கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே வேம்பனூர் கிராமத்தில் தென்னை, வாழை, கோக்கோ, நல்ல மிளகு, சேனைக்கிழங்கு, மரவள்ளி உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயி சிறுமணி தோட்டத்தினை மாவட்ட கலெக்டர் அழகு மீனா நேற்று நேரில் ஆய்வு செய்தார். சொட்டு நீர் பாசனம் மூலம் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாய பணிகள் குறித்து அவரிடம் ஆட்சியர் கேட்டறிந்தார்.