விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன், தனது வேட்பு மனு தாக்கலின் போது பல்வேறு வழக்கு விவரங்களை மறைத்ததாகக் கூறி, காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் ஜோஸ் லால் மற்றும் பாஜக ஓபிசி அணி மாவட்ட பொது செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் புகார் அளித்துள்ளனர். இதன் பேரில் வேட்பு மனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் மற்றும் கேரளாவில் பிரவீன் வாக்குரிமை வைத்திருப்பதையும் மறைத்துள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.














