Google search engine
 மராத்திக்கு எதிராக பேசிய ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய சிவசேனா (உத்தவ் அணி ) தொண்டர்கள் அவரை மன்னிப்பு கேட்க வைத்தனர். மகாராஷ்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில், வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் விரார் ரயில் நிலையம் அருகே ஆட்டோ ஓட்டி வந்தார். அவர் சில நாட்களுக்கு முன் மராத்தி, மகாராஷ்டிரா, மராத்தி தலைவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இதையடுத்து, விரார் ரயில் நிலையம் அருகே நடுரோட்டில், மராத்தி குறித்து...
ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் மாவட்டம் சங்காரியா நகரைச் சேர்ந்தவர் தாராசந்த் அகர்வால் (71). இவருடன் பிறந்தவர்கள் 8 பேர். இதில் 4-வதாக பிறந்த அகர்வால் ஸ்டேட் பாங்க் ஆப் பிகானிர் அன்ட் ஜெய்ப்பூர் வங்கியில் (இப்போது எஸ்பிஐ) துணைப் பொது மேலாளராக பணிபுரிந்துள்ளார். 38 ஆண்டு பணிக் காலத்துக்குப் பிறகு கடந்த 2014-ல் ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு மனைவி உயிரிழந்ததால் அகர்வால் கடும் மன உளைச்சலுக்கு...
கர்​நாட​கா​வில் அடர் வனப்​பகு​தி​யில் உள்ள குகை​யில் ரஷ்​யாவை சேர்ந்த பெண் ஒரு​வர் தனது 2 மகள்​களு​டன் தங்கி இருந்​தார். அவரை அம்​மாநில போலீ​ஸார் பத்​திர​மாக மீட்​டனர். கர்​நாடகா மாநிலம் உத்தர கன்​னடா மாவட்​டம் கோகர்ணா அருகே ராமதீர்த்தா மலை அமைந்​துள்​ளது. அங்​குள்ள வனப்​பகு​தி​யில் சுற்​றுலாப் பயணி​கள் சட்​ட​விரோத​மாக மலை​யேற்​றம், சவாரி ஆகிய​வற்​றில் ஈடு​படு​வ​தாக போலீஸாருக்கு தகவல் கிடைத்​தது. இதையடுத்து கோகர்ணா காவல் நிலைய ஆய்​வாளர் தர் தலை​மையி​லான காவல் துறை​யினர் கடந்த...
ஏர் இந்​தியா விமான விபத்​தில் அதிர்​ஷ்ட​வச​மாக உயிர் தப்​பிய விஸ்​வாஸ் குமார் இன்​னும் அதிர்ச்​சி​யில் இருந்து மீள முடி​யாமல் தவிக்​கிறார். கடந்த ஜூன் 12-ம் தேதி குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் இருந்து லண்​டன் புறப்​பட்ட ஏர் இந்​தியா விமானம் சில விநாடிகளில் கீழே விழுந்து நொறுங்​கியது. இதில் விமானப் பயணி​கள், ஊழியர்​கள் 241 பேர் உயி​ரிழந்​தனர். அத்​துடன் விமானம் மருத்​துவ கல்​லூரி விடுதி மீது விழுந்​த​தில் அங்​கிருந்த முதுகலை மாணவர்​கள்...
ஒடிசா மாநிலம் புவனேஸ்​வரில் உள்ள கல்​லூரி ஒன்​றில், கல்​வி​யியல் துறை் தலை​வ​ராக பணி​யாற்​றிய​வர் சமிரா குமார் சாகு. இவர் மாணவி ஒரு​வருக்கு பாலி​யல் தொந்​தரவு அளித்​த​தாக குற்​றம் சாட்​டப்​பட்​டது. இது குறித்து கல்​லூரி​யின் புகார் குழு​வில் மாணவி புகார் அளித்​தார். இது குறித்து உடனடி நடவடிக்கை எது​வும் எடுக்கப்படவில்லை. இதனால் அவர் நேற்று முன்​தினம் தீக்​குளிக்க முயன்​றார். உடனே அரு​கில் இருந்​தவர்​கள் மாண​வியை காப்​பாற்றி எய்ம்ஸ் மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர். மாணவி புகார்...
நா​டாளு​மன்ற மழைக்​கால கூட்​டத்​தொடர் ஜூலை 21-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21-ம் தேதி வரை நடை​பெற உள்ளது. இந்த கூட்​டத்​தொடரில் எவ்​வாறு செயல்​படு​வது, எழுப்ப வேண்​டிய முக்​கிய பிரச்​சினை​கள் குறித்து விவா​திக்க காங்கிரஸ் எம்​.பி.க்​களு​டன் சோனியா காந்தி நாளை ஆலோசனை நடத்த உள்​ளார். ஜம்மு - காஷ்மீரில் பஹல்​காம் சுற்றுலா தளத்தில் தீவிர​வாதிகள் நடத்திய தாக்​குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்​திய அரசு...
குவாஹாட்டி: அசாம் ஐக்கிய சுதந்திர முன்னணி-இண்டிபென்டன்ட் (உல்பா-ஐ), அசாம் மாநிலத்துக்கு தனி நாடு அந்தஸ்து கோரி வருகிறது. மத்திய அரசால் தடை செய்யப் பட்ட இந்த அமைப்பின் கிழக்கு தலைமையகம் மியான்மர் எல்லையில் உள்ளது. இதன் மீது இந்திய ராணுவம் நேற்று அதிகாலையில் நடத்திய ட்ரோன் தாக்குதலில் தங்கள் அமைப்பைச் சேர்ந்த கமாண்டர் நயன் மெதி உட்பட 19 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் 19 பேர் காயமடைந்ததாகவும் உல்பா-ஐ அமைப்பு நேற்று...
வரும் 2030-ம் ஆண்​டுக்​குள் ஒரு கோடி இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்பு அளிக்க திட்​ட​மிட்​டுள்​ள​தாக பிஹார் முதல்​வர் நிதிஷ் குமார் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்​தில் மேலும் கூறி​யுள்​ள​தாவது: இது​வரை, மாநிலத்​தில் 10 லட்​சம் இளைஞர்​களுக்கு அரசு வேலைகள் வழங்​கப்​பட்​டுள்​ளன, ஒட்​டுமொத்த அளவில் 39 லட்​சம் பேருக்கு வேலை​வாய்ப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது. இதையடுத்​து, 50 லட்​சம் இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்பு வழங்​கும் இலக்கு நிச்​சய​மாக எட்​டப்​படும். இந்த சூழலில், அடுத்த ஐந்து ஆண்​டு​களுக்கு (2025-2030) ஒரு...
சூதாட்ட செயலிக்கு விளம்பரம் செய்தது தொடர்பாக நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா, விஜய் தேவரகொண்டா உட்பட 29 நடிகர், நடிகைகளிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. சட்ட விரோதமான சூதாட்ட செயலிக்கு நடிகர், நடிகைகள், தொலைக்காட்சி தொகுப்பாளர்கள், சமூக வலைதள பிரபலங்கள் விளம்பரம் செய்ததாக தெலங்கானா போலீஸார் ஏற்கெனவே வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன்படி ராணா தக்குபாட்டி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, மன்ச்சு லட்சுமி, பிரனீதா, நிதி அகர்வால்,...
 மகாராஷ்டிர மாநிலம் தானே நகரில் உள்ள ஒரு பள்ளியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மண்டல போக்குவரத்து அதிகாரி ஹேமங்கி பாட்டீல் பேசியதாவது: பள்ளிகளில் மாணவர்களுக்கு தினசரி கல்வியின் ஒரு பகுதியாக சாலைப் பாதுகாப்பு குறித்து கற்பிக்கப்பட வேண்டும். இது விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்க உதவும். மேலும் சாலையை பொறுப்புடன் பயன்படுத்தும் கலாச்சாரத்தை இளம் வயதிலேயே ஏற்படுத்தும். பெற்றோர்களை விட ஆசிரியர்கள் கூறுவதையே குழந்தைகள் அதிகம் கேட்கின்றனர். குழந்தைகள் இளம் வயதிலேயே...