Google search engine
டெல்​லி​யில் செயற்கை மழை பெய்விக்​கும் திட்​டம் தற்​போதைக்கு தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ள​தாக அறிவிக்கப்பட்டுள்ளது. காற்​றின் தரம் மிக மோசமடைந்​த​தால் டெல்​லி​யில் காற்று மாசை குறைக்க செயற்கை மழை பெய்விக்க கான்​பூர் ஐஐடி​யுடன் இணைந்து செயல்பட டெல்லி அரசு முடிவு செய்​தது. இந்​நிலை​யில் டெல்​லி​யில் நேற்று முன்​தினம் செயற்கை மழையைப் பெய்விக்க விமானம் புறப்​பட்​டது. ஆனால் போது​மான ஈரப்பதம் இல்​லாத​தால் திட்​டம் தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக ஐஐடி கான்​பூர் சார்​பில் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறும்​போது, “6 ஆயிரம்...
கர்​நாடக தொழில் ​துறை அமைச்​சர் எம்​.பி.​பாட்​டீல் நேற்று மைசூரு​வில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கர்நாடகா​வில் பன்​னாட்டு முதலீட்​டாளர்​கள் தொழில் தொடங்​கு​வதற்​கான அனைத்து வசதி​களும் நிறைந்​துள்​ளன. ஆனால் கடந்த சில மாதங்​களாக கர்​நாடகா மீது திட்​ட​மிட்டு எதிர்​மறை பிம்​பங்​கள் கட்​டமைக்​கப்​படு​கின்​றன. இதனால் சில நிறு​வனங்​கள் கர்நாடகா​வில் இருந்து வெளி​யேறு​வ​தாக அறி​வித்​துள்​ளன. அந்த நிறு​வனங்​களு​டன் அரசு சார்​பில் பேச்​சு​வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. மத்​தி​யில் ஆளும் பாஜக அரசு கர்​நாடகா​வுக்கு எதி​ரான மனநிலை​யில் உள்​ளது. பன்​னாட்டு முதலீட்​டாளர்​களு​டன்...
டெல்லி விமான நிலை​யத்​தில் ஏர் இந்​தியா விமானம் அரு​கில் நிறுத்​தப்​பட்ட ஒரு பேருந்து நேற்று தீப்​பற்றி எரிந்​த​தால் பரபரப்பு உரு​வானது. டெல்​லி​யில் இந்​திரா காந்தி சர்​வ​தேச விமான நிலை​யம் உள்​ளது. இங்கு விமான நிறு​வனங்​களுக்கு 'சாட்ஸ் ஏர்​போர்ட் சர்​வீசஸ்' என்ற நிறு​வனம் பேருந்து சேவை வழங்கி வரு​கிறது. இதற்கு சொந்​த​மான ஒரு பேருந்து நேற்று பிற்​பகல் மூன்​றாவது முனை​யத்​தில் ஏர் இந்​தியா விமானத்​துக்கு அரு​கில் நின்​றிருந்​தது. இந்​நிலை​யில் அந்​தப் பேருந்து...
உலகள​வில் பயணி​கள் விமான தயாரிப்​பில் ஏர்​பஸ் மற்​றும் போ​யிங் நிறு​வனங்​கள் ஆதிக்​கம் செலுத்தி வரு​கின்​றன. இந்​தி​யா​விடம் அனைத்து வளங்​கள் இருந்​தா​லும் பல்​வேறு இடையூறுகள் காரண​மாக நீண்ட கால​மாக பயணி​கள் விமான தயாரிப்பை மேற்​கொள்ள முடி​யாத சூழல் நிலவி வந்​தது. ஆனால், இப்​போது, ரஷ்யா மற்​றும் சீனா​வுக்கு அடுத்​த​படி​யாக இந்​தி​யா​வும் உள்​நாட்​டில் பயணி​கள் விமான தயாரிப்பை சாத்​தி​ய​மாக்க உள்​ளது. இதற்​காக, ரஷ்​யா​வைச் சேர்ந்த பொது கூட்டு பங்கு நிறு​வன​மான யுனைடெட் ஏர்​கி​ராப்ட்...
பஞ்​சாப் மாநிலத்​தின் சங்​ரூர் மாவட்​டத்தைச் சேர்ந்​தவர் மன்​பிரீத் சிங் (27). இவர் கனடா​வின் டோரண்​டோ நகரில் உள்ள பிராம்ப்​டனில் கடந்த சில ஆண்​டு​களாக வசித்து வரு​கிறார். அங்கு இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்த அமன்​பிரீத் சய்னி என்ற இளம்​பெண்ணை கடந்த வாரம் கொலை செய்​துள்​ளார். அமன்​பிரீத்​தின் உடலை லிங்​க​னில் உள்ள ஒரு பூங்​கா​வில் இருந்து போலீ​ஸார் கடந்த 21-ம் தேதி கைப்​பற்​றினர். அவரது உடலில் பல இடங்​களில் காயங்​கள் இருந்​ததை போலீ​ஸார்...
டெல்​லி​யில் நேற்று மேக விதைப்பு நடை​முறை மூலம் செயற்கை மழை பெய்விக்​கப்​பட்​டது. கடந்த சில வாரங்​களாக டெல்​லி​யில் காற்று மாசு கணிச​மாக அதி​கரித்து வரு​கிறது. இதைத் தடுக்க முதல்​வர் ரேகா குப்தா தலை​மையி​லான அரசு பல்வேறு நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​கிறது. கட்​டு​மானப் பணி​யின்​போது உரிய விதி​களைப் பின்​பற்ற அறி​வுறுத்​தப்​பட்டு உள்​ளது. வரும் நவம்​பர் 1-ம் தேதி முதல் பிஎஸ்-6 சரக்கு வாக​னங்​கள் மட்​டுமே டெல்​லிக்​குள் அனு​ம​திக்​கப்​படும் என்று அறிவிக்​கப்​பட்டு...
ராஜஸ்​தான் மாநிலம் புஷ்கரில் ஆண்​டு​தோறும் புஷ்கர் ஒட்​டக கண்​காட்சி நடை​பெறும். இங்கு பல்​வேறு ரக ஒட்டகங்கள், எருதுகள், குதிரைகள் போன்​றவை காட்​சிக்கு வைக்​கப்​படும். இந்​நிலை​யில் இந்த ஆண்டு புஷ்கர் கண்​காட்​சி​யில் ரூ.15 கோடி மதிப்​பிலான குதிரை இடம்​பெற்​றுள்​ளது. சண்​டிகரை சேர்ந்த கேரி கில் என்​பவருக்​குச் சொந்​த​மான இந்த இரண்​டரை வயது குதிரை​தான் கண்​காட்​சி​யில் இடம்​ பெற்​று மக்​களை வெகு​வாகக் கவர்ந்​துள்​ளது. இதுகுறித்து குதிரை​யின் உரிமை​யாளர் கேரி கில் கூறிய​தாவது: மார்​வாரி...
 டிஜிட்டல் மாயம் காரணமாக மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் சில நிமிடங்கள் மட்டும் கோடீஸ்வரராக திகழ்ந்தார். மத்தியப் பிரதேசம் தர் மாவட்டம் தாம்நாத் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் வினோத் டாங்ளே. தனியார் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். இவர் சமீபத்தில் தொடங்கிய டி-மேட் கணக்கில் சில நாட்களுக்கு முன்பு ‘ஹர்சில் அக்ரோ லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் 1,312 பங்குகள் வரவு வைக்கப்பட்டன. டிஜிட்டல் மாயம் காரணமாக தவறாக கணக்கிடப்பட்டு வந்த...
 உத்​த​ராகண்ட் மாநிலம், ஜான்​சர் - பவார் பகு​தி​யில் உள்​ளது கந்​தார் கிராமம். பழங்​குடி​யின மக்​கள் வசிக்​கும் இந்த கிராமத்​தில் சமீபத்​தில், பழங்​குடி​யின தலை​வர்​களின் கூட்​டம் நடை​பெற்​றது. அப்​போது திரு​மணம் மற்​றும் குடும்ப நிகழ்ச்​சிகளில் திரு​மண​மான பெண்​கள், தங்க நகைகள் அணிய கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்​டன. அதன்​படி, திரு​மணம் போன்ற நிகழ்ச்​சிகளில் திரு​மண​மான பெண்​கள், தங்​கத்​தில் கம்​மல், மூக்​குத்​தி, தாலி ஆகிய​வற்றை மட்​டும் அணி​ய​லாம். மற்​றபடி ஆடம்​பர​மான தங்க நகைகளை அணிய கூடாது....
சத்​தீஸ்​கர் மாவட்​டத்​தில் மாவோ​யிஸ்ட் ஒழிப்பு பணியை பாது​காப்பு படை​யினர் தீவிர​மாக மேற்​கொண்​டனர். இதன் காரண​மாக பல மாவோ​யிஸ்ட்​கள் என்​க​வுன்ட்ட​ரில் சுட்​டுக் கொல்​லப்​பட்​டனர். இந்த மாதத்​தின் 3-வது வாரத்​தில் மட்​டும் 238 மாவோ​யிஸ்ட்​கள் சரண் அடைந்​தனர். இந்​நிலை​யில் சத்​தீஸ்​கரின் பஸ்​தார் பகு​தி​யில் உள்ள 13 பெண்​கள் உட்பட 21 மாவோ​யிஸ்ட்​கள் போலீ​ஸார் முன்பு ஆயுதங்​களை ஒப்​படைத்து விட்டு நேற்று சரண் அடைந்​தனர். இதுகுறித்து பஸ்​தார் ஐ.ஜி சுந்​தர்​ராஜ் கூறும்​போது, ‘‘மாவோ​யிஸ்ட்​கள் வன்​முறையை கைவிட்​டு,...