Google search engine
பள்​ளி​களில் கணிதம், அறி​வியல் ஆசிரியர்​கள் உடற்​கல்வி பாட​வேளையை கடன் வாங்​காதீர்​கள் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். பள்​ளிக் கல்​வித் துறை சார்​பில் 2024-25ம் கல்​வி​யாண்​டில் நடை​பெற்ற சர்​வதேச (135), தேசிய (1,350), மாநில (4,293) அளவி​லான விளை​யாட்டு போட்​டிகளில் பதக்​கம் வென்ற 5,788 மாணவ, மாணவிகளுக்குபாராட்டு சான்​றிதழ் வழங்​கும் விழா சென்னையில் நேற்று நடை​பெற்​றது. துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தலைமை வகித்து மாணவர்​களுக்கு சான்​றிதழ்​களை...
நல்ல, திறமை​யான நீதி நிர்​வாகத்​துக்​காக​வும் நீதிப​தி​கள் அடிக்​கடி இடமாற்​றம் செய்​யப்​படு​வது உண்டு என சென்னையி​லிருந்து ஆந்​திரா உயர் நீதி​மன்​றத்​துக்கு இடமாறு​தலாகி செல்​லும் நீதிபதி பட்டு தேவானந்த் தெரி​வித்​தார். சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பணி​யாற்​றிய நீதிபதி பட்டு தேவானந்த் ஆந்​திரா உயர் நீதி​மன்​றத்​துக்​கும், விவேக்​கு​மார் சிங் மத்திய பிரதேச உயர் நீதி​மன்​றத்​துக்​கும் இடமாறு​தல் செய்​யப்​பட்​டுள்​ளனர். இவர்​களுக்​கான வழியனுப்பு விழா நேற்று சென்னை உயர் நீதி​மன்ற கலை​யரங்​கில் தலைமை நீதிபதி எம்​.எம்​.வஸ்​தவா தலை​மை​யில்...
அரசுப் பேருந்து கட்​ட​ணத்தை உயர்த்​தும் எண்​ணம் இல்லை என்று போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் எஸ்​.எஸ்​.சிவசங்கர் கூறி​னார். அரியலூரில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: பேருந்து கட்ட​ணம் உயர்த்​தப்படும் என வதந்தி பரவுவது வழக்​க​மாக உள்​ளது. இதை ஒவ்​வொரு முறை​யும் மறுத்து வரு​கிறோம். ஏழை மக்​கள் மீது சுமையை ஏற்​றக்​கூ​டாது என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வுரைவழங்கி இருக்​கிறார். எனவே, பேருந்து கட்​ட​ணத்தை உயர்த்​தும் எண்​ணம் இல்லை. அதி​முகவை முழு​வதும் ஆக்​கிரமித்​து, அந்த...
திமுகவினர் நடத்தி வரும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையின் போது, ‘ஓடிபி’ (ஒன் டைம் பாஸ்வேர்டு) எண் பெற விதிக்கப்பட்ட தடையை விலக்கக் கோரி, திமுக சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் டி.அதிகரையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையின்போது ஓடிபி எண்...
தீவிர அரசியலில் ஈடுபட தடையாக இருப்பதாகச் சொல்லி தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான நடிகை குஷ்பு அதன் பிறகும் அமைதியாகவே இருக்கிறார். தமிழக அரசியல் களம் பரபரப்பாகி வரும் நிலையில், ‘இந்து தமிழ் திசை’க்காக அவரிடம் பேசினோம். குஷ்பு இப்போது பாஜக-வில் தான் இருக்கிறாரா? பத்திரிகை, ஊடகங்களில் என் முகம் தெரிந்தால் தான் நான் பாஜக-வில் இருக்கிறேன் என்பது இல்லை. நான் இப்போது...
 தமிழகத்​தில் கூட்​டணி ஆட்​சிக்கு ஆசைப்​படு​வது தவறோ, பாவமோ இல்லை என காங்​கிரஸ் கட்​சி​யின் மூத்த தலை​வர் திரு​நாவுக்​கரசர் தெரி​வித்​தார். திருச்​சி​யில் நேற்று அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறியது: தமிழகத்​தில் கூட்​டணி ஆட்சி என்ற கருத்து தற்​போது அதி​கள​வில் பேசப்பட்டு வரு​கிறது. மத்​தி​யில் பாஜக தலை​மையி​லான ஆட்சி கூட்​டணி ஆட்சிதான். இதற்கு முன்பு வாஜ்​பாய், நரசிம்​ம​ராவ் ஆகியோர் பிரதமர்​களாக இருந்​த​போதும் கூட்​டணி ஆட்சி தான் நடந்​தது. பல மாநிலங்​களி​லும் கூட்​டணி ஆட்சி நடந்து...
தமிழகத்​துக்கு கல்வி நிதி தர மத்​திய அரசு மறுக்​கிறது என்​று, சென்​னை​யில் நடை​பெற்ற மகளிர் கல்​லூரி பட்டமளிப்பு விழா​வில், உயர்​கல்​வித்​துறை அமைச்​சர் கோவி.செழியன் குற்​றம்​சாட்​டி​னார். சென்​னை, ராணி மேரி கல்​லூரி​யின் 105-வது பட்டமளிப்பு விழா, நேற்று நடை​பெற்​றது. இதில் உயர்​கல்​வித் துறை அமைச்​சர் கோவி.செழியன் கலந்து கொண்டு சிறப்​பிடம் பெற்ற 100 மாணவி​களுக்கு பதக்​கங்​கள் அணி​வித்து பட்​டங்​களை வழங்​கி​னார். மொத்​தம் 1,424 பேருக்கு பட்​டம் வழங்​கப்​பட்​டது. தொடர்ந்து அமைச்​சர் கோவி.செழியன் பேசி​ய​தாவது:தமிழகத்​தில்...
சென்​னை​யில் ஆக.12-ம் தேதி நடக்​க​வுள்ள கியூபா நாட்​டின் முன்​னாள் அதிபர் மறைந்த பிடல் காஸ்ட்​ரோ​வின் பிறந்​த​நாள் நூற்​றாண்டு விழா​வில் பங்​கேற்க வரு​மாறு முதல்​வர் மு.க.ஸ்​டா​லினை சந்​தித்து மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம் நேற்று அழைப்பு விடுத்​தார். அமெரிக்கா உள்​ளிட்ட நாடு​கள் கியூபா மீது நடத்தி வரும் தாக்​குதல், பொருளா​தார தடை ஆகிய​வற்றை கண்​டித்​தும், கியூ​பாவுக்கு ஆதரவு தெரி​வித்​தும் கியூபா ஆதரவு ஒரு​மைப்​பாட்​டுக்​குழு அமைக்​கப்​பட்டு செயல்​பட்டு வரு​கிறது. இதன் ஒரு...
ஐந்து ஆண்​டு​கள் நன்​றாக பணி​யாற்றிய கேட் கீப்​பர்​களை இன்​டர்​லாக் செய்​யப்​ப​டாத கேட்​களில் பணி​யமர்த்த தெற்கு ரயில்வே நிர்​வாகம் அறி​வுறுத்​தி​யுள்​ளது. கடலூர் மாவட்​டம், ஆலப்​பாக்​கம் ரயில்வே கேட் பகு​தி​யில் கடந்த 8-ம் தேதி பள்ளி வாக​னம் மீது விழுப்​புரம் - மயி​லாடு​துறை பயணி​கள் ரயில் மோதி​ய​தில் 3 மாணவர்​கள் உயி​ரிழந்​தனர். இந்த சம்​பவத்​தைத் தொடர்ந்​து, லெவல் கிராசிங் பகு​திகளில் பாது​காப்பு அம்​சங்​களை மேம் ​படுத்​து​வது, இன்​டர்​லாக்​கிங் தொழில்நுட்​பத்​துக்கு மாற்​றப்​ப​டாத லெவல் கிராசிங்...
 நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு தினத்​தையொட்டி அவரது படத்​துக்கு பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​திய நிலை​யில், காங்​கிரஸ் கட்​சி​யினர் அன்​ன​தானம் வழங்​கினர். நடிகர் சிவாஜி கணேசனின் 24-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்​கப்​பட்​டது. இதையொட்டி சென்னை அடை​யாறில் உள்ள சிவாஜி கணேசன் மணிமண்​டபத்​தில் சிவாஜி​யின் சிலைக்கு மாலை அணிவிக்​கப்​பட்​டு, அதன் அருகே அவரது படம் அலங்கரித்து வைக்​கப்​பட்​டிருந்​தது. சிவாஜி கணேசனின் மகனும், நடிகரு​மான பிரபு,...