Google search engine

கோட்டார், ஆரல்வாய்மொழி பகுதிகளில் நாளை மின்தடை.

கன்னியாகுமரி மாவட்டம் மீனாட்சிபுரம், ஆரல்வாய்மொழி மற்றும் முப்பந்தல் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதனால், நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரையிலும், மாலை 5 மணி வரையிலும் குறிப்பிட்ட பகுதிகளில் மின் வினியோகம் தடைபடும்....

குளச்சல்: மீனவர் வீட்டில் இரவில் பயங்கர தீ விபத்து

கோடிமுனை பகுதியை சேர்ந்த ஆன்டனி என்பவரின் மனைவி, நேற்று மாலை கிரைண்டரில் மாவு அரைத்த பிறகு அதை நிறுத்தாமல் வீட்டைப் பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் சமையலறையில் தீப்பிடித்து எரிந்ததால், அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்துள்ளனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள்...

படத்தாலுமூடு: மேல்நிலைப்பள்ளி மாணவன், மாணவி மாநில சாதனை

படந்தாலுமுட்டில் உள்ள சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆர்வின் சுரேஷ், மாநில அளவிலான பாக்சிங் தரவரிசைப் போட்டியில் 60-63 கிலோ எடை பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதே பள்ளியைச் சேர்ந்த மாணவி தர்ஷிகா, மாநில அளவிலான தமிழ் நுண்ணறிவு தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். மாநில...

முள்ளூர்துறை: கோர்ட் உத்தரவு ; 34 பேர் மீது வழக்கு

ராமன்துறை பகுதியைச் சேர்ந்த ராபர்ட் புரூஸ் (52) என்பவர் முள்ளூர்துறை பகுதியில் சொந்தமாக சொத்து வாங்கி காம்பவுண்டு சுவர் கட்ட பணியாளர்களுடன் சென்றிருந்தார். அப்போது சுரேஷ் தலைமையிலான 34 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் சொத்துக்குள் அத்துமீறி நுழைந்து, பணியாளர்களைத் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்து...

பைங்குளம்: இந்து முன்னணியினர் 26 பேர் மீது வழக்கு

புதுக்கடை அருகே பைங்குளத்தில் குமரி மாவட்ட இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தடையை மீறி சட்டவிரோதமாக போராட்டம் நடத்தியதாக இந்து முன்னணி மதுரை கோட்ட செயலாளர் பழனிபாலன் உட்பட 26 பேர் மீது புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து...

இடைக்கோடு: ஏழை மூதாட்டிக்கு வீடு ; எம்எல்ஏ வழங்கினார்

விளவங்கோடு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் வீடில்லாத ஏழை மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ராகுல் காந்தி பவன் என்ற பெயரில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, இடைக்கோடு பேரூராட்சி, மாலைக்கோடு பகுதியைச் சேர்ந்த ஏழை மூதாட்டிக்கு புதிய வீடு...

குமரி: 20 ஆண்டுகளுக்குப் பின்பு சந்தித்த முன்னாள் மாணவர்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள புனித அலோசியஸ் மேல்நிலை பள்ளியில் 2006 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள், 20 வருடங்களுக்குப் பிறகு நேற்று ஒன்றிணைந்தனர். இந்த விழாவில் அவர்களுக்குப் பாடம் எடுத்த ஆசிரியர்களும், பள்ளியின் தற்போதைய தாளாளரும் கலந்துகொண்டனர். முன்னாள் மாணவர்களுக்குப் பாடம் எடுத்த...

குளச்சல்: தாயுடன் தகராறு; மீனவர் தூக்கிட்டு தற்கொலை

குளச்சல், லியோன் நகரைச் சேர்ந்த ஷகில் மோன் (18) என்ற இளைஞர், நேற்று தனது தாயுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தந்தை இறந்த நிலையில், தாயுடன் வசித்து வந்த ஷகில், போதையில் தாயுடன் வாக்குவாதம் செய்துள்ளார். தாய் கோபத்தில் வெளியே...

மார்த்தாண்டம்: மேம்பாலத்தில் அதிகாலை கோர விபத்து – வீடியோ

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் இன்று அதிகாலை சுமார் 1 மணியளவில், அதிவேகமாகச் சென்ற வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதனால் ஒன்றன் பின் ஒன்றாக 7 வாகனங்கள் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. விபத்து நடந்த நேரத்தில் அப்பகுதியில் இருந்தவர்கள்...

மார்த்தாண்டம்: நண்பனை அரிவாளால் வெட்டியவர் கைது

மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த சுபின் (25) என்ற வெல்டிங் தொழிலாளியை, அவரது நண்பர் ராஜித் மது அருந்த அழைத்துச் சென்று அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் படுகாயமடைந்த சுபின் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார்...