திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளின் எண்ணிக்கை நேற்று முன்தினம் முடிவு செய்யப்பட்டது. கூட்டணியில் கடைசியாக இணைந்த தேமுதிக-வுக்கு 10 தொதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், திமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு 6 பேர் கொண்ட குழுவை சுதீஷ் தலைமையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார்.
இதில் இளங்கோவன், பார்த்தசாரதி, அழகாபுரம் மோகன்ராஜ், எம்.ஆர்.பன்னீர்செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். விருகம்பாக்கம், ரிஷிவந்தியம், விருதுநகர்,...
கும்பாபிஷேகத்தில் ‘பாஸ்’ இருந்தால் முக்கியத்துவமா? – அறநிலையத் துறைக்கு தமிழக பாஜக கண்டனம்
admin - 0
தமிழக பாஜக ஆன்மிகம், கோயில் மேம்பாட்டு பிரிவு மாநிலச் செயலாளர் எஸ்.வினோத் ராகவேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலூர் பாடலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம், 15 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 24-ம் தேதி நடைபெற்றது.
புராதனக் கோயில் என்பதால், ஒவ்வொரு சீரமைப்பு பணியும் தொல்லியல் துறையின் பரிந்துரைப்படியே நடைபெற வேண்டும் என்பது நீதிமன்ற உத்தரவு. ஆனால், எந்தவித முறையான பரிந்துரையும் இன்றி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திருப்பணிக்காக வாரி வழங்கிய உபயதாரர்களுக்கு அழைப்பிதழ்கூட வழங்கப்படவில்லை....
மெரினா கடற்கரை லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டதால் தள்ளுபடி
admin - 0
மெரினா லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டதால், அந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.
சென்னை, மெரினா கடற்கரையின் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை உள்ள லூப் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2023 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் உத்தரவிட்டது.
இருப்பினும் அப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை எனக்கோரி, ஆனந்த் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், லூப் சாலையை...
சென்னையில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மார்ச் 28-ல் முதல்கட்ட பயிற்சி: மாவட்டத் தேர்தல் அலுவலர் தகவல்
admin - 0
சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு 28-ம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்டத் தேர்தல் அலுவலரும், சென்னை மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் ஏப்.23-ம் தேதி நடைபெற உள்ளது.
சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 978 இடங்களில் மொத்தம் 4,079 வாக்குச்சாவடிகள் உள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய உள்ள 19,594...
கரூரில் விதிகளை மீறி மனிதப் பட்டிகள் அமைக்கப்படுவதாக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் அளித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் அதிமுக எம்.பி. இன்பதுரை, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் புகார் கொடுத்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது: கரூரில் இதற்கு முன்பு 40 பட்டிகள் அமைத்து வைத்திருந்தனர். தற்போது 120-க்கும் அதிகமான மனிதப் பட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஏசி வசதி ஏற்பாடு...
பட்டினப்பாக்கம் பேருந்து பணிமனை அருகே தேர்தல் பறக்கும் படையினர் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டதில், அதில் பயணித்தவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1.50 லட்சம் இருந்ததால், பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரித்தனர்.
இதில், பணத்துடன் பிடிபட்டவர் மியான்மரில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியரான ராஜு என்பதும், ஆர்.ஏ.புரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக பணம் கொண்டு...
பேரவைத் தேர்தலை புறக்கணிக்காமல் வாக்களிக்க முடிவு: பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழு அறிவிப்பு
admin - 0
பரந்தூர் பசுமை வெளி விமான நிலையத் திட்டத்தை எதிர்த்துப் போராடி வரும் கிராம மக்கள், நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலைப் புறக்கணிக்காமல், தங்களுக்கு ஆதரவளிக்கும் கட்சிகளுக்கு வாக்களிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவுள்ள புதிய விமான நிலையத் திட்டத்தைக் கைவிடக் கோரி, மக்கள் நீண்ட காலமாகத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, போராட்டக்...
ரயில் ஓட்டுநர் ஓய்வறைகளில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: சுகாதாரமான உணவு கிடைப்பதில் சிக்கல்
admin - 0
ரயில் ஓட்டுநர் ஓய்வறைகளில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஓட்டுநர்களுக்கு சுகாதாரமான உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, இங்கு முன்னுரிமை அடிப்படையில், காஸ் சிலிண்டர் வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறும் போரால், இந்தியாவில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர்கள் வழங்கப்பட்டாலும், வணிகப் பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், பல இடங்களில் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையே, காஸ்...
சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடி, மே 12-ம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அப்போதைய அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதனால், அவர் தனது அமைச்சர் பதவியை இழந்தார்.
இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி...
காஸ் சிலிண்டர், உரங்கள் தட்டுப்பாடின்றி விநியோகமா? – பிரதமரின் கருத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்
admin - 0
மக்களவையில் காஸ் சிலிண்டர், உரம் தட்டுப்பாடின்றி விநியோகம் செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி பேசியதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கை: நாடு முழுவதும் சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. வீட்டு பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர்கள் கிடைக்காததால் மக்கள் விறகு அடுப்புக்கு மாறி வருகின்றனர்.
அதேபோல், வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர்களின் விநியோகம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளது....










