உலக இந்துக்கள் வணங்கும் கடவுளான ஸ்ரீ ஐயப்ப சுவாமியையும் மற்றும் மாலையிடும் ஐயப்ப பக்தர்களையும் அவதூறாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வீடியோ போட்டு அனைத்து இந்துக்களின் மனதையும் புண்படுத்திய உடையப்பன் குடியிருப்பைச் சேர்ந்த சுபன் என்பவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று (டிசம்பர் 4) குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்து தமிழர் கட்சி மாவட்ட தலைவர் ராஜன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.