கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த ஐடா ராஜபாய் (65) என்பவரின் மூக்கை, அவரது மருமகள் அசியா (27) வாக்குவாதத்தின் போது குத்தி உடைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஐடா ராஜபாய் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக கொல்லங்கோடு போலீசார் மருமகள் அசியா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடப்பது வழக்கம்.














