Google search engine
‘த கேரளா ஸ்டோரி 2’ படத்​தின் டீஸர் மற்​றும் டிரெய்லருக்கு தடை விதித்து கேரள உயர்​நீ​தி​மன்​றம் உத்தர​விட்​டுள்​ளது. ‘த கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட்’ என்ற படத்தை கமக்யா நாராயண் சிங் இயக்கி உள்​ளார். பிப்​.27-ல் வெளி​யாக இருக்​கும் இப்​படத்​தில் உல்கா குப்​தா, அதிதி பாடி​யா, ஐஸ்​வர்யா ஓஜா முதன்மை வேடங்​களில் நடித்​துள்​ளனர். இப்​படத்​தின் டிரெய்​லர் சமீபத்​தில் வெளி​யானது. அதில் சில பெண்​கள் சேர்ந்து இளம்​பெண் ஒரு​வரைக் கட்டாயப்படுத்தி...
திரையுலகில் இருப்பவர்கள் தான் தடைகள் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அதை தாண்டி வரவும் நான் தயார் என்று ‘தாய் கிழவி’ விழாவில் சிவகார்த்திகேயன் பேசினார். சிவகார்த்திகேயன் மற்றும் சுதன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார், சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிப்ரவரி 27-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர்...
‘ஜமா’ இயக்குநர் பாரி இளவழகனின் அடுத்த பட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ‘ஜமா’ படத்தினை இயக்கி, நாயகனாக நடித்தவர் பாரி இளவழகன். இப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து மில்லியன் டாலர் நிறுவனம் தயாரிக்கும் படத்தினை இயக்கி, நாயகனாக நடித்து வந்தார் பாரி இளவழகன். இதன் படப்பிடிப்பு ஒரே கட்டமாக முடிக்கப்பட்டுள்ளது. மில்லியன் டாலர் நிறுவனம் தயாரிக்கும் 7-வது படமாக இது...
மணிமேகலை, ராம்ஜி, நாடக நடிகர் காளிதாஸ் உள்பட பலர் நடித்துள்ள குறும்படம், ‘லிட்டில் விங்ஸ்’. தேசிய விருது பெற்ற இப்படத்தை நவீன் இயக்கியுள்ளார். மருது ஒளிப்பதிவு செய்துள்ளார். பல சர்வதேச திரைப்பட விழாக்களில் விருது பெற்றுள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்குகிறது. இதன் செய்தியாளர்கள் சந்திப்பில், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இயக்குநர் ராஜு முருகன், படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி மற்றும் குழுவினர் கலந்து கொண்டனர். எஸ்.ஆர்.பிரபு பேசும்போது,...
‘ஜமா’ மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன், அடுத்து இயக்கி, நடிக்கும் படத்தை நியோ கேசில் கிரியேஷன்ஸின் சத்யா கரிகாலன், மில்லியன் டாலர் ஸ்டூடியோஸின் யுவராஜ் கணேசன் இணைந்து தயாரித்துள்ளனர். ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். நடிகை ரோஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுநீள பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால சரவணன், ரேய்ச்சல் ரெபேகா, முத்துக்குமார், முனீஷ்காந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். பிப்.27-ம் தேதி வெளியாகும் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நடிகர் சிவகார்த்திகேயன் பேசும்போது, “சினிமாவில் சின்ன கதாபாத்திரத்தில் ஆரம்பித்து மக்கள் என்னை கதாநாயகனாக...
நான் தியாகராஜன் குமாரராஜாவின் ரசிகன் என்று ராஜ் பி ஷெட்டி தெரிவித்துள்ளார். தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடித்து வரும் படம் ‘பாக்கெட் நாவல்’. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் ராஜ் பி ஷெட்டி. கன்னடத்தில் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநராக வலம் வருபவர் ராஜ் பி ஷெட்டி. ’பாக்கெட் நாவல்’ படம் குறித்து ராஜ் பி ஷெட்டி, “நான் ஒரு படத்தில்...
நான் டப்​பிங் தொழிலுக்கு வந்​த​தில் இருந்து எனக்​குப் பழக்​க​மானவர் காரை கணேசண்​ணன். கருப்​பான உரு​வம். எப்​போதும் வேஷ்டி, சட்​டை. ஒரு சைக்​கிள். இது​தான் அவர் அடை​யாளம். மயி​லாப்​பூரில் ஆஞ்​சநேயர் கோயிலுக்கு அரு​கில் உள்ள தெரு​வில் குடி​யிருந்​தார். அவருக்கு 5 குழந்​தைகள். காலை​யிலேயே சைக்​கிளில் ஸ்டூடியோக்​களுக்கு கிளம்​பி​விடு​வார். ஒவ்​வொரு ஸ்டூடியோ​வாக சென்று வாய்ப்பு தேடு​வார். நாள் முழு​வதும் வேலை பார்த்​தால் நூறு ரூபாய் கிடைக்​கலாம். இதில் அவர், வீட்டு வாடகை கொடுக்க...
‘அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ படங்களை இயக்கிய மீரா கதிரவன், அடுத்து புதுமுகங்கள் நடித்துள்ள ‘ஹபீபி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இஸ்லாமிய குடும்பப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் இயக்குநர் கஸ்தூரி ராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நேசம் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். “ஹபீபி என்ற அரபு சொல்லுக்கு அன்பே, பிரியமே என்று பொருள் கொள்ளலாம். இது ஒரு...
தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வரும் சாய் பல்லவி இப்போது இந்தியிலும் நடித்து வருகிறார். ரன்வீர் கபூர், யாஷ் நடிக்கும் `ராமாயணம்' படத்தில் சீதையாக நடித்துள்ள அவர், ஆமிர்கான் மகன் ஜூனைத் கான் ஜோடியாக ‘மேரே ரஹோ’ என்ற படத்தையும் முடித்துள்ளார். இதில் ‘ராமாயணம்’ இவ்வருட தீபாவளிக்கும் ‘மேரே ரஹோ’ ஜூலை மாதமும் வெளியாக இருக்கின்றன. இந்நிலையில் அவர் மணிரத்னம் இயக்கும் ரொமான்டிக் படத்தில் நாயகியாக நடிக்க இருக்கிறார். இதில்...