கடந்த ஆண்டு நடைபெற்ற யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாடி இருந்தார் ரைலி நார்டன். இந்நிலையில், இத்தாலியில் நடைபெற்று வரும் நடப்பு ரக்பி யு20 உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை அவர் இறுதிப் போட்டி வரை கேப்டனாக வழிநடத்தி முன்னேற செய்துள்ளார்.
19 வயதான அவர் தென் ஆப்பிரிக்காவின் அபார விளையாட்டு திறன் படைத்த இளம் வீரர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார். கிரிக்கெட்...
எம்சிசி முருகப்பா ஹாக்கிப் போட்டியின் அரை இறுதியில் இந்தியன் ரயில்வேஸ், ஐஓசி அணிகள் மோதவுள்ளன.
சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நாளை (ஜூலை 19) மாலை 4 மணிக்கு இந்த அரை இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள 2-வது அரை இறுதிப் போட்டியில் இந்திய கடற்படை அணியும் (ஐஎன்என்), இந்திய ராணுவ அணியும் (ஐஎன்ஏ) மோதவுள்ளன.
முன்னதாக, நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ரயில்வே விளையாட்டு...
சென்னையில் அக்டோபர் 27 முதல் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி(டபிள்யூடிஏ) நடைபெறவுள்ளது.
அக்டோபர் 27-ம் தேதி முதல் நவம்பர் 2-ம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் இந்த சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ளது.
இந்த மகளிர் டென்னிஸ் போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 32 வீராங்கனைகளும் (ஒற்றையர் பிரிவு), இரட்டையர் பிரிவில் 16 ஜோடிகளும் பங்கேற்று விளையாட உள்ளனர். போட்டியில்...
பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 போட்டிகளில் இடம் பெறுவதற்காக தற்போதுள்ள வீரர்கள் தேசிய அணியை ஒரு படிக்கல்லாக பயன்படுத்துகின்றனர் என்று மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் லாரா குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு இந்தியத் தீவுகள், ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்த 3 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று மேற்கு இந்தியத் தீவுகள் அணியை 3-0 என்ற கணக்கில்...
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரீத் பும்ரா விளையாட வேண்டும் என்று இந்திய அணி முன்னாள் வீரர் இர்பான் பதான் யோசனை தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஹெட்டிங்லியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும், பர்மிங்ஹாமில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன.
இதையடுத்து கடந்த வாரம்...
ஸ்பெயின் வீரர் லாமின் யாமல், பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், அவருக்கு மெஸ்ஸியின் 10-ம் எண் ஜெர்ஸியை வழங்கியுள்ளது அந்த அணி நிர்வாகம்.
கால்பந்து உலகின் வருங்கால நட்சத்திரமாக அறியப்படுகிறார் 18 வயதான லாமின் யாமல். அதற்கான தகுதியை கிளப் அளவிலும், சர்வதேச அளவிலும் அவர் நிரூபித்துள்ளார். 2023 சீசன் முதல் பார்சிலோனா சீனியர் அணியில் அவர் விளையாடி வருகிறார்.
பார்சிலோனா அணிக்காக 18 கோல்கள் பதிவு செய்துள்ளார்....
3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை 27 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து 176 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என முழுமையாக வென்றது ஆஸ்திரேலிய அணி. மிட்செல் ஸ்டார்க் முதல் 15 பந்துகளில் 5 விக்கெட்களை வீழ்த்தியும், ஸ்காட் போலண்ட் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியும் சாதனை படைத்தனர்.
மேற்கு இந்தியத் தீவுகள் - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது பகலிரவு...
மாமல்லபுரத்தில் ஆக.3 முதல் 12 வரை ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப்: 20 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்பு
admin - 0
சென்னை மாமல்லபுரத்தில் வரும் ஆகஸ்ட் 3 முதல் 12 வரை ஆசிய சர்ஃபிங் கூட்டமைப்பு சார்பில் 4-வது ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் நடத்தப்பட உள்ளது. இந்த போட்டியை தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு வாரியம் ஆகியவை இணைந்து ரூ.3.30 கோடி செலவில் நடத்துகிறது. இந்தத் தொடரில் இந்தியா, ஜப்பான், கொரியா, குவைத், லெபனான், சவுதி அரேபியா, சீன தைபே, உஸ்பெகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட...
அமெரிக்காவில் நடைபெற்ற மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி எம்ஐ நியூயார்க் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
கலிபோர்னியாவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த எம்ஜ நியூயார்க் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டிகாக் 46 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 77 ரன்கள்...
எம்சிசி - முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.
இதில் ‘ஏ’ பிரிவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியன் ரயில்வே 4-2 என்ற கோல் கணக்கில் மகாராஷ்டிரா அணியை வீழ்த்தியது. இந்தியன் ரயில்வே அணி தரப்பில் குர்சாகிப்ஜித் சிங் (18-வது நிமிடம்), தர்ஷன் கவ்கர் (53-வது நிமிடம்), ஷேஷ கவுடா (56-வது நிமிடம்), சண்முகம் (57-வது நிமிடம்)...








