குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே சிலுவைபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் கூலித் தொழிலாளியான இவருக்கு ஜினு 36, ஜிஜின் 34, என்ற இரண்டு மகன்கள் உள்ளனர் இவர்களில் மூத்த மகன் ஜினு பட்டப்படிப்பை முடித்து கேரளாவில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார் ஜினு-வுக்கு திருமண வரன்கள் பார்க்க துவங்கி உள்ளனர் ஆனால் வரன்கள் ஏதும் கைகூடாமல் போனதால் விரக்தியடைந்த ஜினு அதனை மறக்க மது பழக்கத்திற்கு ஆளாகி உள்ளார் நாளடைவில் மதுவிற்கு அடிமையான ஜினு வேலைக்கு செல்வதை முழுமையாக நிறுத்திவிட்டு மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தனது தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார் இதனை செல்வராஜ் கண்டுகொள்ளாமல் இருந்து வந்த நிலையில் நேற்று இரவு மது போதையில் வந்த ஜினுவை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்து செல்வராஜ் கதவை பூட்டி வைத்துள்ளார் இதனால் ஆத்திரமடைந்த ஜினு கதவை உடைத்து திறக்க முயன்றபோது கதவை திறந்து வெளியே வந்த செல்வராஜை ஜினு சைக்கிள் செயினை கொண்டு தாக்க முயன்றுள்ளார் இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ் அருகில் கிடந்த தேங்காய் தொலிக்கும் கம்பியை கொண்டு தலையில் ஓங்கி அடித்துள்ளார் இதில் படுகாயமடைந்த ஜினு சுருண்டு கீழே விழுந்து துடிதுடிக்க இறந்துள்ளார். இதை அடுத்து தந்தை காவல் நிலையத்தில் சரவணன் அடைந்தார்,
Latest article
இரணியல்: துணை ராணுவப்படை வீரர் தந்தை மீது தாக்குதல்
கருங்கல் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (65) இவரது மகன் நிகேஷ் துணை ராணுவ படை வீரர். டெல்லியில் பிரதமர் இல்லம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இதனால் அவர் மனைவி பிள்ளைகளுடன் குடும்பத்துடன் டெல்லியில்...
திற்பரப்பு: குமரி எஸ் பி அருவியில் திடீர் ஆய்வு
குமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமான திற்பரப்பு அருவியில் ஆண்டு முழுவதும் பெரும்பாலான நாட்களிலும் தண்ணீர் கொட்டுவது வழக்கம். இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
தற்போது தொடர்...
தேங்காபட்டணம்: விவசாயியை மது பாட்டிலால் தாக்கு
தேங்காபட்டணம் பகுதி தோப்பு என்ற இடத்தைச் சேர்ந்தவர் செய்யது அலி ஷாஜகான் (53). இவர் விவசாயி. இவர் சம்பவ தினம் தேங்காபட்டணம் சந்திப்பு பகுதியில் நிற்கும்போது அங்கு வந்த தேங்காபட்டணம் ஆஸ்பத்திரி சந்திப்பு...