குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்குவது தொடர்பாக துறை அலுவலர்களுடன் நேற்று (மே.8) கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. நடைபெற்ற கூட்டத்தில் துணை இயக்குநர் குடும்ப நலத்துறை மரு. ரவிக்குமார், தனித்துணை ஆட்சியர் சமூகபாதுகாப்பு திட்டம் சேக் அப்துல் காதர், உதவி இயக்குநர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.