குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடக்குப் பேயங்குழி இரட்டைக்கரை கால்வாயினை மாவட்ட ஆட்சித்தலைவர் மு. பிரதாப் இன்று 11-ம் தேதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கால்வாயில் தூர்வாரப்பட்டதன் மூலம் நீரோட்டம் சீராக உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் நீர்வளத்துறை செயற்பொறியாளர் வசந்தி, உதவி செயற்பொறியாளர் கதிரவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆய்வு, அப்பகுதியில் நீர்ப்பாசன வசதியை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது.















