இந்திய அரசின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் உள்ள பருத்தித்துறை துறைமுகத்தை மேம்படுத்த இலங்கை ஒப்புதல்
admin - 0
இலங்கையில் உள்ள பருத்தித்துறை மீன்பிடி துறைமுகத்தை இந்திய அரசு உதவியுடன் மேம்படுத்த அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகம், இலங்கையின் பிபகுதிகளை இணைக்கும் முக்கிய இடமாக உள்ளது. இந்தியாவுக்கு மிக அருகில், ராமேசுவரம் மற்றும் வேதாரண்யத்திலிருந்து 40 கடல் மைல் தொலைவில் உள்ளது.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது விடுதலைப் புலிகளின் கப்பல் படையை வீழ்த்துவதற்காக, அந்நாட்டு ராணுவம் நடத்திய தாக்குதல்களில் பருத்தித்துறை துறைமுகம்...
செப்.22 முதல் அக்.1-ம் தேதி வரை ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு: பொதுமக்கள் பார்வையிடலாம்
admin - 0
கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ‘நவராத்திரி கொலு செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 1-ம் தேதிவரை நடைபெற உள்ளது. இந்த கொலு கொண்டாட்டத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைக்கிறார்.
தினமும் மாலை 4 முதல் 5 மணிவரை நடைபெறும் வழிபாடு நிகழ்ச்சியிலும் மாலை 5 முதல் 6 மணி வரை நடைபெறும் கலாச்சார நிகழ்ச்சிகளிலும் தனிநபர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பார்வையாளர்களாக கலந்துகொள்ளலாம்.
ஆர்வமுள்ள தனிநபர்கள், பொதுமக்கள் மற்றும் கல்வி...
என்டிஏ கூட்டணியில் சில வருத்தங்கள் இருந்தாலும் விரைவில் முடிவுக்கு வரும்: அண்ணாமலை கருத்து
admin - 0
தேசிய ஜனநாயக கூட்டணியில் சில வருத்தங்கள் இருந்தாலும், அவை விரைவில் முடிவுக்கு வரும் என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு டிடிவி.தினகரன், ஓபிஎஸ் மீண்டும் வர வேண்டும், கூட்டணியில் தொடர வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். வருத்தத்தில் ஒரு முடிவை எடுத்திருப்பார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியில் சில வருத்தங்கள் இருந்தாலும்,...
சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை போலீஸார் கைது செய்தனர். சென்னையில் ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் துாய்மைப் பணியை, தனியார் நிறுவனத்திடம் மாநகராட்சி ஒப்படைத்துள்ளதை கண்டித்தும், தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், துாய்மைப் பணியாளர்கள் ரிப்பன் மாளிகை முன்பு கடந்த ஆக.1-ம் தேதிமுதல் தொடர்ந்து 13 நாட்கள் போராட்டம் நடத்தினர்.
நீதிமன்ற உத்தரவால், நள்ளிரவில் இவர்கள் கைது செய்து, குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தப்பட்டனர்....
தமிழகத்தில் கடந்த 45 மாதங்களில் 6,700 கொலைகள் நடந்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார். திருவாரூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: சில ஆயிரம் கோடியை முதலீடாகப் பெறுவதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் இங்கிலாந்து, ஜெர்மனி போக வேண்டிய அவசியமில்லை.
ஏற்கெனவே, முதல்வர் குடும்பத்துடன் வளைகுடா நாடுகளுக்குச் சென்றார். அங்கிருந்து எவ்வளவு முதலீடு கொண்டுவந்தார் என்பது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தில் பெரியார் படத்தை திறந்துவைத்தேன்...
“மோடியும் ராதுவும் நாற்பதாண்டு கால நண்பர்கள்..!” – சிபிஆரின் சகோதரர் சி.பி.குமரேசன் பெருமித பேட்டி
admin - 0
எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி இருக்கிறது திருப்பூர் ஷெரீப் காலனியில் உள்ள சி.பி.ராதாகிருஷ்ணனின் அண்ணன் சி.பி. குமரேசனின் வீடு. பிறந்தது, வளர்ந்தது, வசிப்பது எல்லாம் அதே பகுதி தான். மனைவி வசந்தியுடன் நம்மை வரவேற்ற குமரேசன், முதல் முறையாக ’இந்து தமிழ் திசை’யிடம் மனம் திறந்தார்.
உங்கள் குடும்பம் பற்றி..?
அப்பா பொன்னுசாமி கவுண்டர். அம்மா ஜானகி. நான், தம்பி ராது (சிபிஆரை அப்படித்தான் அழைக்கிறார்கள்). தங்கை மரகதவள்ளி என உடன்பிறந்தவர்கள் மூன்று...
“திமுக-விடம் இம்முறை கூடுதல் தொகுதிகளை கேட்டுப் பெறுவோம்” என்கிறார் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம். அதேசமயம், மீண்டும் கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதியைக் கேட்டுப் பெற அதிக முனைப்புக் காட்டி வருகிறது சிபிஎம். அதேபோல், தங்களுக்குச் சாதகமான புதுக்கோட்டை அல்லது ஆலங்குடி தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பதில் அழுத்தமாக இருக்கிறது சிபிஐ. இதில் சிக்கல் என்னவென்றால் ஆலங்குடி அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனின் தொகுதி.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் இடதுசாரி...
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் ஆதரவாளரும், முன்னாள் எம்.பி.யுமான சத்தியபாமாவையும் கட்சி பொறுப்புகளில் இருந்து பொதுச்செயலாளர் பழனிசாமி நீக்கியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், 2025-ம் ஆண்டு தொடக்கம் முதலே பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்தார்.
கோவையில் விவசாயிகள் சங்கம் சார்பில் பழனிசாமிக்கு நடத்திய பாராட்டு விழாவில், ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை எனக்கூறி புறக்கணித்தார். பழனிசாமி மீதான அதிருப்தி தொடர்பாக டெல்லி சென்று பாஜக மூத்த தலைவர்களையும் சந்தித்து பேசினார்....
செங்கோட்டையன் மீதான நடவடிக்கையை கண்டித்து 1,000-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் ராஜினாமா
admin - 0
செங்கோட்டையன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையைக் கண்டித்து 1,000-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தனர்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்கும் முயற்சியை 10 நாட்களில் தொடங்க வேண்டும் என பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு கெடுவிதித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின், அமைப்பு செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவிகளைப் பறித்து பழனிசாமி அறிவித்தார். அவருடன், கோபி, நம்பியூரைச் சேர்ந்த சில நிர்வாகிகளும் நீக்கப்பட்டனர்.
இந்நிலையில்,...
அதிமுகவை பிளவுபடுத்துவதில் பாஜக பின்புலம் உள்ளது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் குற்றச்சாட்டு
admin - 0
அதிமுகவை பிளவுபடுத்துவதில் பாஜகவின் பின்புலம் உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறினார்.
திருவாரூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அதிமுகவில் இருந்து பிரிந்து போனவர்கள் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்று கூறி, அதற்காக பழனிசாமிக்கு காலக்கெடு விதித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். ஏற்கெனவே சசிகலா, டிடிவி.
தினகரன், ஓ.பன்னீர்செல்வம் என பல குழுக்களாக இருக்கும் அதிமுகவில், புதிதாக செங்கோட்டையன் என்ற...










