குளச்சல் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட், கன்னியாகுமரி மாவட்ட கடலோர மக்கள் வளர்ச்சி மன்ற அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். மீனவ மக்களின் முன்னேற்றம் குறித்து மன்ற நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் கடலோர மக்கள் வளர்ச்சி மன்ற நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.














