கிள்ளியூர் தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் கருப்பசாமி மற்றும் குழுவினர் நேற்று இரவு 7:30 மணிக்கு நித்திரவிளை அருகே வாவறை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த ஒருவரிடம் இருந்து ரூ. 3.24 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. நில புரோக்கர் எனத் தெரிவித்துள்ள அவர், நிலத்திற்கான அட்வான்ஸ் தொகையை எடுத்துச் செல்வதாகக் கூறியுள்ளார். உரிய ஆவணங்கள் இல்லாததால், பணம் கிள்ளியூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.














