கொல்லங்கோடு அருகே பாத்திமாநகர், குரியன் விளையில் பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பந்திருநாழி சர்க்கரை பொங்கால் வழிபாடு நாளை (9-ம் தேதி) காலை கணபதி ஹோமம், சிறப்பு பூஜை, தீபாராதனை, மதியம் உச்ச பூஜை, மாலை முத்துக்குடை அணிவகுப்புடன் தேவியின் சுயம்பு எழுந்தருளல். பந்திருநாழி சர்க்கரை பொங்கால் வழிபாடு, அலங்கார தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. மே 10-ம் தேதி மறு கொடை பூஜைகள் நடக்கிறது. அன்றைய தினம் காலை நிர்மால்லியம், அபிஷேகம், அஷ்ட திருவிய மஹா கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள், சமூக பொங்கால், அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.