நீதியின் அடையாளம் செங்கோலை ஊன்றுகோலாக்கிய காங்கிரஸ்: மத்திய அமைச்சர் புபேந்தர் யாதவ் கிண்டல்
admin - 0
‘‘நீதியின் அடையாளமாக கருதப்பட்ட செங்கோலை, ஊன்று கோலாக காட்சிக்கு வைத்திருந்தது காங்கிரஸ்’’ என மாநிலங்களவையில் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் புபேந்தர் யாதவ் கிண்டல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சுதந்திரத்தின்போது ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக வழங்கப்பட்ட செங்கோல் அருங்காட்சியகம் ஒன்றில் ஊன்று கோல் என குறிப்பிடப்பட்டு காட்சி பொருளாக வைக்கப்பட்டிருந்தது. அந்த செங்கோல் தற்போது நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தின் மையப் பகுதியில் நீதியின் அடையாளமாக வைக்கப்பட்டுள்ளது....
டெல்லி மருத்துவமனைகளில் அனைத்து முதியோருக்கும் இலவச சிகிச்சை: அர்விந்த் கேஜ்ரிவால் அறிவிப்பு
admin - 0
ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சிக்கு வந்தபிறகு முதியோர் அனைவருக்கும் டெல்லி மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை வழங்கப்படும் என அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லி சட்டப் பேரவைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கு முன்னரே ஆம் ஆத்மி வேட்பாளர்களை அறிவித்து வருவதோடு, நேற்று முதியோர்களுக்கான புதிய அறிவிப்பை ஒன்றையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று கூறியதாவது:
60 வயதுக்கு...
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை, சிவசேனா (உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் சந்தித்தார். அப்போது வீர சாவர்க்கருக்கு பாரத் ரத்னா விருது வழங்கும் கோரிக்கையை வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
மகாராஷ்டிர தேர்தலில் சிவசேனா (உத்தவ் உத்தவ் அணி) தோல்வியடைந்ததற்கு இந்துத்துவா கொள்கைகளை கைவிட்டதே முக்கிய காரணம் என கூறப்பட்டது. இந்நிலையில் சிவசேனா நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சிவசேனா (உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே, மாநில...
நெல்லூரில் 6 வயது சிறுவனுக்கு ஜிகா வைரஸ் தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜிகா வைரஸ் தொற்று என்பது கொசுக்களால் ஏற்படும் தொற்றாகும். இதனால் மூளை மற்றும் கண் பார்வை பாதிக்கப்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். கர்ப்பினி பெண்ணுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால், பிறக்கும் குழந்தைக்கு தலை மிக சிறியதாகவும், கண் பார்வைத்திறன் குன்றியும் பிறக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம், மர்ரிபாடு மண்டலம்,...
உ.பி.யின் சம்பலில் ஜாமா மசூ தியை சுற்றியுள்ள முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் மின்சார திருட்டு, நில ஆக்கிரமிப்பு போன்ற புகார்களின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது, தீபா சராய் பகுதியில் 46 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த சிவன் கோயில் திறக்கப்பட்டு அதில் வழிபாடுகள் மீண்டும் தொடங்கப்பட்டன.
முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஹயாத் நகர் பகுதியிலும் ஒருகோயில் அடையாளம் காணப்பட்டுள்ளது. ராதா கிருஷ்ணா, அனுமர் சிலைகள் கொண்ட இக்கோயிலும் சுத்தம்...
மும்பையில் சுற்றுலா படகு மீது கடற்படை படகு மோதி 13 பயணிகள் பரிதாப உயிரிழப்பு: 101 பேர் பத்திரமாக மீட்பு
admin - 0
மும்பை கடற்கரை பகுதியில் சுற்றுலா படகு மீது, கடற்படையின் அதிவேக ரோந்து படகு ஒன்று மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர். 101 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அங்கு தேடும் பணியில் கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
மும்பை அருகேயுள்ள எலிபென்டா தீவில் புகழ்பெற்ற கர்பரி குகைகள் உள்ளன. இதை பார்வையிட சுற்றுலாப் பயணிகள் மும்பை கடற்கரையிலிருந்து படகுகளில் செல்வது வழக்கம். சுற்றுலா பயணிகள் 100-க்கும் மேற்பட்டோருடன், நீல்கமல் என்ற...
அம்பேத்கர் குறித்த அமித் ஷா பேச்சுக்கு கண்டனம்: எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் தள்ளிவைப்பு
admin - 0
சட்ட மேதை அம்பேத்கரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவமதித்ததாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து 2 அவைகளும் நாள் முழுவதும் தள்ளிவைக்கப்பட்டன. அம்பேத்கர் குறித்து அமைச்சர் அமித் ஷா பேசியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன.
அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மாநிலங்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் முடிவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’...
பஞ்சாபில் இன்று ரயில் மறியல் போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், வேளாண் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், வழக்குகள் வாபஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாபில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக பஞ்சாபில் இன்று (டிச. 18) நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ரயில் மறியல் போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகளின் தலைவர்...
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் பங்கேற்க நேற்று காங்கிரஸ் பொதுச் செயலரும், எம்.பி.யுமான பிரியங்கா காந்தி வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வாசகங்கள் அடங்கிய கைப்பையுடன் வந்தார்.
பிரியங்கா காந்தி, காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் போராட்டங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். பாலஸ்தீனத்துக்கு ஆதரவுக்கு தெரிவிக்கும் வகையில் அவர் கருத்துகளை வெளியிட்டு வருகிறார். இதனிடையே, நாடாளுமன்றத்தில் பிரியங்கா காந்தியின் பேச்சும் நடவடிக்கைகளும் பெரும் கவனம் பெற்று வருகின்றன. மக்களவை...
முதியவரைக் காக்க வைத்ததால் ஊழியர்களுக்கு நொய்டா ஆணைய தலைமைச் செயல் அதிகாரி நூதன தண்டனையை வழங்கிய செய்தி சமூக வலைதளங்களில் வைரலானது.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் நொய்டா மேம்பாட்டு ஆணைய (நொய்டா அத்தாரிட்டி) அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் ஏராளமான ஊழியர்கழ் பணியாற்றி வருகின்றனர். நொய்டா மேம்பாட்டு ஆணைய தலைமைச் செயல் அதிகாரியாக டாக்டர் எம்.லோகேஷ் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அண்மையில், நொய்டாவிலுள்ள ஓக்லா தொழில்துறை வளர்ச்சி ஆணைய அலுவலகத்துக்கு முதியவர்...










