செப்.11-ல் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு

0
13

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் இந்​திய பிரதமர் நரேந்​திர மோடி​யும் வரும் 11-ம் தேதி டெல்​லி​யில் சந்​தித்​துப் பேச உள்​ளனர். அப்​போது இந்​திய விமானப் படைக்கு ரஷ்​யா​வின் எஸ்யு 57 போர் விமானங்​களை வாங்​கு​வது குறித்து இரு தலை​வர்​களும் முக்​கிய ஆலோ​சனை நடத்த உள்​ளனர் என்று ரஷ்ய அதிபர் மாளிகை செய்​தித் தொடர்​பாளர் திமித்ரி பெஸ்​கோவ் தெரிவித்துள்​ளார்.

பிரிக்ஸ் கூட்​டமைப்​பின் உச்சி மாநாடு வரும் 12, 13-ம் தேதி​களில் டெல்​லி​யில் நடை​பெற உள்​ளது. இதில் பங்​கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வரும் 11-ம் தேதியே டெல்லி வரு​கிறார். அன்றைய தினம் பிரதமர் நரேந்​திர மோடி​யும் அதிபர் புதினும் தனி​யாக சந்​தித்​துப் பேச ஏற்​பாடு செய்​யப்​பட்டு வரு​கிறது. இந்த பேச்​சு​வார்த்​தை​யின்​போது பாது​காப்​பு, வர்த்​தகம், எரிசக்​தி, தொழில்​நுட்​பம், அணு சக்தி உள்​ளிட்ட பல்​வேறு துறை​கள் குறித்து முக்​கிய ஆலோ​சனை​கள் நடத்​தப்பட உள்​ளன.

இதுகுறித்து ரஷ்ய அதிபர் மாளிகை செய்​தித் தொடர்​பாளர் திமித்ரி பெஸ்​கோவ் காணொலி வாயி​லாக இந்​திய நிருபர்​களிடம் கூறிய​தாவது: அதிபர் புதினுக்​கும் பிரதமர் மோடிக்​கும் இடையே மிக நெருங்​கிய நட்​புறவு நீடிக்​கிறது. செப்​டம்​பர் 11-ம் தேதி டெல்லி​யில் இரு தலை​வர்​களும் சந்​தித்து பேச உள்​ளனர். அப்​போது இருதரப்பு மற்​றும் சர்​வ​தேச விவ​காரங்​கள் குறித்து இருவரும் ஆலோ​சனை நடத்​து​வார்​கள்.

எரிசக்​தி, அணு சக்​தி, பாது​காப்​பு, விண்​வெளி, கல்வி உள்​ளிட்ட துறை​களில் இரு நாடு​களும் இணைந்து செயல்​படு​கின்​றன. கூடங்​குளம் அணு மின் நிலை​யத்தை விரிவுபடுத்த ரஷ்யா தொடர்ந்து உதவி​களை வழங்​கும். ரஷ்​யா​வின் உதவி​யுடன் இந்தியா​வில் புதி​தாக ஓர் அணு மின் நிலை​யத்தை தொடங்​கு​வது குறித்து ஆலோ​சனை நடத்​தப்​பட்டு வரு​கிறது.

எஸ்​.​யு. 57 ரக போர் விமானம்

ரஷ்​யா​வும் இந்​தி​யா​வும் இணைந்து பிரம்​மோஸ் ஏவு​கணை​களை தயாரித்து வரு​கின்​றன. இந்த ஏவு​கணை சர்​வ​தேச அளவில் பெரும் வரவேற்​பைப் பெற்​றிருக்​கிறது. பிரிக்ஸ் உச்சி மாநாட்​டின்​போது இந்​திய விமானப் படைக்​காக ரஷ்​யா​வின் எஸ்​.​யு.57 ரக போர் விமானங்​களை வாங்​கு​வது குறித்து பிரதமர் மோடி​யும் அதிபர் புதினும் முக்​கிய ஆலோ​சனை நடத்த உள்​ளனர். இந்த போர் விமானத்​தின் தொழில்​நுட்​பத்தை இந்​தி​யா​வுக்கு வழங்குவது குறித்​தும் பேச்​சு​வார்த்தை நடத்​தப்​படும்.

இந்​தி​யா​வுக்கு வழங்க வேண்​டிய ரஷ்​யா​வின் எஸ்​-400 ஏவுகணைகள் குறித்​தும் அதிபர் புதினும் பிரதமர் மோடி​யும் ஆலோ​சனை நடத்​து​வார்​கள். ரஷ்யா அளித்த வாக்​குறு​தியை நிச்சய​மாக நிறைவேற்​றும். ரஷ்​யா​வின் அதிநவீன பாது​காப்பு தொழில்​நுட்​பங்​களை இந்​தி​யா​வுக்கு வழங்க தயா​ராக உள்​ளோம். ரஷ்ய ராணுவத்​தில் பணி​யாற்​றும் இந்​தி​யர்​களை கண்​டறிந்​து, அவர்​களை திருப்பி அனுப்​புவோம்.

ரூபாய் பணப் பரிமாற்ற சிக்கல்

ரஷ்​யா, இந்​தியா இடையி​லான ரூபாய் பணப் பரி​மாற்​றத்​தில் சில சிக்​கல்​கள் உள்​ளன. இவை படிப்​படி​யாக நீக்​கப்​படும். ரஷ்யாவுக்கான இந்​திய பொருட்​களின் ஏற்​றுமதி கணிச​மாக அதிகரித்து வரு​கிறது. இரு நாடு​கள் இடையே விமானப் போக்குவரத்தை அதிகரிக்க திட்​ட​மிடப்​பட்டு உள்​ளது. ரஷ்யாவிடம் இருந்து இந்​தி​யா​வுக்கு தொடர்ச்​சி​யாக கச்சா எண்ணெய் ஏற்​றுமதி செய்​யப்​பட்டு வரு​கிறது. இதுதொடர்​பான புள்​ளி​விவரங்​களை அளிக்க முடி​யாது. ஆனால் ஒவவொரு மாதமும் இந்​தி​யா​வுக்​கான கச்சா எண்​ணெய் ஏற்​றுமதி புதிய உச்சத்தை தொட்டு வரு​கிறது.

உக்​ரைன் போர்

உக்​ரைன் போர் தொடர்​பாக ரஷ்​யா, அமெரிக்கா இடையே பேச்​சு​வார்த்தை நடத்​தப்​பட்டு வரு​கிறது. இதுகுறித்து பிரதமர் நரேந்​திர மோடி​யிடம் அதிபர் புதின் முழு​மை​யாக எடுத்​துரைப்​பார்​. இவ்வாறு தி​மித்​ரி பெஸ்​கோவ்​ தெரி​வித்​துள்​ளார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here