ஒளி சினிமாவின் ஆன்மா எனில், நிழல் அதன் நிசப்தமான குரல். அது வெறும் இருளல்ல. ஒரு காட்சியின் உணர்ச்சி, மனநிலை, தத்துவம், கூடவே கதையின் மறைமுகமான அடுக்குகளையும் வெளிப்படுத்தும் சக்தி கொண்டது. ஒளி கண்களுக்குத் தெரியலாம், ஆனால் நிழல் நேராக மனதுடன் பேசுகிறது. சினிமா வரலாற்றில் பல ஒளிப்பதிவாளர்கள் நிழலைப் பயன்படுத்தி காட்சிகளை மட்டும் அழகுபடுத்தாமல், கதையின் உள் உலகையும் செதுக்கியுள்ளனர்.
கே.எஸ். பிரசாத் – மர்மத்தைச் செதுக்கிய நிழல்கள்: ஆரம்பகால...
“தற்போதைய சர்ச்சையை சட்டத்தின்படி எதிர்கொள்வேன். ஜாய் கிரிசில்டா எதிர்பார்ப்பது போல்நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண ஒப்புக்கொள்ள மாட்டேன்” என்று சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ஜாய் கிரிசில்டா எழுப்பியுள்ள தற்போதைய சர்ச்சையை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்க்குமாறு பல நபர்கள் என்னை அணுகி வருகின்றனர்.
நீதித்துறை செயல்பாட்டில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது என்பதையும், சட்டத்தின்படி உண்மை நிலைநாட்டப்படும், இந்த சர்ச்சையைத்...
பி.ஆர்.சோப்ராவின் 1988-ம் ஆண்டு தொலைக்காட்சி தொடரான மகாபாரத்தில் கர்ணன் கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமான நடிகர் பங்கஜ் தீர் நேற்று காலமானார். அவருக்கு வயது 68.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பங்கஜ் தீர், கடந்த சில மாதங்களாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். சந்திரகாந்தா, பதோ பாகு, கானூன் போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் சோல்ஜர், ஆண்டாஸ், பாட்ஷா உள்ளிட்ட பல்வேறு திரைப் படங்களிலும் அவர்...
இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷனும் ஜப்பான் தூதரகமும் இணைந்து சென்னையில் ஜப்பான் திரைப்பட விழாவை இன்று (அக்.15) முதல் அக்.17-ம் தேதி வரை நடத்துகிறது. சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள கோத்தே இன்ஸ்டிடியூட்டில் இப்பட விழா நடக்கிறது.
அக்.15 அன்று மாலை 6 மணிக்கு அண்ட் சோ த ேபட்டன் இஸ் பாஸ்டு (And So the Baton Is Passed) படம் திரையிடப்படுகிறது. அக்.16-ல் மாலை 5 மணிக்கு,...
கன்னட நடிகையான ருக்மணி வசந்த், தமிழ், தெலுங்கு மொழிகளிலும் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள ‘காந்தாரா சாப்டர்-1’ படம் பான் இந்தியா முறையில் 5 மொழிகளில் வெளியானது. இதில் இளவரசியாக நடித்த அவருடைய நடிப்பு பாராட்டப்பட்டு வருகிறது. இதையடுத்து அவரை புதிய ‘நேஷனல் கிரஷ்’ என்று சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.
இதுபற்றி அவர் கூறும்போது, ``பலர் என்னை அப்படி அழைக்கிறார்கள். அது நன்றாக இருக்கிறது. ஆனால் அதைப் பற்றி...
பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம், ‘டியூட்’. சரத்குமார், ரோகிணி, ‘பரிதாபங்கள்’ டேவிட் உள்பட பலர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ளார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். சாய் அபயங்கர் இசை அமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு அக். 17-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து...
நடிகர் அஜித் குமார் இப்போது சர்வதேச கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். இதற்காக ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்துள்ளார்.இந்த அணி, உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறது. துபாய், இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் நடைபெற்ற ரேஸ்களில் பங்கேற்ற அவர் அணி,பார்சிலோனாவில் நடந்த கார் பந்தயத்தில் கடந்த வாரம் பங்கேற்றது. அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அஜித்குமாரை பார்க்க ரசிகர்கள் கூடினர். அதில் சிலர்,...
தீபாவளி பண்டிகை என்றாலே நினைவுக்கு வருவதில் பட்டாசு தவிர்த்து மற்றோரு முக்கியமான விஷயம் தீபாவளி ரிலீஸ் திரைப்படங்கள். சாதாரண நாட்களில் ரிலீஸ் செய்யப்படும் படங்களை விட தீபாவளியில் ரிலீஸ் ஆகும் படங்களுக்கு ஆடியன்ஸ் மத்தியில் மவுசு அதிகம். காரணம் அதிகாலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்துவிட்டு குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்று புதிய படம் பார்த்தால்தான் சிலருக்கு தீபாவளியே நிறைவடையும். அதிலும் பெரிய ஸ்டார்களின் படம் என்றால்...
செல்வராகவன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் கதையின் நாயகனாக நடிக்கும் படம், ‘மெண்டல் மனதில்’. இதில் நாயகியாக மாதுரி ஜெயின் நடிக்கிறார். அருண் ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தை பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் ஜி.வி.பிரகாஷ் தயாரிக்கிறார்.
ரொமான்ஸ் படமாக உருவாகி வரும் இதன் பாடல்கள் குறித்து, ஜி.வி.பிரகாஷ் கூறும்போது, “இந்தப் படம் என் மனதுக்கு நெருக்கமான படம். இதில் இடம்பெறும் பாடல்கள் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ரசிகர்களுக்கும் இது புதிய...
நடிகர் சூர்யா நடித்து, கடந்த 2014-ம் ஆண்டு வெளியான படம், ‘அஞ்சான்’. லிங்குசாமி இயக்கியிருந்த இந்தப் படத்தைத் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
இதில் சமந்தா நாயகியாக நடித்திருந்தார். வித்யூத் ஜாம்வால், மனோஜ் பாஜ்பாய், சூரி, முரளி சர்மா உள்பட பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் ஹிட்டாகி இருந்தன. ஆனால், படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி...










