குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான நாகர்கோவில் நாகராஜா கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாகர் சிலைக்கு பக்தர்கள் மஞ்சள் பொடி மற்றும் பால் ஊற்றி வழிபாடு செய்வது வழக்கம்.இந்தநிலையில் நாகராஜா கோவிலில் வடசேரி திலகவதியார் உழவாரப்பணி குழு மற்றும் தூத்துக்குடி திருதாண்டக வேந்தர் குழுவினர் இணைந்து கோவிலின் உள் சுற்று பிரகாரத்தில் உள்ள செடி, கொடி மற்றும் மணல் திட்டுகளை சரிசெய்து உழவாரப்பணி மேற்கொண்டனர். இந்த பணியினை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் ஆய்வு செய்தார். ஆய்வின் போது மராமத்து பொறியாளர் ராஜ்குமார், கோவில் கணக்கர் சிதம்பரம் ஆகியோர் உடன் இருந்தனர்.
Latest article
குமரி: ஜூன் மாதத்திற்குள் தூர் வாரும் பணி முடிவடையும் – ஆட்சியர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் வண்டல் மண் எடுப்பது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் உள்ள கால்வாய்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. ஜூன் மாதத்திற்குள் பணிகள்...
மார்த்தாண்டம்: போலீஸ் நிலைய கோப்புகள் மாயம் கோர்ட்டில் வழக்கு
மார்த்தாண்டம் அருகே சிராயங்குழி பகுதி சேர்ந்தவர் செல்லையா (74). தொழிலாளி. இவர் குழித்துறை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அந்த மனுவில்: - எனக்கு சொந்தமான 90 சென்ட் நிலத்தை அதே பகுதியை...
நட்டாலம்: டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நட்டாலம் ஊராட்சியில் ஸ்டார் ஜங்ஷன் என்ற பகுதியில் அரசு டாஸ்மாக் கடை திறக்க போவதாக தகவல் பரவியது. மேலும் அந்தப் பகுதியில் இருந்த ஒரு பர்னிச்சர் கடையை ஒரே...