கிள்ளியூர்: அங்கன்வாடி மைய புதிய கட்டிடம் திறப்பு
கிள்ளியூர் பேரூராட்சிக்குட்பட்ட வட்டக்கோட்டை பகுதியில், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் ரூ. 14.50 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டிடம், நேற்று (6-ம் தேதி) குழந்தைகள் பயன்பாட்டிற்கு ராஜேஷ் குமார் எம்எல்ஏ-வால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆல்பர்ட் ஜெனில் மற்றும்...
மீனாட்சி கார்டன் பகுதியில் கழிவு நீர் ஓடை அமைக்கும் பணி.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 25-வது வார்டில் உள்ள மீனாட்சி கார்டன் மேற்கு தெருவில் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் ஓடை பணி இன்று தொடங்கப்பட்டது. நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர் காந்தி இந்த பணியை தொடங்கி வைத்தார். நகர்மன்ற உறுப்பினர் அக்ஷயா...
நாகர்கோவில்: கடன் தொல்லையால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், கடன் தொல்லையால் மனமுடைந்த தொழிலாளி ஞான சுபின் (24) வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பழ வியாபாரி ஞான ராஜனின் மகனான இவர், பலரிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் இந்த துயர சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வடசேரி...
திங்கள்சந்தை: சாலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி
திங்கள்சந்தையில் காமராஜ் பஸ் நிலையம் அருகே, கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பால் சாலை பழுதடைந்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என புகார் எழுந்தது. இதனைக் கண்டித்து, திங்கள்நகர் பாரதிய ஜனதா பேரூராட்சி கவுன்சிலர் ஜெயசேகரன் தலைமையில், பழுதடைந்த சாலைக்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி...
இரணியல்: லாரி டிரைவர் கொலை.. மேலும் 2 பேர் கைது
பிரம்மபுரத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் கிருஷ்ணதாஸ் (36) கடந்த 31 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இரணியல் போலீசார் நடத்திய விசாரணையில், கிருஷ்ணதாஸின் மனைவி பவித்ராவுக்கும் (33) ரமேஷ் என்பவருக்கும் இடையிலான கள்ளத்தொடர்பே கொலைக்குக் காரணம் எனத் தெரியவந்தது. இதனையடுத்து, பவித்ரா மற்றும் அவரது தாயார் முத்துலெட்சுமி...
மார்த்தாண்டம்: பிரபல கொள்ளையர்கள் 4 பேர் கைது
கடந்த 12 ஆம் தேதி நட்டாலம் பகுதியில் விஜின் என்பவரிடம் இருந்து செயின், மோதிரம், பிரேஸ்லெட் ஆகியவற்றை கொள்ளையடித்த 4 பேர் கொண்ட கும்பலை மார்த்தாண்டம் போலீசார் நேற்று வாகன சோதனையில் கைது செய்தனர். நிர்மல், பெண்டன் பின், காட்வின், பிரவின் ஆகியோரை விசாரித்ததில், அவர்கள் நட்டாலத்தில்...
குளச்சல்: தூங்கிய பெண்ணிடம் சில்மிஷம் அரசு பஸ் டிரைவர் கைது
குளச்சல் காமராஜர் பேருந்து நிலைய பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த நரிக்குறவர் இன பெண்களின் ஆடைகளை நீக்கி சில்மிஷம் செய்யும் சிசிடிவி வீடியோ நேற்று வைரலானது. இது தொடர்பாக குளச்சல் போலீசார் நடத்திய விசாரணையில், சில்மிஷம் செய்த அரசு பேருந்து ஓட்டுநர், குளச்சல் பகுதியைச் சேர்ந்த ஜவகர் என்பவரை...
கருங்கல்: பேரூராட்சி தலைவரை தாக்கிய போலீஸ் மீது புகார்
கருங்கல் பேரூராட்சிக்குட்பட்ட செல்லங்கோணம் பகுதியில் 10 சென்ட் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்ததை அகற்ற மதுரை ஹைகோர்ட் உத்தரவின்படி பேரூராட்சி தலைவர் சிவராஜ், செயல் அலுவலர் சத்யதாஸ் முன்னிலையில் பணி நடைபெற்றது. அப்போது, குளச்சல் கடலோர பாதுகாப்பு படையில் போலீசாக பணியாற்றும் ஆல்பர்ட் அன்புராஜ் என்பவர் பேரூராட்சி...
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி கோட்டார் சவேரியார் கோவில் சந்திப்பு முதல் செட்டிக்குளம் சந்திப்பு வரையிலான சாலையில் மழைநீர் வடிகால் சீரமைத்து நடைபாதை அமைப்பது தொடர்பாக மேயர் மகேஷ், மாநகராட்சி ஆணையாளர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் அதிகாரிகளுடன் நேற்று கள ஆய்வு மேற்கொண்டார். சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி...
குமரி: அரசு ஊழியராக்க கோரி அங்கன்வாடி ஊழியர் ஆர்ப்பாட்டம்
தேர்தல் வாக்குறுதியின்படி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணி ஓய்வின்போது பணிக்கொடை வழங்க வேண்டும், மே மாத விடுமுறையை ஒரு மாதமாக நீட்டிக்க வேண்டும், குழந்தைகளின் பாதுகாப்பிற்காக காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை...













