Google search engine

நாகர்கோவில் அருகே ஆட்டோ திருட்டு.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அனில் குமார் என்ற ஆட்டோ ஓட்டுநரின் ஆட்டோ திருடு போனது. இரவில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து அனில் குமார் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து...

குமரி: தென்னந்தோப்பில் வெட்டு காயங்களுடன் ஆண் பிணம்

ராஜாக்கமங்கலம் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில், உடல் முழுவதும் வெட்டு காயங்களுடன் டிரைவர் கண்ணன் (47) என்பவரின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டது. கோவில்புரம் பகுதியைச் சேர்ந்த இவர் திருமணமாகாதவர் என தெரிய வந்துள்ளது. இக்கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் யார் என்பது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் தீவிர விசாரணை...

குலசேகரம்: தாயை தாக்கிய அரசு பஸ் டிரைவருக்கு 2 ஆண்டு சிறை

குலசேகரம் பகுதியை சேர்ந்த சபரிபாய் (77) என்பவரை அவரது மகன் மைக்கேல் தாசன் கடந்த 8.11.2016 அன்று கம்பியால் தாக்கிய வழக்கில், மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி தனசேகரன், மைக்கேல் தாசனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.30,000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். காயமடைந்த தாயார்...

கூட்டாலுமூடு: பத்ரேஸ்வரி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோயிலில் நேற்று தந்திரி சங்கரன் நம்பூதிரி தலைமையில் வருஷாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பொங்காலை, அம்மன் பவனி, பஜனை பட்டாபிஷேகம், அபிஷேக உறி விளையாட்டு ஆகியவை நடந்தன. இரவு யோகேஸ்வரி மீராபுரி மாதாஜி தலைமையில் 2008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த விழாவிற்கான...

நித்திரவிளை: ரப்பர் தோட்டத்தில் திடீர் தீ ; நாச வேலையா?

நித்திரவிளை பகுதியில் தனியாருக்கு சொந்தமான ரப்பர் தோட்டத்தில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ பரவியதை அடுத்து கொல்லங்கோடு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தனரா என்பது...

பெரியகாடு புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம்.

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள பெரியகாடு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை யொட்டி நேற்று முன்தினம் மாலை கல்லறை தோட்டம் மந்திரிப்பு, ஜெப மாலை, புகழ்மாலை, திருப்பலி ஆகியவை நடைபெற்றது. விழாவில் நேற்று கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை...

இரணியல்: 85 மது பாட்டில்களுடன் பெண் கைது

இரணியல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆளூர் பகுதியில் மது விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் ரோந்து சென்றனர். தோப்புவிளை பகுதியில் பபிலா என்ற பெண் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் அவரது வீடு சோதனை செய்யப்பட்டது. அப்போது, அரசு அனுமதி இன்றி 85...

ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எச்சரிக்கை: கன்னியாகுமரி காவல்துறை அதிரடி

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை, சாலை விபத்துகளில் உயிரிழப்பைத் தடுக்கும் நோக்கில் 'நோ ஹெல்மெட் நோ என்ட்ரி' என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். ஆர். ஸ்டாலின் IPS அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை...

கொல்லங்கோடு: கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கொல்லங்கோடு போலீஸ் எஸ்ஐ பிரபகுமார் தலைமையிலான போலீசார் நேற்று மாலை சூசைபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வாலிபர் ஒருவரை பிடித்து சோதனை செய்ததில், அவரிடம் 14 பொட்டலங்களில் 45 கிராம் கஞ்சா இருந்தது. போலீசார், பானி (20) என்ற வாலிபரை கைது செய்து...

குமரி மாவட்ட ஊர்க்காவல் படை சார்பில் குடியரசு தின விழா.

இன்று நாடு முழுவதும் 77வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. 1950 ஜனவரி 26 அன்று இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்ததன் நினைவாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்ட ஊர்க்காவல் படை காவலர்கள் சார்பில் குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டது. மாவட்ட வட்டார தளபதி பிளாட்பின்...