மார்த்தாண்டம் காவல்துறை, போக்குவரத்து காவல்துறை மற்றும் மார்த்தாண்டம் ரோட்டரி கிளப், புலனாய்வு அரசு செய்தி தொடர்பகம் இணைந்து போலீசார் மற்றும் பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நேற்று மார்த்தாண்டம் குறும்பேற்றி அம்மன் மண்டபத்தில் நடைபெற்றது. மார்த்தாண்டம் ரோட்டரி கிளப் தலைவர் சரவணன் வரவேற்றார். மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் உதய ரேகா வேளாங்கண்ணி முன்னிலை வகித்தார். டிஎஸ்பி நல்லசிவம் சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் விஜயகுமார், ரோட்டரி கிளப் மூத்த வழக்கறிஞர் ராமச்சந்திரன் நாயர் மற்றும் டாக்டர்கள் வினோத்குமார், பிரதீப் மற்றும் ஊர் காவல் படை மண்டல கமாண்டர் பிரகாஷ் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.