பத்மஸ்ரீ விருது பெற்ற குரும்பர் ஓவியர் கிருஷ்ணனின் மகள் வாசுகி மீண்டும் கல்லூரியில் சேர்ந்தார்
admin - 0
நீலகிரி மாவட்டம் கீழ்கோத்த கிரியை சேர்ந்த ஆலு குரும்பர் பழங்குடி ஓவியர் கிருஷ்ணனுக்கு மத்திய அரசு சமீபத்தில் பத்மஸ்ரீ விருது அறிவித்து பெருமைப்படுத்தியது.
இவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உயிரிழந்தார். இவரது மனைவி சுசீலா, மேட்டுப்பாளையத்தில் பாக்குத் தோப்பில் வேலை செய்து, குடும்பத்தை நடத்தி வருகிறார்.
கிருஷ்ணன்-சுசீலா தம்பதியின் மூத்த மகள் வாசுகி, தந்தை இறப்புக்குப் பிறகு கல்விக் கட்டணம் செலுத்த வழியின்றி, படிப்பை நிறுத்தி விட்டார். இதுகுறித்த செய்தி...
தமிழக, காரைக்கால் மீனவர்கள் 9 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த டிசம்பர் 28-ம் தேதி நெடுந்தீவு அருகே பாக் நீரிணை கடற்பகுதியில், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, சந்தியா ஜோசப் என்பவரது விசைப்படகை இலங்கை கடற்படையினர் சுற்றிவளைத்தனர்.
படகில் இருந்த மீனவர்கள் அமோஸ்டின், ஜெனிடாஸ், ஜெபஸ்டின் ஆகியோரைக் கைது செய்த இலங்கை கடற்படையினர், அவர்களை ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில்...
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வருவாய் 2024–25-ம் நிதியாண்டில், கட்டணம் தவிர்த்து இதர பிரிவுகளில் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தினமும் பயணம் செய்கின்றனர். மெட்ரோ ரயில் நிறுவனம் டிக்கெட் கட்டண வருவாய் மட்டுமின்றி, இதர வழிகளிலும் வருவாயை திரட்டும் பணிகளை கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, வாகன நிறுத்தும் இடம் அதிகரிப்பு, மெட்ரோவுக்கு சொந்தமான...
சென்னை சென்ட்ரல் - கூடூர் மார்க்கத்தில் மீஞ்சூர் - பொன்னேரி ரயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதன்படி, சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டிக்கு பிப். 4, 6, 7 ஆகிய தேதிகளில் இரவு 11.20 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், மீஞ்சூர் - கும்மிடிப்பூண்டி இடையே பகுதி ரத்து செய்யப்படும்.
கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரலுக்கு பிப். 5, 7,...
கொலை செய்யப்பட்ட பிஹார் குடும்பத்தினரின் உடல்களை சொந்த ஊர் கொண்டு செல்ல நடவடிக்கை: முதல்வர் உத்தரவு
admin - 0
கொலை செய்யப்பட்ட பிஹார் தம்பதி மற்றும் குழந்தையின் உடல்களை கட்டணமின்றி சொந்த மாநிலத்தில் உறவினர்களிடம் ஒப்படைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
வேலை தேடி சென்னை வந்த, பிஹார் மாநிலம், ஷேக்பூரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் கவுரவ் குமார், மனைவி புனிதா குமாரி, அவர்களின் 2 வயது குழந்தை ஆகியோர் இங்கு அதே மாநிலத்தைச் சேர்ந்த 3 பேரால் கொலை செய்யப்பட்டனர்.
இதையடுத்து கொலையாளிகள் மூவரையும் போலீஸார் கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட மூவரின்...
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக வளாகத்தில், 50 ஏக்கரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
தஞ்சாவூரில் ராஜராஜ சோழனையும், அவரது ஆட்சி நிர்வாகத்தையும் பெருமைப்படுத்தும் வகையில், மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என 2023-ம் ஆண்டு மார்ச் 20-ம் தேதி சட்டப் பேரவையில், முதல்வர்ஸ்டாலின் அறிவித்தார்.
இதையடுத்து தஞ்சாவூரில் அருங்காட்சியகம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. அப்போது பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தமிழ்நாடு...
டாஸ்மாக் பணியாளர்கள் இன்று குடும்பத்துடன் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாக, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் (ஏஐடியுசி) தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன, இந்த கடைகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகுப்பூதிய, ஒப்பந்தப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தொகுப்பூதிய, ஒப்பந்தப் பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்து, அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணி நிறைவுக்கு பிறகு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என கடந்த...
சிறுசேரி சிப்காட் தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் உள்ள நாவலூர் ஏரியில் ரூ.30 கோடி செலவில் தூர்வாரப்பட்டு அமைக்கப்பட்டுள்ள சிப்காட் சுற்றுச்சூழல் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தியாவிலேயே பெரிய பொருளாதார வளர்ச்சி மிக்க மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. தமிழக தொழில் துறையானது அனைவருக்கும் பயனளிக்கும் சமச்சீரான வளர்ச்சியை உறுதிசெய்து, பரவலான முதலீடுகளை ஈர்ப்பதில் தனி கவனம் செலுத்தி வருகிறது.
லட்சம்...
வேலை நிறுத்தம் செய்யும் சங்கங்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளமில்லை: தலைமைச் செயலர் எச்சரிக்கை
admin - 0
ஓய்வூதியத் திட்டம் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக அரசு ஊழியர்கள் சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், பணிக்கு வராவிட்டால் சம்பளமில்லை என தலைமைச் செயலர் நா.முருகானந்தம் அறிவித்துள்ளார்.
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 20 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், சமீபத்தில் தமிழக அரசு ‘டேப்ஸ்’ எனப்படும் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தது.
இதில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில்,...
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு: அசோக்குமார் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு
admin - 0
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட 3 பேர் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு அமலாக்கத் துறை பதில் அளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தபோது போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக,...
