டெல்லி செங்​கோட்டை கார் குண்​டு​வெடிப்பு வழக்கில் என்ஐஏ நீதிமன்றத்​தில் 7,500 பக்க குற்​றப்​பத்திரிகை தாக்கல்

0
22

டெல்லி செங்​கோட்டை கார் குண்​டு​வெடிப்பு வழக்கில் 7,500 பக்க குற்​றப்​பத்​திரி​கை​ தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த வருடம் நவம்​பர் 10-ம் தேதி டெல்லி செங்​கோட்டை முன் தீவிர ​வா​தி​களின் கார் குண்​டு​வெடிப்பு நிகழ்ந்​தது. இதில் 11 பேர் உயி​ரிழந்​தனர். என்ஐஏ வசம் ஒப்​படைக்​கப்​பட்ட இந்த வழக்​கில் 10 பேர் கைதாகினர். காரை ஓட்​டிவந்து வெடிக்​கச் செய்த முக்​கிய குற்​ற​வாளி புல்​வா​மாவைச் சேர்ந்த டாக்​டர் உமர் உன் நபி என தெரிய​வந்​தது.

டெல்லி பாட்​டி​யாலா ஹவுஸில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதி​மன்றத்தில் வழக்​கின் விசா​ரணை தொடர்ந்​தது. இதில் நேற்று தாக்​கல் செய்​யப்​பட்ட 7,500 பக்க குற்​றப்​பத்​திரி​கை​யில் பல முக்கிய சதிகளை என்ஐஏ அம்​பலப்​படுத்தி உள்​ளது.

வெடிபொருட்​கள், ட்ரோன்​-​ராக்​கெட் தாக்​குதலுக்​கான தயாரிப்புகள், ஆயுதங்​கள் உள்​ளிட்ட மீட்​கப்​பட்ட பொருட்​களு​டன் 588 சாட்​சிகளின் டிஜிட்​டல் ஆதா​ரங்​களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. என்ஐஏ குற்​றப் ​பத்​திரி​கை​யில் இதுவரை வெளிவ​ராத புதிய தகவல்​களும் இடம் பெற்​றுள்​ளன. இதன்​படி, டெல்லி கார் குண்​டு​வெடிப்பு ‘ஆபரேஷன் ஹெவன்லி ஹிந்த்’ எனும் பெயரில் நடத்​தப்​பட்​டுள்​ளது.

அல்​-​காய்​தாவுடன் தொடர்​புடைய ‘அன்​சார் கஸ்​வத்​-உல்​-ஹிந்த்’ என்ற தீவிர​வாத அமைப்​பின் ஒரு பிரி​வின​ரால் இந்​தத் தாக்​குதல் நடத்​தப்​பட்​ட​தாக என்ஐஏ கூறுகிறது. இவர்​களின் நோக்​கம் டெல்லி​யில் குண்​டு​வெடிப்பு நிகழ்த்​து​வது மட்​டுமல்ல, இந்தியாவில் பெரிய அளவி​லான ஒரு ஜிஹாதி வலை​யமைப்பை நிறு​வி, நாட்​டின் ஜனநாயகத்தை சீர்​குலைப்​பது எனக் குற்​றப்​பத்திரி​கை​யில் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

ஹரி​யா​னா​வின் ஃபரிதாபாத்தில் உள்ள அல்​-ஃபலா பல்​கலைக்​கழகத்​தில் மருத்துவத் துறை உதவிப் பேராசிரிய​ரான டாக்​டர் உமர் இந்​தத் தாக்​குதலை முன்​னின்று நடத்தி உள்​ளார்.

குற்​ற​வாளி​கள் தீவிர​வாத நடவடிக்​கைகளை மேற்​கொள்ள தங்கள் தொழிலை​யும் தொழில்​நுட்ப அறிவை​யும் பயன்​படுத்தி உள்ளனர். சிலர் ரசாயனப் பொருட்​களைப் பெறு​வ​தி​லும், மற்றவர்கள் டிஜிட்​டல் தகவல் தொடர்​பு​களி​லும், இன்​னும் சிலர் புதிய உறுப்பினர்​களைச் சேர்ப்​ப​தி​லும் ஈடு​பட்​டுள்​ளனர். 2022-ல் ஸ்ரீநகரில் நடை​பெற்ற ஒரு ரகசி​யக் கூட்​டத்​தில் இந்த சதித்​திட்டத்துக்​கான அடித்​தளம் இடப்​பட்​டுள்​ளது.

குற்​ற​வாளி​களில் சிலர் துருக்கி வழி​யாக ஆப்​கானிஸ்​தான் சென்று அங்கு தீவிர​வாதப் பயிற்சி பெற முயன்​றுள்​ளனர். இந்த முயற்சி தோல்​வியடைந்​த​போது, அவர்​கள் இந்​தி​யா​வுக்​குள் ஒரு புதிய பிரிவை உரு​வாக்கி உள்​ளனர். சில சந்​தேக நபர்​கள் இன்னும் தலைமறை​வாக இருப்​ப​தாக​வும் அவர்​களை பிடிக்க சோதனை​கள் தொடர்​வ​தாக​வும் என்ஐஏ தெரி​வித்​துள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here