்து​விட்டு, நவ.28-ல் சென்னை திரும்​பு​கிறார். அப்போது சென்னை விமான நிலை​யத்​தில் பாஜக​வினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க...
சென்னை மாநகராட்சி கடப்பாக்கம் ஏரியை ரூ.58 கோடியில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றும் பணி தொடங்கியுள்ளது. சென்னை மாநகரப் பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்துக்கு பிறகு, மாநகர பகுதியில் ஆக்கிரமிப்பில், பராமரிப்பின்றி இருந்த ஏரிகள், குளங்கள் மீட்கப்பட்டு சுற்றுச்சூழல் பூங்காக்களாக மாற்றப்பட்டு வருகின்றன. அவ்வாறு 100-க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் ஏரிகள் மீட்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக மணலி மண்டலம், 16-வது வார்டில் இடம்பெற்றுள்ள 135 ஏக்கர்...
தொழிலாளர் நலத்​துறை​யின், தொழிலக பாது​காப்பு மற்றும் சுகாதார இயக்​ககம் சார்​பில், காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு மாவட்​டங்​களில் இயங்​கும் ஆட்டோமொபைல் உற்பத்தி தொழிற்​சாலைகளில் உயரமான பணியிடங்​களில் பணிபுரி​யும் தொழிலாளர்​களுக்கான பாது​காப்பு மற்றும் பராமரிப்பு வழிமுறைகள் குறித்த விழிப்பு​ணர்வு கூட்டம் ஸ்ரீபெரும்​புதூர், ஹூண்​டாய் நிறு​வனத்​தில் நேற்று நடை பெற்​றது. கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய தொழிலாளர் நலத்​துறை அமைச்சர் சி.வி.கணேசன், ‘‘இந்தியா​வில் உற்பத்தி துறை​யில் பணிபுரி​யும் பெண்​களில் 43 சதவீதம் பேர் தமிழகத்​தைச் சேர்ந்த...