ஆக்ராவில் நடைபெற்ற கட்டாய மதமாற்ற சம்பவங்களில் பெண்களை குறிவைக்க ஒரு கும்பல் ஆன்லைன் கேமிங், டார்க் வெப் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ஆக்ரா காவல் ஆணையர் தீபக் குமார் கூறியதாவது: ஹரியானா, காஷ்மீர், ஆக்ராவில் கடந்த மூன்று மாதங்களாகவே இளம்பெண்களை குறிவைத்து பாகிஸ்தானிலிருந்து ஒரு கும்பல் கட்டாய மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
இதற்காக, அவர்கள் ஆன்லைன் கேம்ஸ், டார்க் வெப் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தியுள்ளது...
மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இதன்படி 124-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது.
அதில், “இந்திய கலாச்சாரத்தின் மிகப் பெரிய ஆதாரம் நமது பண்டிகைகளும், நமது பாரம்பரியங்களும்தான். பல நூற்றாண்டுகளாக ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டிருக்கும் ஞானம் நமது மிகப்பெரிய சொத்தாகும். இந்த ஓலைச்சுவடிகளில் விஞ்ஞானம் உள்ளது, சிகிச்சை முறைகள் உள்ளன. இசை, தத்துவம் உள்ளிட்ட பல்வேறு...
மகாராஷ்டிராவில் மகளிர் உரிமைத் தொகையை 14 ஆயிரம் ஆண்கள் பெற்று வருவது தணிக்கையில் தெரிய வந்துள்ளது மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, மகளிர் உரிமைத் தொகை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இதன்படி 21 முதல் 65வயதுக்குட்பட்ட, ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குட்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 நிதியுதவி வழங்கப்படுகிறது. இதனிடையே, தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. இதற்கு...
உத்தரப் பிரதேச மாநிலம் பாராபங்கியில் அவஸனேஸ்வர் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலியாகினர்.
உ.பி. மாவட்டம் பாரபங்கியில் அவசனேஸ்வர் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் ஷ்ரவன் மாதத்தில் இக்கோயிலில் சிவனுக்கு நீரால் அபிஷேகம் செய்யும் வேண்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். அந்த வகையில் ஜலாபிஷேகத்துக்காக இன்று காலை அதிகளவில் பக்தர்கள் கூடியிருந்தனர்.
அப்போது, சில குரங்குகள் மின்சார வயரை சேதப்படுத்தியுள்ளன. மின் ஒயர் அறுந்து தகர கூடாரத்தின் மீது விழுந்தது....
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இரண்டு மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் 53 வயது காவலாளி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
பால்கர் மாவட்டத்தில் விரார் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இரண்டு மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய அப்பள்ளியின் காவலாளி கைது செய்யப்பட்டார். ஜூன் 15 முதல் 20 வரை நடந்த இச்சம்பவத்தில், 17 மற்றும் 15 வயதுடைய இரு மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம்...
தமிழகத்துக்கு ரூ.2,152 கோடி நிதியை உடனே விடுவிக்க வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு மனு
admin - 0
தமிழகத்துக்கு நிபந்தனையின்றி ரூ.2,152 கோடி நிதியை உடனே விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் பிரதமர் மோடியிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு மனு வழங்கினார். திருச்சிக்கு நேற்று முன்தினம் இரவு வந்த பிரதமர் மோடியிடம், முதல்வர் சார்பில் கோரிக்கை மனுவை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.
அதில் கூறியிருப்பதாவது: சமக்ரா சிக் ஷா திட்டத்தின் கீழ் தமிழக அரசுக்கு மத்திய அரசு நிதி...
பிஹாரில் நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்களையும், இறந்தவர்களையும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதை அனுமதிக்க முடியுமா? என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நேற்று கேள்வி யெழுப்பி உள்ளார். பிஹாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் தொடர்பாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: மிகச்சரியான வாக்காளர் பட்டியல் தயாரிப்பதில் தேர்தல் ஆணையம் வெளிப்படையான அணுகுமுறை யுடன் செயல்படுகிறது.
நியாயமான தேர்தல், வலுவான ஜனநாயகத்தின்...
மகாராஷ்டிராவில் ரூ.89 கோடி மதிப்புள்ள கேட்டமைன் போதைப்பொருளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: ராய்காட் மாவட்டம், ஜைட் கிராமத்தில் உள்ள மருந்து உற்பத்தி பிரிவில் ரகசிய தகவலின் அடிப்படையில் போலீஸார் புதன்கிழமை சோதனை நடத்தினர். மும்பை காவல்துறையின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு உதவியுடன் நடத்தப்பட்ட இந்த சோதனையில் ரூ.88.92 கோடி மதிப்புள்ள கேட்டமைன் பறிமுதல்...
இமாச்சல பிரதேசத்தின் மண்டி மாவட்டம், சர்காகாட் என்ற இடத்தில் இருந்து துர்காபூர் நோக்கி மாநில அரசுப் பேருந்து ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. இதில் ஓட்டுநர், நடத்துநர் உட்பட மொத்தம் 29 பேர் இருந்தனர்.
இந்நிலையில் சர்காகாட் அருகில் இப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சுமார் 100 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 4 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 21 பேர் காயம் அடைந்தனர்.
இவர்கள் பல்வேறு...
கர்நாடகாவில் ஒரு மக்களவை தொகுதியில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததற்கான 100% ஆதாரம் உள்ளது என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நடைபெறுகிறது. இதில் இதுவரை 52 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடகாவில்...






