குளச்சல் துறைமுகத் தெருவைச் சேர்ந்த சகாய பிரபின் (34) என்பவர் நேற்று இரவு மருந்து வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பும்போது, பீச் ரோடு சந்திப்பில் சொகுசு கார் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பிரவீனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். குளச்சல் போலீசார் சொகுசு கார் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.















