ஜம்மு காஷ்மீரின் சோன்மார்க் சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளை சோன்மார்க் மலைப்பாதை இணைக்கிறது. வளைந்து, நெளிந்து செல்லும் இந்த மலைப் பாதையில் காஷ்மீரில் இருந்து லடாக் செல்ல பல மணி நேரமாகும். அதோடு பனிக்காலத்தில் பனிப்பொழிவு, மழைக்காலத்தில் நிலச்சரிவு காரணமாக சோன்மார்க் மலைப் பாதை மூடப்படும்.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண காஷ்மீரின் சோன்மார்க் பகுதியில் கடந்த 2023-ம்...
இந்தியாவில் 7 சதவீதம் பேர் போதைப்பொருட்களை பயன்படுத்துகின்றனர். அவர்களை போதை பழக்கத்தில் இருந்து மீட்க வேண்டும் என்று அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
'போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு' என்ற தலைப்பில் டெல்லியில் நேற்று முன்தினம் சிறப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை வகித்தார். பஞ்சாப், ஹரியானா, இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் வடஇந்தியாவின் யூனியன் பிரதேசங்களில்...
சத்தீஸ்கர் மாநிலத்தில் போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் மாவோயிஸ்ட்கள் 3 பேர் உயிரிழந்தனர். ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் தேசிய பூங்காவுக்கு உட்பட்ட அடர்ந்த வனப் பகுதியில் கடந்த சனிக்கிழமை மாவோயிஸ்ட்கள் மறைத்து வைத்திருந்த வெடிபொருள் வெடித்து சிதறியது. அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎப் படை வீரர் ஒருவர் அதில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவர் பிஜப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
உ.பி.யில் மகா கும்பமேளா இன்று தொடக்கம்: ஏஐ கேமரா, என்எஸ்ஜி கமாண்டோ உட்பட உச்சகட்ட பாதுகாப்பு
admin - 0
உத்தரபிரதேசத்தில் மகா கும்பமேளா இன்று தொடங்க உள்ள நிலையில், ஏஐ கேமரா, என்எஸ்ஜி கமாண்டோ உட்பட உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா இன்று தொடங்குகிறது. 12 ஆண்டுக்குப் பிறகு நடைபெறும் இந்த விழா உலகின் மிகப்பெரிய மத திருவிழா ஆகும். பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 45 கோடி பேர்...
விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பவருக்கான பரிசுத் தொகை ரூ.25,000 ஆக உயர்வு
admin - 0
சாலை விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பவருக்கான பரிசுத் தொகை ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, நடிகர் அனுபம் கேர் உடன் சாலை பாதுகாப்பு குறித்து கலந்துரையாடினார். அப்போது, கட்கரி கூறும்போது, “சாலை விபத்தில் படுகாயமடைந்தவர்களை உடனடியாக (1 மணி நேரத்துக்குள்) மருத்துவமனையில் சேர்ப்பதன் மூலம் அவர்களுடைய உயிரை காப்பற்ற முடியும். இத்தகைய...
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா இன்று தொடங்கியுள்ள நிலையில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட பக்தர்கள் அதிகளவில் திரண்டுள்ளனர்.
12 ஆண்டுக்குப் பிறகு நடைபெறும் மகா கும்பமேளா விழா உலகின் மிகப்பெரிய மத திருவிழா ஆகும். பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 45 கோடி பேர் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று பவுர்ணமி என்பதால் கங்கை, யமுனை, சரஸ்வதி...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு: நெரிசலில் காயமடைந்த பக்தர்களுக்கு சிறப்பு தரிசன ஏற்பாடு
admin - 0
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். நெரிசலில் சிக்கி காயமடைந்த பக்தர்களுக்கு சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து காலையில் நடைபெற்ற தங்க தேர் திருவிழாவில் மலையப்பர் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று அதிகாலை திருப்பாவை சேவை நடைபெற்றது. இதனை தொடர்ந்து மூலவருக்கு வெள்ளிக்கிழமை அபிஷேகம்...
பட்டய கணக்காளர் (சிஏ) மற்றும் ஹவாலா ஆபரேட்டர்கள் இணைந்து ரூ.10,000 கோடி கருப்பு பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது அமலாக்கத் துறை (இடி) சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறும்போது: ஜனவரி 2-ம் தேதி தாணே, மும்பை, வாராணசி பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, டிஜிட்டல் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றை சோதனைக்கு உட்படுத்தியதில் சிஏ மற்றும் ஹவாலா ஏஜெண்டுகள் கூட்டணி அமைத்து கருப்பு...
திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு தேவஸ்தானம் சார்பில் தலா ரூ.25 லட்சம், வேலை
admin - 0
திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பும் வழங்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பிஆர். நாயுடு அறிவித்துள்ளார்.
திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பிஆர். நாயுடு தலைமையில் அவசர அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது.
இதில், சமீபத்தில் திருப்பதியில் நடைபெற்ற கூட்ட...
எனக்கும், சீனப் பிரதமருக்கும் இடையே ஒரு சிறப்புப் பிணைப்பு இருக்கிறது: மனம் திறந்த பிரதமர் மோடி
admin - 0
தவறுகள் தவிர்க்க முடியாதவை. ஏனென்றால் நானும் ஒரு மனிதன்தானே. கடவுள் கிடையாது என்று பிரதமர் நரேந்திர மோடி பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
ஜெரோதா இணை நிறுவனர் நிகில் காமத் தொகுத்து வழங்கும் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். பீப்பிள் பை டபிள்யூடிஎஃப் (People by WTF) என்ற தலைப்பில் நிகில் காமத் பாட்காஸ்ட் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்....










