முளகுமூடு கிராம அலுவலக உதவியாளர் மரியபிரபாகரன் (35) மற்றும் அவரது மனைவி மேரி பெல்சி ஆகியோர், பக்கத்து வீட்டுக்காரர் ஆண்டனி (53) மற்றும் அவரது கூட்டாளிகள் சுபாஷ் (27), ஜியோ (20) ஆகியோரால் தாக்கப்பட்டனர். கார் சேதப்படுத்திய முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














