“தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும் மார்ச் 8-ல் திமுக மாநாடு நடைபெறும்” – அமைச்சர் கே.என்.நேரு தகவல்
admin - 0
தேர்தல் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், திட்டமிட்டபடி திருச்சியில் மார்ச் 8-ம் தேதி திமுக மாநில மாநாடு நடைபெறும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ‘ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற தலைப்பில் மார்ச் 8-ம் தேதி திருச்சியில் திமுக மாநில மாநாடு பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது.
திருச்சி சிறுகனூரில் 2021-ல் திமுக மாநாடு நடைபெற்ற இடமே தற்போதைய மாநாட்டுக்கும் தேர்வு செய்யப்பட்டு, அங்கு பந்தல்கால் நடும் நிகழ்வு...
மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கான எந்த முக்கிய திட்டங்களும் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்துக்கான சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இந்த ஆண்டாவது மத்திய பாஜக அரசின் கண்களுக்கு தமிழகம் தெரியும்.
அவர்களது காதுகளில் நமது உரிமைக்குரல் விழும் என்று எதிர்பார்த்திருந்தோம். அந்த எதிர்பார்ப்பை பொய்க்கச் செய்து, ஏமாற்றத்தை வழங்கியிருக்கிறது...
மத்திய பட்ஜெட் குறித்து அரசியல் கட்சிகள் வரவேற்றும் விமர்சித்தும் கருத்து தெரிவித்துள்ளன.
மத்திய அமைச்சர் எல்.முருகன்: ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம், பொதிகை மலையேற்ற சுற்றுலா திட்டம் என பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சி அடைந்த பாரதம் 2047 என்ற லட்சியத்தை அடைவதற்கான உறுதியான பாதையை வகுக்கும் வகையிலும் பட்ஜெட் அமைந்துள்ளது.
தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு: மத்திய பட்ஜெட் தமிழக மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. மாநிலத்தின் அடிப்படை வளர்ச்சிக்கான...
திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு ‘வள்ளலார் நெடுஞ்சாலை’ என பெயர் சூட்டப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வள்ளலார் தினத்தையொட்டி நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: வள்ளலார் பிறந்தநாள் தனிப்பெரும் கருணை நாள்; ஓராண்டு தொடர் கொண்டாட்டமாக வள்ளலார் முப்பெரும் விழா; வள்ளலார் வாழ்ந்த மருதூர் இல்லம் புனரமைப்பு என வள்ளலாரின் புகழைப் போற்றுவதன் தொடர்ச்சியாக, அயல் நாட்டினரிடமும் வள்ளலாரின் உயரிய கருத்துகளை கொண்டு சேர்க்க,...
மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக ரூ.12 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
admin - 0
‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலியாக, மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு தமிழக அரசு ரூ.12 கோடி நிதி அறிவித்து, உடனடியாக பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
நேற்று (பிப்.1) வெளியான ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் 7-ம் பக்கத்தில் ‘மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை கட்டிடம் மூடல் -நோயாளிகளை செங்கல்பட்டுக்கு அனுப்பும் அவலம்’ என்ற தலைப்பில் செய்தி வெளியானது.
‘செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள அரசு வட்டார தலைமை மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை...
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம், மேயர் பிரியா தலைமையில், துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் முன்னிலையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த், “எனது வார்டில் நான் கொடுத்த வாக்குறுதிகளில் 80 சதவீதம் நிறைவேற்றிவிட்டேன். எதிர்க்கட்சி வார்டு என்றும் பாராமல், திட்டங்களை செயல்படுத்த உதவியாக இருந்த முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோருக்கு நன்றி” என்றார்.
சென்னையில் 22,875 மாடுகள் உரிமையாளர்களால்...
அதிகாரத்தில் பங்கு கேட்டு அதிகாரக் கட்சிக்கே ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கும் கட்சி தரப்பில் இம்முறை 30 தொகுதிகள் வரை எதிர்பார்க்கிறார்களாம். இது சாத்தியமாகுமா என்று தெரியாத நிலையில், இன்னொரு கட்டப் பஞ்சாயத்தும் ஓடிக்கொண்டிருக்கிறதாம்.
ஆட்சியில் பங்கு கேட்கும் கட்சி கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளில் 8 தொகுதிகளை இந்த முறை அந்தக் கட்சிக்கு தரமுடியாது என தடாலடியாகச் சொல்லிவிட்ட அதிகாரக் கட்சி, “8 தொகுதிகளையும் மீண்டும் உங்களுக்குக் கொடுத்தால் தேற...
வங்கதேச மீனவர்கள் மீது காட்டுவதைப் போன்று இந்திய மீனவர்கள் மீதும் பிரதமர் இரக்கம் காட்ட வலியுறுத்தல்
admin - 0
பிரதமர் மோடி வங்கதேச மீனவர்கள் மீது காட்டும் இரக்கத்தை இந்திய மீனவர்களின் மீதும் காட்ட வேண்டும் என்று, அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கை: இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு, அவர்களின் மீன் பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு, சிறையில் அடைத்து கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அத்துடன், ரூ.1 கோடி வரை அபராதமும் விதிக்கப்படுகிறது.
இதை...
சோழ, பாண்டிய மன்னர்களை திருமாவளவன் இழிவுபடுத்துவதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சியில் நடக்கும் அனைத்துத் தவறுகளுக்கும் பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகளையே நீண்டகாலமாக குற்றம்சாட்டி வந்த நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், தற்போது 10 நூற்றாண்டுகளுக்குப் பின்னோக்கிச் சென்று மாபெரும் சோழ மற்றும் பாண்டிய மன்னர்களை அவதூறாகப் பேசியிருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மொழியானது...
தியாகிகள் தினத்தை முன்னிட்டு ‘தி இந்து’ நிறுவனர் கஸ்தூரி ரங்க ஐயங்கார் உள்ளிட்ட மறைந்த பத்திரிகையாளர்களுக்கு அஞ்சலி
admin - 0
தியாகிகள் தினத்தை முன்னிட்டு, மறைந்த ‘தி இந்து’ கஸ்தூரி ரங்க ஐயங்கார், ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ராம்நாத் கோயங்கா, ‘தினமலர்’ ராமசுப்பையர், திருவிக, ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது படங்களுக்கு தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட வீரர்கள் வாரிசுகள் நலக் கூட்டமைப்பு சார்பில்மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட வீரர்கள் வாரிசுகள் நலக் கூட்டமைப்பு சார்பில் தியாகிகள் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, சென்னை எழும்பூரில்...
