ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நேற்று 3-வது சுற்றின் டை-பிரேக்கர் ஆட்டங்கள் நடைபெற்றன.
டை-பிரேக்கர் சுற்றின் 2-வது ஆட்டத்தில் இந்தியாவின் கார்த்திக் வெங்கட்ராமன், ரொமேனியாவைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் போக்டான் டேனியல் டீக்குடன் மோதினார். 43-வது நகர்த்தலில் போக்டான் டேனியல் டீக்கை தோற்கடித்தார் கார்த்திக். இதன்மூலம் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் கார்த்திக் வெங்கட்ராமன்.
3-வது சுற்றின் டை பிரேக்கர் ஆட்டத்தில் இந்திய வீரர் விதித்...
என்எஸ்டபிள்யூ ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீராங்கனை ராதிகா சுதந்திர சீலன் 2-வது இடம் பிடித்தார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ராதிகாவும், கனடாவின் இமான் ஷாஹீனும் மோதினர்.61 நிமிடங்கள் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இமான் ஷாஹீன் 11-8, 11-3, 4-11, 10-12, 12-10 என்ற புள்ளிகள் கணக்கில் ராதிகாவை வீழ்த்தி பட்டம் வென்றார்.
முதல் 2 செட்களை இழந்த ராதிகா, அடுத்த 2 செட்களில் சுதாரித்து விளையாடி வெற்றி...
ஏதென்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் ஏதென்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வந்தது.
நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றில் ஜோகோவிச் 4-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் இத்தாலி வீரர் லோரென்சோ முசெட்டியை வீழ்த்தி பட்டத்தைக் கைப்பற்றினார். அவர் வெல்லும் 101-வது பட்டமாகும் இது.
ஹாங்காங் சிக்ஸஸ் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் குவைத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
ஹாங்காங் நாட்டிலுள்ள மாங்காக்கில் ஹாங்காங் சிக்ஸஸ் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வந்தது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான், குவைத் அணிகள் நேற்று மோதின. இதில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 6 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் குவித்தது.
தொடக்க வீரர் அப்துல் சமத் 13 பந்துகளில் 42...
எதிர்வரும் ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான சீசனில் மகேந்திர சிங் தோனி விளையாடுவார் என சிஎஸ்கே தரப்பு உறுதி செய்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் என்றாலே பெரும்பாலானவர்களுக்கு சட்டென நினைவுக்கு வரும் அணிகளில் சிஎஸ்கேவும், வீரர்களில் தோனியும் இருக்கலாம். கடந்த 2020-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார். அதன் பின்னர் ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
இந்தச் சூழலில் கடந்த சில ஐபிஎல் சீசன்கள் தொடங்குவதற்கு முன்னர்...
சர்வதேச கால்பந்து களத்தில் இருந்து மீண்டும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் இந்தியாவின் சுனில் சேத்ரி. கடந்த மார்ச் மாதம் தனது ஓய்வு முடிவுக்கு விடை கொடுத்துவிட்டு சுனில் சேத்ரி களம் திரும்பியது குறிப்பிடத்தக்கது.
ஆசிய கோப்பை 2027-க்கான கடைசி தகுதி சுற்றில் இருந்து இந்தியா வெளியேறியது. இதையடுத்து ஓய்வு பெறுவதாக சுனில் சேத்ரி அறிவித்துள்ளார். கடந்த 2024-ல் அறிவித்த ஓய்வு முடிவை திரும்ப பெற்றுக்கொண்ட பின்னர் மீண்டும் இந்திய அணிக்காக...
பெங்களூரு: இந்தியா ‘ஏ’ - தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்தியா ‘ஏ’ அணி 77.1 ஓவர்களில் 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
கே.எல்.ராகுல் 19, அபிமன்யு ஈஸ்வரன் 0, சாய் சுதர்சன் 17, தேவ்தத்...
ஆன்லைன் சூதாட்டச் செயலியை விளம்பரப்படுத்தியதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவண் மீது அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.
விசாரணையில், அவர்கள் இருவரும் சூதாட்டச் செயலியை விளம்பரப்படுத்தியதில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றது தெரியவந்தது. இதனையடுத்து, சுரேஷ் ரெய்னாவின் ரூ. 6.64 கோடி மதிப்பிலான சொத்துகளும் (மியூச்சுவல் ஃபண்ட்), ஷிகர் தவணின் ரூ.4.5 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளையும் அமலாக்கத் துறை முடக்கி உள்ளது.
இந்த...
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூஸிலாந்து அணி.
ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மார்க் சாப்மேன் 28 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் விளாசினார்.
ரோமாரியோ...
உலக டென்னிஸ் தரவரிசையில் ஆடவர் பிரிவு மற்றும் இரட்டையர் பிரிவில் முதல் 8 இடங்களில் உள்ள வீரர்கள் கலந்து கொள்ளும் ஏடிபி பைனல்ஸ் தொடர் இத்தாலியின் துரின் நகரில் வரும் 9-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடருக்கான டிரா நேற்று அறிவிக்கப்பட்டது.
இதில் ஒற்றையர் பிரிவில் கலந்துகொள்ளும் 8 வீரர்களும் இரு பிரிவுளாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஜிம்மி கானர்ஸ் பிரிவில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், செர்பியாவின்...










