Google search engine

குழித்துறை பிரதேழ்ஸ் கிளப் சார்பில் 40வது ஆண்டு ஓண ஊஞ்சல் விழா

குழித்துறை பிரதேழ்ஸ் கிளப் சார்பில் 40வது ஆண்டு ஓண ஊஞ்சல் விழா நேற்று செவ்வாய்கிழமை துவங்கியது. தபால் நிலைய சந்திப்பில் தாரகை கத்பட் எம்எல்ஏ ஊஞ்சலை துவக்கி வைத்தார். திருவோண திருநாளான நாளை 5ம் தேதி மேள தாளத்துடன் மாவேலி ஊர்வலம் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு சிறுவர்கள்,...

திருவட்டார்: தாலுகா அலுவலகம் முன்பு சிஐடியு ஆர்ப்பாட்டம்

சுருளகோட்டில் உள்ள தனியார் ரப்பர் பால் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 50 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் கோரிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு தீர்வு காண வலியுறுத்தி, குமரி மாவட்ட சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் திருவட்டார் தாலுகா அலுவலகம்...

பளுகல்: வெளிநாட்டில் இருந்து திரும்பிய வாலிபர் தற்கொலை

மாங்காலை பகுதியைச் சேர்ந்த 36 வயதான ஜெபீஸ், வெளிநாட்டில் வேலை பார்த்து விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி ஸ்ரீகலா பளுகல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  போலீசார் நடத்திய விசாரணையில்,...

கிள்ளியூர் ஒன்றியம் நல்லூர் 5-வது வட்டார மாநாடு

கிள்ளியூர் ஒன்றியம், நல்லூர் 5-வது வட்டார மாநாடு நேற்று நட்டாலம் தோழர். சீதாராம் யெச்சூரி நினைவரங்கத்தில் நடைபெற்றது. பெர்லின்ஜோஸ் தலைமை தாங்கிய இந்த மாநாட்டில், மாவட்ட குழு உறுப்பினர் நந்தகுமார் துவக்கவுரை ஆற்றினார். மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், நட்டாலம் பஞ்சாயத்து பகுதியில் அரசு...

நாகர்கோவில் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 25 ஆயிரம்  அபராதம்

திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த அன்வர் உசைன் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு செய்திருந்தார். நாகப்பட்டினம் செல்லும் போது நெஞ்சுவலி ஏற்பட்டு சிகிச்சை பெற்றார். மருத்துவச் செலவு ரூ. 61,372 ஆனது. ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனம் பணத்தை வழங்கவில்லை. இது குறித்து குமரி நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு...

குமரி: ராணுவ வீரர் குடும்பத்தினருக்கு இலவச சட்ட ஆலோசனை மையம்

இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவ பணியாளர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இலவச சட்ட உதவி மற்றும் ஆதரவை வழங்கும் 'நல்சா வீர் பரிவார் சஹாயத யோஜனா' என்ற புதிய தேசிய சட்ட சேவை நாளை (புதன்கிழமை) நாகர்கோவில் கோட்டாரில் உள்ள முன்னாள் படை...

குமரி: அரசு  போக்குவரத்து கழக அதிகாரிகள் மாற்றம்

நாகர்கோவில் மண்டல அரசு போக்குவரத்து கழகத்தில் துணை மேலாளராக (வணிகம்) இருந்த ஜெரோலின் தூத்துக்குடி மண்டலத்திற்கு துணை மேலாளராக (டெக்னிக்கல்) மாற்றப்பட்டுள்ளார். மேலும், நாகர்கோவில் மண்டல அரசு போக்குவரத்து கழகத்தில் துணை மேலாளராக இருந்த சுனில் குமார் மண்டல வணிக பிரிவு துணை மேலாளராகவும், நாகர்கோவில் மண்டல...

அருமனை: நிதி நிறுவனத்தில் பெண் திடீர் தர்ணா

அருமனை பகுதியை சேர்ந்த ஜீனா (42) என்பவர் தனியார் நிதி நிறுவனத்தில் 4 கிராம் நகையை அடகு வைத்திருந்தார். நகையை மீட்க சென்றபோது அது காணாமல் போனதாக நிதி நிறுவனத்தினர் கூறியுள்ளனர். இது குறித்து ஜீனா அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நேற்று ஜீனா நிறுவனத்திற்கு...

தக்கலை: சர்வேயரிடம் மோசடி;  2 பேர் மீது வழக்கு

தக்கலை பாரதிநகரை சேர்ந்த துணை சர்வேயர் வேல்முருகன் மகளுக்கு வங்கி மேலாளர் வேலை வாங்கி தருவதாக கூறி, சென்னையை சேர்ந்த விஜய் மற்றும் ரூபஸ் இஸ்ரேல் தாமஸ் ஆகியோர் ரூ 12 லட்சத்து 85 ஆயிரம் மோசடி செய்துள்ளனர். ஒரு வருடமாகியும் வேலை வாங்கி கொடுக்காததால், வேல்முருகனின்...

கொல்லங்கோடு: அரசு பள்ளியில் பேரிடர் முகாம் நடத்த எதிர்ப்பு

மார்த்தாண்டம் அரசு துவக்கப்பள்ளியில் நேற்று பேரிடர் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்த வருவாய்த்துறையினர் சென்றனர். ஆனால், குழந்தைகளின் பெற்றோர்கள் கட்டிடத்தில் முகாம் நடத்த எதிர்ப்பு தெரிவித்ததால், அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். வருவாய்த்துறையிடம் சொந்தக் கட்டிடம் இருந்தும் பள்ளியில் முகாம் நடத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.