கிள்ளியூர் தாலுகாவில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, நித்திரவிளை பெட்ரோல் பங்க் அருகே மினி டெம்போவில் இருந்து ரூ. 2.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தேங்காப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு வாங்க கொண்டு செல்வதாக பணம் கொண்டு சென்றவர்கள் தெரிவித்தனர். ஆனால், பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால், பறக்கும் படையினர் பணத்தை கைப்பற்றி கிள்ளியூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.














