Google search engine
நீல​கிரி மாவட்​டம் கோத்தகிரியில் செயல்​படும் தனி​யார் பள்​ளி​யில் நேபாளத்தை சேர்ந்த ஜனக் என்​பவர் இரவு நேரக் காவலா​ளி​யாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் பகதூர் (25) பெங்​களூரு​வில் உள்ள தகவல் தொழில் ​நுட்ப (ஐ.டி.) நிறு​வனத்​தில் பணி​யாற்றி வரு​கிறார். இந்​நிலை​யில், விடு​முறைக்​காக கோத்தகிரிக்கு வந்த பகதூர் நேற்று முன்​தினம் இரவு வளர்ப்பு நாயுடன் வெளியே சென்​றார். சில மணி நேரங்​கள் கழித்து நாய் மட்​டும் வீடு திரும்​பியது. இதனால் அதிர்ச்​சி​யடைந்த உறவினர்​கள்...
செய்​தி​யாளர்​கள் மீது தாக்​குதல் நடத்​திய ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்​எல்ஏ பழனி​யாண்​டியை கைது செய்ய வேண்​டும் என்று அன்​புமணி, அண்​ணா​மலை, விஜய் ஆகியோர் வலியுறுத்​தி​உள்ளனர். கரூர் மாவட்​டம் கிருஷ்ண​ராயபுரம் பகு​தி​யில் விதி​களுக்​குப் புறம்​பாக செயல்​பட்ட கல்​கு​வாரி குறித்து செய்தி சேகரிக்​கச் சென்ற தனி​யார் செய்தி தொலைக்​காட்சி செய்​தி​யாளர், ஒளிப்​ப​தி​வாளர் மீது, எம்​எல்ஏ பழனி​யாண்டி மற்​றும் அவரது ஆதர​வாளர்​கள் சரமாரி​யாகத் தாக்​கிய​தாக புகார்​கள் எழுந்​தன. இது தொடர்​பான வீடியோ வெளி​யாகி பெரும் பரபரப்பை...
கலை​வாணர் அரங்க வளாகத்​தில் அமைக்​கப்​பட்​டுள்ள கலை​வாணர் என்​.எஸ்​.கிருஷ்ணன் புதுப்​பிக்​கப்​பட்ட சிலையை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் இன்று திறந்​து​வைக்​கிறார். இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: நாகர்​கோ​வில் சுடலை​முத்து கிருஷ்ணன் ஆகிய ‘என்​.எஸ்​.கே’ 1908-ம் ஆண்டு பிறந்​தார். 1940, 1950-களி​ல் தமிழ்த் திரை​யுல​கின் மிகச் சிறந்த நகைச்​சுவை நடிகர், பாடகர், நாடகத் தயாரிப்​பாளர், சினிமா தயாரிப்​பாளர் என்​றெல்​லாம் புகழுடன் விளங்​கிய​வர். ஜி.என்​.செட்டி சாலை - திரு​மலைப் பிள்ளை சாலை சந்​திப்​பில் அண்​ணா​வால் திறக்​கப்​பட்ட கலை​வாணர்...
ஓய்​வு​பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியரும், மூத்த கல்​வி​யாள​ரு​மான எஸ்​.எஸ்​.​ராஜகோ​பாலன் (95) வயது மூப்பு மற்​றும் உடல்​நலக்​குறைவு காரணா​மாக, சென்னை, கோடம்​பாக்​கத்​தில் தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வந்​தார். இந்​நிலை​யில், சிகிச்சை பலன் அளிக்​காமல் நேற்று முன்​தினம் கால​மா​னார். ராஜகோ​பாலனின் விருப்​பப்​படி அவரது உடல் மருத்​துவ ஆராய்ச்​சிக்​காக போரூர் ராமச்​சந்​திரா மருத்​து​வக் கல்​லூரி​யில் நேற்று ஒப்​படைக்​கப்​பட்​டது. முன்​ன​தாக, அவரது உடலுக்கு மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் பெ. சண்​முகம், மத்​திய...
சூரியக் கட்சியில் இருக்கலாம், சூப்பர் ஹீரோ கட்சியுடன் பேசலாம் என கதர் கட்சிக்குள் இரண்டு ‘கட்சிகள்’ கச்சைகட்டி ஆடும் நிலையில், சத்தமில்லாமல் இன்னொரு வேலையைச் செய்து கொண்டிருக்கிறாராம் கதர் கட்சியின் ‘வெல்த்’ தலைவர். சூரியக் கட்சியால் சில பல சகாயங்களை பெற்றுவரும் அவருக்கு அத்தனையும் விட்டுவிட்டு அந்த முகாமை விட்டு மாற்று முகாம் நோக்கிச் செல்வதற்கு மனம் வரவில்லையாம். அதனால், முடிந்தவரைக்கும் சூரிய கட்சி கூட்டணியிலேயே நீடிப்பதற்கான அத்தனை வேலைகளையும்...
நீல​கிரி மாவட்​டம் கீழ்​கோத்​த கிரியை சேர்ந்த ஆலு குரும்​பர் பழங்​குடி ஓவியர் கிருஷ்ணனுக்கு மத்​திய அரசு சமீபத்​தில் பத்மஸ்ரீ விருது அறி​வித்து பெரு​மைப்​படுத்​தி​யது. இவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உயி​ரிழந்​தார். இவரது மனைவி சுசீலா, மேட்​டுப்​பாளை​யத்​தில் பாக்​குத் தோப்​பில் வேலை செய்​து, குடும்​பத்தை நடத்தி வரு​கிறார். கிருஷ்ணன்​-சுசீலா தம்​ப​தி​யின் மூத்த மகள் வாசுகி, தந்தை இறப்​புக்​குப் பிறகு கல்விக் கட்​ட​ணம் செலுத்த வழி​யின்​றி, படிப்பை நிறுத்தி விட்​டார். இதுகுறித்த செய்தி...
தமிழக, காரைக்​கால் மீனவர்கள் 9 பேரை விடு​தலை செய்து இலங்கை நீதி​மன்​றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த டிசம்​பர் 28-ம் தேதி நெடுந்​தீவு அருகே பாக் நீரிணை கடற்​பகு​தி​யில், ராம​நாத​புரம் மாவட்​டம் மண்​டபம் பகு​தி​யைச் சேர்ந்த மீனவர்கள் மீன்​பிடித்​துக் கொண்​டிருந்​தனர். அப்​போது, சந்​தியா ஜோசப் என்​பவரது விசைப்​படகை இலங்கை கடற்​படை​யினர் சுற்​றிவளைத்​தனர். படகில் இருந்த மீனவர்கள் அமோஸ்​டின், ஜெனி​டாஸ், ஜெபஸ்​டின் ஆகியோரைக் கைது செய்த இலங்கை கடற்​படை​யினர், அவர்​களை ஊர்க்​காவல் துறை நீதி​மன்​றத்​தில்...
சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​தின் வரு​வாய் 2024–25-ம் நிதி​யாண்​டில், கட்​ட​ணம் தவிர்த்து இதர பிரிவு​களில் 30 சதவீதம் வரை அதி​கரித்​துள்​ளது. சென்​னை​யில் 2 வழித்​தடங்​களில் மெட்ரோ ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன. 3 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் தின​மும் பயணம் செய்​கின்​றனர். மெட்ரோ ரயில் நிறு​வனம் டிக்​கெட் கட்டண வரு​வாய் மட்​டுமின்​றி, இதர வழிகளி​லும் வரு​வாயை திரட்​டும் பணி​களை கடந்த சில ஆண்​டு​களாக மேற்​கொண்டு வரு​கிறது. குறிப்​பாக, வாகன நிறுத்​தும் இடம் அதி​கரிப்​பு, மெட்​ரோவுக்கு சொந்​த​மான...
சென்னை சென்ட்​ரல் - கூடூர் மார்க்​கத்​தில் மீஞ்​சூர் - பொன்​னேரி ரயில் நிலை​யங்​களுக்கு இடையே பொறி​யியல் பணி நடக்​க​வுள்​ள​தால், மின்​சார ரயில் சேவை​யில் மாற்​றம் செய்​யப்பட உள்​ளது. இதன்​படி, சென்னை சென்ட்​ரல் - கும்​மிடிப்​பூண்​டிக்கு பிப்​. 4, 6, 7 ஆகிய தேதி​களில் இரவு 11.20 மணிக்கு புறப்​படும் மின்​சார ரயில், மீஞ்​சூர் - கும்​மிடிப்​பூண்டி இடையே பகுதி ரத்து செய்​யப்​படும். கும்​மிடிப்​பூண்டி - சென்னை சென்ட்​ரலுக்கு பிப்​. 5, 7,...
கொலை செய்​யப்​பட்ட பிஹார் தம்​பதி மற்​றும் குழந்​தை​யின் உடல்​களை கட்​ட​ணமின்றி சொந்த மாநிலத்​தில் உறவினர்​களிடம் ஒப்​படைக்க முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உத்​தர​விட்​டுள்​ளார். வேலை தேடி சென்னை வந்த, பிஹார் மாநிலம், ஷேக்​பூரா மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் கவுரவ் குமார், மனைவி புனிதா குமாரி, அவர்​களின் 2 வயது குழந்தை ஆகியோர் இங்கு அதே மாநிலத்​தைச் சேர்ந்த 3 பேரால் கொலை செய்​யப்​பட்​டனர். இதையடுத்து கொலையாளிகள் மூவரை​யும் போலீ​ஸார் கைது செய்தனர். கொலை செய்​யப்​பட்ட மூவரின்...