புதுக்கடை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், கீழ்குளம் பகுதியில் அனுமதி இன்றி பாறைகளை உடைத்தவர்களைப் பிடிக்க சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். போலீசாரைக் கண்டதும் பாறை உடைத்தவர்கள் வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினர். போலீசார் 2 ஹிட்டாச்சிகள் மற்றும் டிராக்டருடன் கூடிய கம்பரசர் ஆகியவற்றை பறிமுதல் செய்து, நேற்று வழக்கு பதிவு செய்தனர்.














