Google search engine
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக வளாகத்தில், 50 ஏக்கரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தஞ்சாவூரில் ராஜராஜ சோழனையும், அவரது ஆட்சி நிர்வாகத்தையும் பெருமைப்படுத்தும் வகையில், மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என 2023-ம் ஆண்டு மார்ச் 20-ம் தேதி சட்டப் பேரவையில், முதல்வர்ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து தஞ்சாவூரில் அருங்காட்சியகம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. அப்போது பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தமிழ்நாடு...
​டாஸ்மாக் பணி​யாளர்​கள் இன்று குடும்​பத்​துடன் தலைமைச் செயல​கத்தை முற்​றுகை​யிட்டு போராட்டம் நடத்​தவுள்​ள​தாக, தமிழ்​நாடு டாஸ்​மாக் பணி​யாளர்​கள் சங்​கம் (ஏஐடி​யுசி) தெரி​வித்​துள்​ளது. தமிழகத்​தில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வரு​கின்​றன, இந்த கடைகளில் 25 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட தொகுப்​பூ​திய, ஒப்​பந்​தப் பணி​யாளர்​கள் பணி​யாற்றி வரு​கின்​றனர். தொகுப்​பூ​திய, ஒப்​பந்​தப் பணி​யாளர்​கள் அனை​வரை​யும் பணி நிரந்​தரம் செய்​து, அவர்​களுக்கு கால​முறை ஊதி​யம் வழங்க வேண்​டும். பணி நிறைவுக்கு பிறகு ஓய்​வூ​தி​யம் வழங்க வேண்​டும் என கடந்த...
சிறுசேரி சிப்காட் தொழில்​நுட்ப பூங்கா வளாகத்​தில் உள்ள நாவலூர் ஏரியில் ரூ.30 கோடி செல​வில் தூர்​வாரப்​பட்டு அமைக்​கப்​பட்​டுள்ள சிப்காட் சுற்​றுச்​சூழல் பூங்​காவை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று திறந்து வைத்​தார். இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: இந்​தி​யா​விலேயே பெரிய பொருளா​தார வளர்ச்​சி மிக்க மாநில​மாக தமிழகம் விளங்கி வரு​கிறது. தமிழக தொழில் துறை​யானது அனை​வருக்​கும் பயனளிக்​கும் சமச்​சீ​ரான வளர்ச்​சியை உறு​தி​செய்​து, பரவலான முதலீடு​களை ஈர்ப்​ப​தில் தனி கவனம் செலுத்தி வரு​கிறது. லட்சம்...
ஓய்வூ​தி​யத் திட்​டம் மற்​றும் பல்​வேறு கோரிக்​கைகள் தொடர்​பாக அரசு ஊழியர்​கள் சங்​கங்​கள் வேலை நிறுத்​தம் அறி​வித்​துள்ள நிலை​யில், பணிக்கு வரா​விட்​டால் சம்​பளமில்லை என தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம் அறி​வித்​துள்​ளார். தமிழக அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​கள் பழைய ஓய்​வூ​தி​யம் உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி 20 ஆண்​டு​களுக்​கும் மேலாக போராட்​டம் நடத்தி வந்த நிலை​யில், சமீபத்​தில் தமிழக அரசு ‘டேப்​ஸ்’ எனப்​படும் உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அறி​வித்​தது. இதில் பல்​வேறு சந்​தேகங்​கள் எழுப்​பப்​பட்ட நிலை​யில்,...
சட்​ட​விரோத பணப்​பரி​மாற்ற வழக்​கில் இருந்து தங்​களை விடுவிக்​கக் கோரி முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி​யின் சகோ​தரர் அசோக்குமார் உள்​ளிட்ட 3 பேர் தாக்​கல் செய்​துள்ள மனுவுக்கு அமலாக்​கத் துறை பதில் அளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. முன்​னாள் அமைச்​ச​ரான செந்​தில் பாலாஜி, கடந்த அதி​முக ஆட்சி காலத்​தில் போக்​கு​வரத்​துத் துறை அமைச்​ச​ராக பதவி வகித்​த​போது போக்​கு​வரத்​துக் கழகத்​தில் வேலை வாங்​கித் தரு​வ​தாகக் கூறி பண மோசடி​யில் ஈடு​பட்​ட​தாக,...
தேர்தல் தேதி அறி​விப்பு வெளி​யிடப்​பட்​டாலும், திட்​ட​மிட்​டபடி திருச்​சி​யில் மார்ச் 8-ம் தேதி திமுக மாநில மாநாடு நடை​பெறும் என்று அமைச்​சர் கே.என்​.நேரு கூறி​னார். சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி ‘ஸ்​டா​லின் தொடரட்​டும், தமிழ்​நாடு வெல்​லட்​டும்’ என்ற தலைப்​பில் மார்ச் 8-ம் தேதி திருச்​சி​யில் திமுக மாநில மாநாடு பிரம்​மாண்​ட​மான முறை​யில் நடை​பெற உள்​ளது. திருச்சி சிறுக​னூரில் 2021-ல் திமுக மாநாடு நடை​பெற்ற இடமே தற்​போதைய மாநாட்​டுக்​கும் தேர்வு செய்​யப்​பட்​டு, அங்கு பந்​தல்​கால் நடும் நிகழ்வு...
மத்​திய நிதி​நிலை அறிக்​கை​யில் தமிழகத்​துக்​கான எந்த முக்​கிய திட்​டங்​களும் இடம்​பெறாதது ஏமாற்​றம் அளிக்​கிறது என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக நேற்று தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்ட செய்​திக்​ குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​துக்கான சட்​டப்​பேரவை தேர்​தல் நெருங்கி வரும் வேளையில், இந்த ஆண்​டாவது மத்​திய பாஜக அரசின் கண்​களுக்கு தமிழகம் தெரி​யும். அவர்​களது காதுகளில் நமது உரிமைக்​குரல் விழும் என்று எதிர்​பார்த்​திருந்​தோம். அந்த எதிர்​பார்ப்பை பொய்க்​கச் செய்​து, ஏமாற்​றத்தை வழங்கி​யிருக்கிறது...
மத்​திய பட்​ஜெட் குறித்து அரசி​யல் கட்​சிகள் வரவேற்​றும் விமர்​சித்​தும் கருத்து தெரி​வித்​துள்​ளன. மத்​திய அமைச்​சர் எல்​.​முரு​கன்: ஆதிச்​சநல்​லூரில் கலாச்​சார மையம், பொதிகை மலை​யேற்ற சுற்​றுலா திட்​டம் என பட்​ஜெட்​டில் தமிழகத்​துக்கு ஏராள​மான திட்​டங்​கள் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. வளர்ச்சி அடைந்த பாரதம் 2047 என்ற லட்​சி​யத்தை அடைவதற்​கான உறு​தி​யான பாதையை வகுக்​கும் வகை​யிலும் பட்​ஜெட் அமைந்​துள்​ளது. தமிழக நிதி அமைச்​சர் தங்​கம் தென்​னரசு: மத்​திய பட்​ஜெட் தமிழக மக்​களுக்கு பெரும் ஏமாற்​றத்தை அளித்​துள்​ளது. மாநிலத்​தின் அடிப்​படை வளர்ச்​சிக்​கான...
திரு​வொற்​றியூர் நெடுஞ்சாலைக்கு ‘வள்ளலார் நெடுஞ்​சாலை’ என பெயர் சூட்​டப்​படும் என்று தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​துள்​ளார். வள்ளலார் தினத்​தையொட்டி நேற்று தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் சமூக வலை​தளப் பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: வள்ளலார் பிறந்​த​நாள் தனிப்​பெரும் கருணை நாள்; ஓராண்டு தொடர் கொண்​டாட்​ட​மாக வள்ளலார் முப்​பெரும் விழா; வள்ளலார் வாழ்ந்த மருதூர் இல்​லம் புனரமைப்பு என வள்​ளலாரின் புகழைப் போற்​று​வதன் தொடர்ச்​சி​யாக, அயல் நாட்​டினரிட​மும் வள்​ளலாரின் உயரிய கருத்​துகளை கொண்டு சேர்க்க,...
‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலி​யாக, மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு தமிழக அரசு ரூ.12 கோடி நிதி அறி​வித்​து, உடனடி​யாக பணி​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன. நேற்று (பிப்​.1) வெளி​யான ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் 7-ம் பக்​கத்​தில் ‘மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை கட்​டிடம் மூடல் -நோயாளி​களை செங்​கல்​பட்​டுக்கு அனுப்​பும் அவலம்’ என்ற தலைப்​பில் செய்தி வெளி​யானது. ‘செங்​கல்​பட்டு மாவட்​டம் மது​ராந்​தகத்​தில் உள்ள அரசு வட்​டார தலைமை மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை...