Home 2024
Yearly Archives: 2024
சிவசேனாவில் இணைந்த மிலிந்த் தியோராவுக்கு மாநிலங்களவை எம்.பி. சீட்
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை உடைத்து பாஜகவுடன் கூட்டணி முதல்வராக பதவி வகித்து வருபவர் ஏக்நாத் ஷிண்டே. ஏக்நாத் தலைமையி லான சிவசேனாதான் உண்மையான சிவசேனா என்று தலைமைத் தேர்தல் ஆணையமும் அறிவித்துவிட்டது. இந்நிலையில் அண்மையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந்த் தியோரா விலகி, முதல்வர் ஏக்நாத் தலைமையிலான சிவசேனா கட்சியில் இணைந்துள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) ஆட்சியின்போது மத்திய அமைச்சராகவும் மிலிந்த் தியோரா பணியாற்றியிருந்தார்.
இந்நிலையில் மிலிந்த் தியோராவுக்கு, சிவசேனா கட்சித்தலைவர்கள் மாநிலங்களவை எம்.பி. சீட்டை வழங்கியுள்ளனர்.மிலிந்த்...
மாநிலங்களவை தேர்தலில் தெ.தேசம் போட்டியில்லை: சந்திரபாபு நாயுடு திட்டவட்டம்
மாநிலங்களவை தேர்தலில் தெ.தேசம் போட்டியில்லை சந்திரபாபு நாயுடு திட்டவட்டம் என். மகேஷ்குமார் அமராவதியில் உள்ள தனது வீட்டில், தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு தனது கட்சியை சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது சந்திரபாபு நாயுடு கூறுகையில், ‘‘இம்முறை கண்டிப்பாக தெலுங்கு தேசம் கட்சி மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடாது.ஆந்திராவில் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி விட்டதால், தேர்தலில் வெற்றி பெறுவதை மட்டுமே நாம் லட்சியமாக கொண்டு செயல்பட வேண்டும். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியிலிருந்து பல எம்.பி.,...
ஹல்துவானி வன்முறை | 7 நாட்களுக்குப் பிறகு வன்புல்புராவில் ஊரடங்கு தளர்வு
உத்தராகண்ட் மாநிலம், ஹல்துவானியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட மதரஸாவை இடித்ததால் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து வன்புல்புரா பகுதியில் விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளன.
உத்தராகண்ட் மாநிலம் ஹல்துவானி நகரின் வன்புல்புரா பகுதியில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. இதில் கடந்த பிப்.8ஆம் தேதி முஸ்லிம்கள் அதிகம் வாழும் மல்லீக் தோட்டம் எனும் இடத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட மதரஸா இடிக்கப்பட்டதற்கு எதிராக அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். சுமார் 300 பேர் காயம் அடைந்தனர். கலவரம் பரவாமல் தடுக்க...
டெல்லியில் இடைத்தரகர்கள்தான் போராட்டம் நடத்துகின்றனர்: பாஜக விவசாய அணி மாநிலத் தலைவர் கருத்து
டெல்லியில் இடைத்தரகர்கள்தான் போராட்டம் நடத்துகின்றனர் என்றுதமிழக பாஜக விவசாய அணித் தலைவர் ஜி.கே.நாகராஜ் கூறினார்.ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கொங்கு மண்டலத்தில் விசைத்தறி, கோழிப்பண்ணை, போர்வெல் தொழில் உள்ளிட்டவை நசிந்து வருகின்றன. இவற்றைக் காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவிநாசி திட்டம் கடந்த ஆட்சியில் 90 சதவீதம் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள 10 சதவீதம் பணியை 3 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றனர். பணிகளை விரைவாக முடித்து, திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.நெல் சாகுபடி குறைந்துள்ளதே அரிசி விலை ஏற்றத்துக்கு...
ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் மார்ச் 28-ல் ஆஜராக உத்தரவு
நெல்லையில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களைப் பிடுங்கியதாக, புகார் எழுந்தது.இந்த விவகாரத்தில் அப்போதைய அம்பாசமுத்திரம் வட்ட ஏஎஸ்பி பல்வீர் சிங்பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கு திருநெல்வேலி 1-வது நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்வீர் சிங் உட்பட 12 காவல் துறை அலுவலர்கள் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஆய்வாளர் ராஜகுமாரி மற்றும் உதவி ஆய்வாளர் முருகேசன் ஆகிய இருவர் மட்டும் ஆஜராகவில்லை.
இதையடுத்து, வழக்கு விசாரணையை மார்ச் 28-ம் தேதிக்கு தள்ளிவைத்தும், அன்று...
‘நீங்க ரோடு ராஜாவா?’ – விழிப்புணர்வு குறும்படம் வெளியிட்ட போலீஸார்
சாலை விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை பொதுமக்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து அனுப்பினால், அதை அடிப்படையாக வைத்தும் போக்குவரத்து போலீஸார் அபராதம் விதிக்க உள்ளனர்.
போக்குவரத்து விதி மீறல், சாலை பாதுகாப்பு குறுித்து வாகன ஓட்டிகளுக்கு தெளிவுபடுத்தும் வகையில் ‘நீங்க ரோடு ராஜாவா?'என்ற பெயரில் திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் மூலம் விழிப்புணர்வு வீடியோவை போக்குவரத்து போலீஸார் தயார் செய்திருந்தனர்.
இதில், நடிகர் சாந்தனு பாக்யராஜ், நடிகை அர்ச்சனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அதேபோல்சிக்னல்களில் எல்லைக்கோட்டை மதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இயக்குநர் விக்னேஷ் சிவன்...
“பயங்கரவாதத்தின் வேர், மூளை எங்கிருந்தாலும் பாஜக அழிக்கும்” – அண்ணாமலை உறுதி
பயங்கரவாதம் எங்கு இருந்தாலும், அதை பாஜக அழிக்கும் என கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோருக்கான புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் ஆண்டு தோறும் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி கடைபிடிக்கப்படுகிறது. அதன் படி, ஆர்.எஸ்.புரம் டி.பி.சாலையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ,...
திமுகவில் சிவகங்கை தொகுதிக்கு காய் நகர்த்தும் கரு.பழனியப்பன்!
அமைச்சர் உதயநிதியிடம் இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி சிவகங்கை தொகுதியில் சீட் பெற திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் காய் நகர்த்தி வருகிறார்.மக்களவைத் தேர்தலில், கடந்த முறையைவிட கூடுதல் இடங்களில் திமுக போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இந்த முறை எப்படியாவது சிவகங்கை தொகுதியை திமுகவுக்கு ஒதுக்க வேண்டுமென அக்கட்சியினர் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். சென்னையில் கடந்த ஜன.29-ம் தேதி நடைபெற்ற திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், சிவகங்கை தொகுதியை திமுகவுக்கு ஒதுக்க வேண்டுமென சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
அதே நேரம், இந்த முறை...
நரசுஸ் காபி நிறுவனத்தின் ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’
சென்னையில் தடுக்கி விழுந்த இடங்களில் எல்லாம் சினிமா ஸ்டூடியோக்கள் இருந்த காலம் ஒன்று உண்டு. சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட ஸ்டூடியோக்கள் அப்போது இருந்தன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களின் படப்பிடிப்புகள் இங்கு நடைபெற்றிருக்கின்றன. அதில் கிண்டியில் இருந்த நரசு ஸ்டூடியோவும் ஒன்று. பிரபலமான நரசுஸ் காபி நிறுவனத்தின் அதிபர் வி.எல்.நரசுவின் ஸ்டூடியோ இது. தமிழ், தெலுங்கு, இந்தி படங்களின் படப்பிடிப்புகள் நடந்த இந்த ஸ்டூடியோ, பிறகு கேம்பகோலா நிறுவனத்துக்கு விற்கப்பட்டது.
வி.எல்.நரசு முதலில் விநியோகஸ்தராகி பிறகு படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார். மார்க்கண்டேயா,...
தன்பாலின உறவையும் காதலையும் சினிமா அணுகும் விதம் | காதலர் தின சிறப்புப் பகிர்வு
கடந்த 2004-ம் ஆண்டு வெளியான சரத்குமாரின் ‘கம்பீரம்’ படத்தின் காமெடி காட்சியில் ரெய்டு செல்லும் வடிவேலு உடைகள் களையப்பட்டு மூலையில் அமர்ந்திருப்பார். அப்போது அவரை உற்றுநோக்குபவரிடம், ‘அவனா நீ’ என ஒருவித நக்கல் தொனியுடன் கேட்பார் வடிவேலு. இந்தக் காட்சியைப் பார்த்து சிரிக்காதவர்கள் இல்லை. இதன் எதிரொலி சமூகத்திலும் பிரதிபலித்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. பால்புதுமையினரை தமிழ் சினிமா ‘அவனா நீ’ என கேலி கிண்டலுடன் அணுகியிருக்கிறது. பெரும்பாலானா படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.விக்ரம் - ஷங்கர் கூட்டணியில் உருவான ‘ஐ’ படத்தில் வரும்...














