ஆபரேஷன் சிந்தூர்: ஆகாசத்தில் அணிவகுத்த ஸ்கால்ப், ஹேமர் ஏவுகணைகளின் சிறப்புகள்

0
33

பாகிஸ்​தான் மற்​றும் பாக். ஆக்​கிரமிப்பு காஷ்மீரில் இந்​திய விமானப்​படை நேற்று ஸ்கால்ப், ஹேமர் ஏவு​கணை​கள் மூலம் தாக்குதல் நடத்​தியது.

பாகிஸ்​தானில் உள்ள 9 தீவிர​வாத முகாம்​கள் மீது நேற்று 24 தாக்​குதல்​கள் நடத்​தப்​பட்​டன. இந்த தாக்​குதலில் ஸ்கால்ப் மற்​றும் ஹேமர் வகை ஏவுகணை​கள் பயன்​படுத்​தப்​பட்​டன. இதில் ஸ்கால்ப் ஏவு​கணை 1,300 கிலோ எடை கொண்டது. ரபேல் போன்ற அதிநவீன போர் விமானங்​களில் இந்த ஏவு​கணையை பொருத்த முடி​யும். இந்த ஏவு​கணை தொலை தூர இலக்​கு​களை துல்​லிய​மாக தாக்​கும். இந்த ஏவு​கணையை எம்​பிடிஏ என்ற ஐரோப்​பிய நிறு​வனம் தயாரிக்​கிறது.

பதுங்கு குழிகள் மற்​றும் முக்​கிய கட்​டிடங்​களை தகர்ப்​ப​தற்கு இந்த ஏவு​கணை பயன்​படுத்​தப்​படு​கிறது. ரஷ்​யா​வில் தாக்​குதல் நடத்த உக்​ரைன் ஸ்கால்ப் வகை ஏவு​கணை​களை பயன்​படுத்​தி​யது. ஹேமர் ஏவு​கணைகள் குறுகிய தூர தரை இலக்​கு​களை வானிலிருந்து தாக்​கு​வதற்கு பயன்​படுத்​தப்​படு​கின்​றன. இதை பிரான்ஸ் நாட்​டின் சஃப்​ரான் எலக்ட்​ரானிக்ஸ் நிறு​வனம் தயாரிக்​கிறது.

இந்த ஏவு​கணை​கள் மூலம் நிலை​யான இலக்​கு​கள் அல்​லது நகரும் இலக்​கு​கள் மீது துல்​லிய தாக்​குதல் நடத்த முடி​யும். இதில் ஜிபிஎஸ், அகச்​சிவப்பு இமேஜிங் மற்​றும் லேசர் கருவி​கள் உள்​ளன. இந்த இரண்டு வகை ஏவு​கணை​களை பயன்​படுத்​தி​தான் தீவிர​வாத மு​காம்​கள் மீது நேற்று விமானப்படை தாக்குதல் நடத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here