மகாராஷ்டிராவில் கடந்த 2014ல் கல்வி, வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்க அவசர சட்டம் பிறப் பிக்கப்பட்டது. இந்த உத்தரவு மத அடிப்படையிலானது என மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
உச்ச நீதிமன்றம் விதித்துள்ள 50 % இடஒதுக்கீடு உச்ச வரம்பை மீறுவதாக உள்ளது என வாதிடப்பட்டது. இந்த வழக்கில் அவசர சட்டத்தை அமல்படுத்துவதை மும்பை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் 2014 தேர்தலுக்கு...
நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குழந்தைத்தனமாக நடந்து கொள்கிறார். இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் அவர் தொடர்பு வைத்துள்ளார். அத்துடன் மாவோயிஸ்ட்டுகள், தீவிரவாதிகளைச் சந்தித்துப் பேசுகிறார்.
இந்த நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் மிக ஆபத்தான மனிதராக ராகுல் காந்தி இருக்கிறார். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நக்சலைட்டுகள், தீவிரவாதிகள், ஜார்ஜ் சோரஸ் போன்றவர்களை ராகுல் காந்தி...
அயோத்தி ராமர் கோயிலால் பொருளாதார மறுமலர்ச்சி: 2024-ல் 11 கோடியாக உயர்ந்த பக்தர்கள் எண்ணிக்கை
admin - 0
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு அந்நகரில் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சி குறித்து லக்னோவின் இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்) விரிவான ஆய்வு நடத்தியது. ‘பொருளாதார மறுமலர்ச்சி’ என்ற தலைப்பிலான இதன் ஆய்வறிக்கை சமீபத்தில் வெளியாகியுள்ளது.
இதன்படி, ராமர் கோயில் திறப்பதற்கு முன் அயோத்திக்கு ஆண்டுக்கு சராசரியாக 1.7 லட்சம் பேர் வருகை தந்தனர். இது, 2024-ம் ஆண்டு ராமர் கோயில் பிராண பிரதிஷ்டைக்கு பிறகு, முதல் 6 மாதங்களிலேயே...
சிவசேனா (உத்தவ்) கட்சியின் அதிகாரப்பூர்வ ‘சாம்னா' நாளிதழில் ஒரு தலையங்கம் வெளியாகியுள்ளது.
அதில், “காங்கிரஸ் மற்றும் தேசத்தின் உச்ச தலைவராக மகாத்மா காந்தி இருந்தார். காந்திக்கு ஒரு உள் குரல் இருந்தது. அது, அவரது முடிவுகளை வழி நடத்தியது. ஆன்மீகம், தேச பக்தி மற்றும் தன்னலமின்மையால் அம்முடிவுகள் கூர்மைப்படுத்தப்பட்டன.
இன்று, காங்கிரஸுக்குள் பல ‘உள் குரல்கள்’ உருவாகி குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. இது நாட்டுக்கு ஆரோக்கியமானது அல்ல. தமிழகம் உட்பட 5 மாநிலங்களில்...
திருப்பதி அருகே உள்ள மதனபல்லியை சேர்ந்த 7 வயது சிறுமி, கடந்த 16-ம் தேதி காணாமல் போனார். இதையடுத்து அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிய பின்னர் போலீஸில் புகார் கொடுத்தனர்.
மதனபல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். வீட்டின் அருகே இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானவற்றை கொண்டு ஆய்வு செய்த போது சிறுமியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் குலவர்தன் என்பவர், சிறுமியை அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதைத்...
பெங்களூரு மாநகர காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருடன் இணைந்து அம்ருதஹள்ளி, ஹெப்பகுடி,ஜே.பி.நகர், கே.ஜி.ஹள்ளி உள்ளிட்ட இடங்களில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதில் 9.46 கிலோ ஹைட்ரோ கஞ்சா, 34 கிலோ கஞ்சா, 5.67 கிலோ எம்டிஎம்ஏ, 131 கிராம் கோகைன், 29 எல்எஸ்டி மாத்திரைகள், 27 கிராம் எல்எஸ்டி கட்டிகள், 462...
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2026-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் நாட்டில் நக்சல் தீவிரவாதத்தை முற்றிலும் அகற்ற இலக்கு நிர்ணயித்துள்ளார். இதில் குறிப்பிடத்தக்க வெற்றியை அரசு பெற்றுள்ளது.
கடந்த 2019-ல் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் 61 மாவட்டங்களில் நக்சலைட் வன்முறை பதிவானது. இது இந்த ஆண்டு ஜனவரியில் சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்டில் 5 மாவட்டங்களாக சுருங்கியுள்ளது.
சரண் அடையும் நக்சலைட்களுக்கான மறுவாழ்வு கொள்கையும் பலன் அளித்து வருவதால்...
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்
admin - 0
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார். டெல்லி பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது.
இந்த மாநாட்டின் 2-வது நாளான நேற்று பல்வேறு கருத்தரங்குகள் நடைபெற்றன. மாநாடு தொடர்பாக பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்.
குறிப்பாக செயற்கை நுண்ணறிவு...
இந்தியாவில் உலகின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தரவு மையத்தை அமைக்க டிசிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற ஏஐ தாக்க உச்சி மாநாட்டில் இதுகுறித்த அறிவிப்பை டிசிஎஸ் வெளியிட்டது.
வணிக நிறுவனங்கள், அரசு அமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்துக்கு பெருமளவில் மாறி வருவதால் வலுவான தரவு உள்கட்டமைப்பு இப்போது மிகவும் அவசியமானதாக மாறி உள்ளது.
தற்போது இந்தியாவின் தரவு மையத் திறன் 1.5 ஜிகா வாட்டாக உள்ளது....
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரின் துவாரகபுரி பகுதியிலுள்ள ஒரு குடியிருப்பில் துர்நாற்றம் வீசுவதாக கடந்த ஜன. 13-ம் தேதி போலீஸாருக்கு புகார் வந்தது.
போலீஸார் வந்து கதவை உடைத்துப் பார்த்தபோது அங்கு 24 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. போலீஸார் விசாரணை நடத்தியபோது அந்த வீடு துவாரகபுரியைச் சேர்ந்த எம்பிஏ மாணவர் பியூஷ் தம்னோட்டியா என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது.
தலைமறைவாக இருந்த பியூஷை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து...










