காப்புக்காட்டைச் சேர்ந்த சேம்தாஸ் (64), மார்த்தாண்டம் சந்திப்பில் உள்ள பேக்கரியில் கேஷ்யராகப் பணிபுரிகிறார். சம்பவத்தன்று பணிக்கு வந்தபோது அவரது பைக் காணாமல் போனது. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் காஞ்சிரகோடு தட்டான் விளையைச் சேர்ந்த ஜெபசிங் பைக் திருடிச் செல்வது தெரியவந்தது. போலீசார் ஜெபசிங்கை நேற்று கைது செய்து பைக்கையும் பறிமுதல் செய்தனர்.















