​முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டம்: சென்னையில் ஏப்​.16-ம் தேதி நடக்கிறது

0
36

முதல்​வர் ஸ்டா​லின் தலை​மை​யில் அனைத்து பல்​கலைக்​கழக துணைவேந்​தர்​கள் பங்​கேற்​கும் ஆலோ​சனை கூட்​டம் சென்​னை​யில் வரும் 16-ம் தேதி நடை​பெற உள்​ள​தாக தமிழக அரசு அறி​வித்​துள்​ளது.

பல்​கலைக்​கழக வேந்​த​ராக இருந்த ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, ஒவ்​வோர் ஆண்​டும் துணைவேந்​தர்​களு​டன் உயர்​கல்வி தொடர்​பாக ஆலோ​சனை நடத்​து​வது வழக்​கம். இந்​நிலை​யில், ஆளுநருக்கு எதி​ராக தமிழக சட்​டப்​பேர​வை​யில் இயற்​றப்​பட்ட 10 மசோ​தாக்​களுக்கு உச்ச நீதி​மன்​றம் அண்​மை​யில் ஒப்​புதல் வழங்​கி​யிருந்​தது.

இதையடுத்​து, மசோ​தாக்​கள் குறித்து அரசிதழில் அறிவிக்கை வெளி​யிடப்​பட்​டது. துணைவேந்​தரை நியமிக்​கும் அதி​காரத்தை மாநில அரசுக்கு வழங்​கு​வது, வேந்​தருக்​கான அதி​காரத்தை ஆளுநருக்கு பதிலாக தமிழக அரசுக்கு வழங்​கு​வது, சிண்​டிகேட் உறுப்​பினர்​களை அரசே நியமிப்​பது உள்​ளிட்ட அம்​சங்​களை உள்​ளடக்​கிய​தாக இந்த சட்​டத் திருத்​தங்​கள் உள்​ளன.

இந்​நிலை​யில், முதல்​வரை பல்​கலைக்​கழகங்​களுக்கு வேந்​த​ராக்​கும் மசோ​தாவுக்​கும் உச்ச நீதி​மன்​றம் ஒப்​புதல் அளித்​திருந்​தது. இதையடுத்​து, பல்​கலைக்​கழக திருத்​தச் சட்​டப்​படி தற்​போது எல்லா பல்​கலைக்​கழகத்​துக்​கும் வேந்​த​ராக முதல்​வரே செயல்​படு​வார்.

இந்​நிலை​யில், தமிழகத்​தில் உயர்​கல்​வியை மேம்​படுத்​தும் நோக்​கத்​துடன், அனைத்து பல்​கலைக்​கழகங்​களின் துணைவேந்​தர்​கள் மற்​றும் பதி​வாளர்​கள் கலந்து கொள்​ளும் ஆலோ​சனைக் கூட்​டம், சென்னை தலை​மைச் செயல​கத்​தில் உள்ள நாமக்​கல் கவிஞர் மாளி​கை​யில் வரும் 16-ம் தேதி (புதன்​கிழமை) நடை​பெற உள்​ளது.

இந்​தக் கூட்​டத்​துக்கு முதல்​வர் ஸ்டா​லின் தலைமை வகிப்​பார் என்று தமிழக அரசு அறி​வித்​துள்​ளது. தமிழக பல்​கலைக்​கழக வரலாற்​றில் முதல்​முறை​யாகமுதல்​வர் தலை​மை​யில் துணைவேந்​தர்​கள் பங்​கேற்​கும் ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற உள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here