Google search engine
தேர்தல் தேதி அறி​விப்பு வெளி​யிடப்​பட்​டாலும், திட்​ட​மிட்​டபடி திருச்​சி​யில் மார்ச் 8-ம் தேதி திமுக மாநில மாநாடு நடை​பெறும் என்று அமைச்​சர் கே.என்​.நேரு கூறி​னார். சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி ‘ஸ்​டா​லின் தொடரட்​டும், தமிழ்​நாடு வெல்​லட்​டும்’ என்ற தலைப்​பில் மார்ச் 8-ம் தேதி திருச்​சி​யில் திமுக மாநில மாநாடு பிரம்​மாண்​ட​மான முறை​யில் நடை​பெற உள்​ளது. திருச்சி சிறுக​னூரில் 2021-ல் திமுக மாநாடு நடை​பெற்ற இடமே தற்​போதைய மாநாட்​டுக்​கும் தேர்வு செய்​யப்​பட்​டு, அங்கு பந்​தல்​கால் நடும் நிகழ்வு...
மத்​திய நிதி​நிலை அறிக்​கை​யில் தமிழகத்​துக்​கான எந்த முக்​கிய திட்​டங்​களும் இடம்​பெறாதது ஏமாற்​றம் அளிக்​கிறது என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக நேற்று தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்ட செய்​திக்​ குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​துக்கான சட்​டப்​பேரவை தேர்​தல் நெருங்கி வரும் வேளையில், இந்த ஆண்​டாவது மத்​திய பாஜக அரசின் கண்​களுக்கு தமிழகம் தெரி​யும். அவர்​களது காதுகளில் நமது உரிமைக்​குரல் விழும் என்று எதிர்​பார்த்​திருந்​தோம். அந்த எதிர்​பார்ப்பை பொய்க்​கச் செய்​து, ஏமாற்​றத்தை வழங்கி​யிருக்கிறது...
மத்​திய பட்​ஜெட் குறித்து அரசி​யல் கட்​சிகள் வரவேற்​றும் விமர்​சித்​தும் கருத்து தெரி​வித்​துள்​ளன. மத்​திய அமைச்​சர் எல்​.​முரு​கன்: ஆதிச்​சநல்​லூரில் கலாச்​சார மையம், பொதிகை மலை​யேற்ற சுற்​றுலா திட்​டம் என பட்​ஜெட்​டில் தமிழகத்​துக்கு ஏராள​மான திட்​டங்​கள் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. வளர்ச்சி அடைந்த பாரதம் 2047 என்ற லட்​சி​யத்தை அடைவதற்​கான உறு​தி​யான பாதையை வகுக்​கும் வகை​யிலும் பட்​ஜெட் அமைந்​துள்​ளது. தமிழக நிதி அமைச்​சர் தங்​கம் தென்​னரசு: மத்​திய பட்​ஜெட் தமிழக மக்​களுக்கு பெரும் ஏமாற்​றத்தை அளித்​துள்​ளது. மாநிலத்​தின் அடிப்​படை வளர்ச்​சிக்​கான...
திரு​வொற்​றியூர் நெடுஞ்சாலைக்கு ‘வள்ளலார் நெடுஞ்​சாலை’ என பெயர் சூட்​டப்​படும் என்று தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​துள்​ளார். வள்ளலார் தினத்​தையொட்டி நேற்று தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் சமூக வலை​தளப் பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: வள்ளலார் பிறந்​த​நாள் தனிப்​பெரும் கருணை நாள்; ஓராண்டு தொடர் கொண்​டாட்​ட​மாக வள்ளலார் முப்​பெரும் விழா; வள்ளலார் வாழ்ந்த மருதூர் இல்​லம் புனரமைப்பு என வள்​ளலாரின் புகழைப் போற்​று​வதன் தொடர்ச்​சி​யாக, அயல் நாட்​டினரிட​மும் வள்​ளலாரின் உயரிய கருத்​துகளை கொண்டு சேர்க்க,...
‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலி​யாக, மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு தமிழக அரசு ரூ.12 கோடி நிதி அறி​வித்​து, உடனடி​யாக பணி​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன. நேற்று (பிப்​.1) வெளி​யான ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் 7-ம் பக்​கத்​தில் ‘மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை கட்​டிடம் மூடல் -நோயாளி​களை செங்​கல்​பட்​டுக்கு அனுப்​பும் அவலம்’ என்ற தலைப்​பில் செய்தி வெளி​யானது. ‘செங்​கல்​பட்டு மாவட்​டம் மது​ராந்​தகத்​தில் உள்ள அரசு வட்​டார தலைமை மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை...
​சென்னை மாநக​ராட்சி மாமன்ற கூட்​டம், மேயர் பிரியா தலை​மை​யில், துணை மேயர் மகேஷ்கு​மார், ஆணை​யர் ஜெ.குமரகுருபரன் முன்​னிலை​யில் ரிப்​பன் மாளி​கை​யில் நேற்று நடைபெற்​றது. இக்​கூட்​டத்​தில் பேசிய பாஜக கவுன்​சிலர் உமா ஆனந்த், “எனது வார்​டில் நான் கொடுத்த வாக்​குறு​தி​களில் 80 சதவீதம் நிறைவேற்​றி​விட்​டேன். எதிர்க்​கட்சி வார்டு என்​றும் பாராமல், திட்​டங்​களை செயல்​படுத்த உதவி​யாக இருந்த முதல்​வர் ஸ்டா​லின், அமைச்​சர்​கள் கே.என்​.நேரு, மா.சுப்​பிரமணி​யன் ஆகியோ​ருக்கு நன்றி” என்​றார். சென்​னை​யில் 22,875 மாடுகள் உரிமை​யாளர்​களால்...
அதிகாரத்தில் பங்கு கேட்டு அதிகாரக் கட்சிக்கே ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கும் கட்சி தரப்பில் இம்முறை 30 தொகுதிகள் வரை எதிர்பார்க்கிறார்களாம். இது சாத்தியமாகுமா என்று தெரியாத நிலையில், இன்னொரு கட்டப் பஞ்சாயத்தும் ஓடிக்கொண்டிருக்கிறதாம். ஆட்சியில் பங்கு கேட்கும் கட்சி கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளில் 8 தொகுதிகளை இந்த முறை அந்தக் கட்சிக்கு தரமுடியாது என தடாலடியாகச் சொல்லிவிட்ட அதிகாரக் கட்சி, “8 தொகுதிகளையும் மீண்டும் உங்களுக்குக் கொடுத்தால் தேற...
பிரதமர் மோடி வங்​கதேச மீனவர்கள் மீது காட்​டும் இரக்கத்தை இந்​திய மீனவர்​களின் மீதும் காட்ட வேண்​டும் என்​று, அகில இந்​திய மீனவர் காங்​கிரஸ் தலை​வர் ஆம்​ஸ்ட்​ராங் பெர்​னாண்டோ வலி​யுறுத்​தி​யுள்​ளார். இது தொடர்​பாக, அவர் வெளி​யிட்ட அறிக்​கை: இந்​திய மீனவர்கள் இலங்கை கடற்​படை​யால் தொடர்ந்​து கைது செய்​யப்​பட்​டு, அவர்​களின் மீன்​ பிடி படகு​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டு, சிறை​யில் அடைத்து கடுமை​யான தண்​டனைக்கு உள்​ளாக்​கப்​படு​கின்​றனர். அத்​துடன், ரூ.1 கோடி வரை அபராத​மும் விதிக்​கப்​படு​கிறது. இதை...
சோழ, பாண்டிய மன்னர்களை திருமாவளவன் இழிவுபடுத்துவதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சியில் நடக்கும் அனைத்துத் தவறுகளுக்கும் பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகளையே நீண்டகாலமாக குற்றம்சாட்டி வந்த நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், தற்போது 10 நூற்றாண்டுகளுக்குப் பின்னோக்கிச் சென்று மாபெரும் சோழ மற்றும் பாண்டிய மன்னர்களை அவதூறாகப் பேசியிருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மொழியானது...
தியாகிகள் தினத்தை முன்னிட்டு, மறைந்த ‘தி இந்து’ கஸ்தூரி ரங்க ஐயங்கார், ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ராம்நாத் கோயங்கா, ‘தினமலர்’ ராமசுப்பையர், திருவிக, ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது படங்களுக்கு தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட வீரர்கள் வாரிசுகள் நலக் கூட்டமைப்பு சார்பில்மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட வீரர்கள் வாரிசுகள் நலக் கூட்டமைப்பு சார்பில் தியாகிகள் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை எழும்பூரில்...