குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து அதிகரிப்பு: பொதுமக்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்

0
23

‘குற்​றச்​சம்​பவங்​கள் அதி​கரித்து வரு​வ​தால் மக்​களின் பாது​காப்பை உறு​தி​செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும்’ என்று பாமக நிறு​வனர் ராமதாஸ் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக, அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தின் பல பகு​தி​களில் கடந்த சில நாட்​களாக தொடர்ந்து நடை​பெற்று வரும் கொலை, தாக்​குதல், பெண்​கள் மற்​றும் குழந்​தைகள் மீதான வன்​கொடுமை​கள், பழிக்​குப் பழி வாங்​கும் நோக்​கில் நடை​பெறும் வன்​முறைச் சம்​பவங்​கள் போன்​றவை பொது​மக்​களிடையே அச்​சத்​தை​யும் பாது​காப்​பின்​மை​யை​யும் ஏற்​படுத்​தி​யுள்​ளன.

அதனால், மாநிலம் முழு​வதும் சட்​டம் – ஒழுங்கு நிலையை முழு​மை​யாகச் சீராய்வு செய்​து, குற்​றச்​சம்​பவங்​களைத் தடுக்​கும் வகை​யில் சிறப்பு நடவடிக்​கைகள் மேற்​கொள்ள வேண்​டும். ஒவ்​வொரு மாவட்​டத்​தி​லும் அனுபவ​மிக்க உளவுத்​துறை காவல் அலு​வலர்​களை நியமித்​து, முன்​கூட்​டியே குற்ற திட்​டங்​கள் மற்​றும் வன்​முறை செயல்​கள் குறித்து தகவல் சேகரித்து குற்​றத்​தடுப்பு நடவடிக்​கைகளை வலுப்​படுத்த வேண்​டும்.

மாணவர்​கள் மற்​றும் இளைஞர்​களை நல்​வழிப்​படுத்த ஒருங்​கிணைந்த சிறப்​புக் குழுவை அமைத்து செயல்பட வேண்​டும். பெண்​கள் மற்​றும் குழந்​தைகளுக்​கான பாது​காப்பு நடவடிக்​கைகளை அனைத்து மாவட்​டங்​களி​லும் தீவிரப்​படுத்த வேண்​டும்.

நீதி​மன்​றங்​கள், கல்வி நிறு​வனங்​கள், பேருந்து நிலை​யங்​கள் மற்​றும் மக்​கள் அதி​கம் கூடும் பகு​தி​களில் கூடு​தல் காவல் பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்பட வேண்​டும். மக்​களின் உயிர் மற்​றும் சொத்து பாது​காப்பை உறுதி செய்​வது எந்த அரசுக்​கும் மிக முக்​கிய​மான பொறுப்​பாகும்.

தமிழகத்​தில் மக்​கள் அச்​சமின்​றி, பாது​காப்​பாக வாழக்​கூடிய சூழலை உரு​வாக்க தமிழக அரசு மற்​றும் காவல்​துறை உடனடி​யாக நடவடிக்​கைகளை மேற்​கொள்ள வேண்​டும். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here