ஆரல்வாய்மொழி பேரூராட்சியில் அரசு கனரக வாகன எடைமேடையை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டுவரக் கோரி, பேரூராட்சித் தலைவர் சி. முத்துக்குமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினிடம் நேற்று மனு அளித்தார். இந்த எடைமேடை செயல்படுவதன் மூலம் பேரூராட்சிக்குக் கூடுதல் வருவாய் கிடைக்கும் என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இக்கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகக் காவல் கண்காணிப்பாளர் உறுதியளித்துள்ளார்.















