புதுக்கடை: சமையல் செய்யும்போது தீப்பிடித்து பெண் உயிரிழப்பு

0
52

புதுக்கடை அருகே முஞ்சிறை அடுத்த தென்னாட்டு விளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜு என்பவர் மனைவி மரியம்மாள் (55). ராஜு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மகனைப் பிரிந்து சென்று விட்டார். மரியம்மாள் தனது மகன் தினேஷ் (23) என்பவருடன் அந்தப் பகுதியில் வீட்டில் வசித்து வந்தார். 

இந்த நிலையில் நேற்று மதியம் மரியம்மாள் சமையலறையில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் உடுத்திருந்த நைலான் சாரியில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. தொடர்ந்து அவர் சுதாரிப்பதற்குள் சமையலறையில் கிடந்த மற்ற விறகுகளிலும் தீப்பிடித்து மரியம்மாள் முற்றிலும் தீயில் சிக்கி அவரது உடல் கருகியது. இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியில் யாருக்கும் உடனடியாக தெரியவில்லை. சிறிது நேரங்கழித்து வீட்டிலிருந்து புகை கிளம்பியதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக சென்று பார்த்தபோது மரியம்மாள் முற்றிலும் கருகி இறந்த நிலையில் காணப்பட்டார். 

உடனடியாக புதுக்கடை போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று மரியம்மாள் உடலை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மரியம்மாள் மகன் தினேஷ் அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here