பள்ளிகளில் கணிதம், அறிவியல் ஆசிரியர்கள் உடற்கல்வி பாடவேளையை கடன் வாங்காதீர்கள் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2024-25ம் கல்வியாண்டில் நடைபெற்ற சர்வதேச (135), தேசிய (1,350), மாநில (4,293) அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற 5,788 மாணவ, மாணவிகளுக்குபாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்து மாணவர்களுக்கு சான்றிதழ்களை...
நல்ல திறமையான நீதி நிர்வாகத்துக்காகவும் நீதிபதிகள் இடமாறுதல் செய்யப்படுவது உண்டு: நீதிபதி பட்டு தேவானந்த் கருத்து
admin - 0
நல்ல, திறமையான நீதி நிர்வாகத்துக்காகவும் நீதிபதிகள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவது உண்டு என சென்னையிலிருந்து ஆந்திரா உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதலாகி செல்லும் நீதிபதி பட்டு தேவானந்த் தெரிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதி பட்டு தேவானந்த் ஆந்திரா உயர் நீதிமன்றத்துக்கும், விவேக்குமார் சிங் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்துக்கும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான வழியனுப்பு விழா நேற்று சென்னை உயர் நீதிமன்ற கலையரங்கில் தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா தலைமையில்...
அரசுப் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார். அரியலூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பேருந்து கட்டணம் உயர்த்தப்படும் என வதந்தி பரவுவது வழக்கமாக உள்ளது. இதை ஒவ்வொரு முறையும் மறுத்து வருகிறோம். ஏழை மக்கள் மீது சுமையை ஏற்றக்கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரைவழங்கி இருக்கிறார்.
எனவே, பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை. அதிமுகவை முழுவதும் ஆக்கிரமித்து, அந்த...
திமுகவினர் நடத்தி வரும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையின் போது, ‘ஓடிபி’ (ஒன் டைம் பாஸ்வேர்டு) எண் பெற விதிக்கப்பட்ட தடையை விலக்கக் கோரி, திமுக சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் டி.அதிகரையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையின்போது ஓடிபி எண்...
“திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் விலகினால் நான் அரசியலை விட்டே விலகி விடுகிறேன்!” – குஷ்பு ‘சேலஞ்ச்’ நேர்காணல்
admin - 0
தீவிர அரசியலில் ஈடுபட தடையாக இருப்பதாகச் சொல்லி தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான நடிகை குஷ்பு அதன் பிறகும் அமைதியாகவே இருக்கிறார். தமிழக அரசியல் களம் பரபரப்பாகி வரும் நிலையில், ‘இந்து தமிழ் திசை’க்காக அவரிடம் பேசினோம்.
குஷ்பு இப்போது பாஜக-வில் தான் இருக்கிறாரா?
பத்திரிகை, ஊடகங்களில் என் முகம் தெரிந்தால் தான் நான் பாஜக-வில் இருக்கிறேன் என்பது இல்லை. நான் இப்போது...
தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு ஆசைப்படுவது தவறோ, பாவமோ இல்லை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற கருத்து தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி கூட்டணி ஆட்சிதான். இதற்கு முன்பு வாஜ்பாய், நரசிம்மராவ் ஆகியோர் பிரதமர்களாக இருந்தபோதும் கூட்டணி ஆட்சி தான் நடந்தது. பல மாநிலங்களிலும் கூட்டணி ஆட்சி நடந்து...
தமிழகத்துக்கு கல்வி நிதி தர மத்திய அரசு மறுப்பு தெரிவிக்கிறது: உயர்கல்வி அமைச்சர் குற்றச்சாட்டு
admin - 0
தமிழகத்துக்கு கல்வி நிதி தர மத்திய அரசு மறுக்கிறது என்று, சென்னையில் நடைபெற்ற மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் குற்றம்சாட்டினார். சென்னை, ராணி மேரி கல்லூரியின் 105-வது பட்டமளிப்பு விழா, நேற்று நடைபெற்றது.
இதில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொண்டு சிறப்பிடம் பெற்ற 100 மாணவிகளுக்கு பதக்கங்கள் அணிவித்து பட்டங்களை வழங்கினார்.
மொத்தம் 1,424 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் கோவி.செழியன் பேசியதாவது:தமிழகத்தில்...
சென்னையில் ஆக.12-ம் தேதி நடக்கவுள்ள கியூபா நாட்டின் முன்னாள் அதிபர் மறைந்த பிடல் காஸ்ட்ரோவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வருமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் நேற்று அழைப்பு விடுத்தார்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கியூபா மீது நடத்தி வரும் தாக்குதல், பொருளாதார தடை ஆகியவற்றை கண்டித்தும், கியூபாவுக்கு ஆதரவு தெரிவித்தும் கியூபா ஆதரவு ஒருமைப்பாட்டுக்குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இதன் ஒரு...
5 ஆண்டுகள் நன்றாக பணிபுரிந்த கேட் கீப்பர்களை இன்டர்லாக் செய்யப்படாத கேட்களில் பணியமர்த்த ரயில்வே அறிவுறுத்தல்
admin - 0
ஐந்து ஆண்டுகள் நன்றாக பணியாற்றிய கேட் கீப்பர்களை இன்டர்லாக் செய்யப்படாத கேட்களில் பணியமர்த்த தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், ஆலப்பாக்கம் ரயில்வே கேட் பகுதியில் கடந்த 8-ம் தேதி பள்ளி வாகனம் மீது விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, லெவல் கிராசிங் பகுதிகளில் பாதுகாப்பு அம்சங்களை மேம் படுத்துவது, இன்டர்லாக்கிங் தொழில்நுட்பத்துக்கு மாற்றப்படாத லெவல் கிராசிங்...
நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு தினத்தையொட்டி அவரது படத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிலையில், காங்கிரஸ் கட்சியினர் அன்னதானம் வழங்கினர்.
நடிகர் சிவாஜி கணேசனின் 24-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை அடையாறில் உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் சிவாஜியின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, அதன் அருகே அவரது படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
சிவாஜி கணேசனின் மகனும், நடிகருமான பிரபு,...










