‘கட்சிக்காக உழைத்த உண்மைத் தொண்டர்களை ஒதுக்குகிறார்கள்!’ – கனிமொழியிடம் திமுக கவுன்சிலர் ஆதங்கம்
admin - 0
“திமுகவில் 36 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்த உண்மை தொண்டர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். 7 ஆண்டுகளாக உறுப்பினர் அட்டையைக்கூட புதுப்பிக்காமல் இருப்பதை தேர்தல் நேரத்தில் கவனிக்க வேண்டும்” - நாகர்கோவிலில் நடைபெற்ற திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் கனிமொழி எம்.பி-யை சாட்சியாக வைத்துக் கொண்டு உள்ளாட்சி பிரதிநிதி ஒருவர் இப்படி குமுறியதும் அதைக் கேட்டு அந்த அரங்கில் இருந்த அத்தனை பேரும் கைதட்டி அதை ஆமோதித்ததும் தற்போது வீடியோவாக வைரலாகி வருகிறது.
அக்டோபர்...
திமுகவுக்கு இக்கட்டை உண்டாக்கும் மேட்டூர் உபரி நீர் பஞ்சாயத்து! – தடதடக்கும் தண்ணீர் அரசியல்
admin - 0
மேட்டூர் அணை நிரம்பி வழியும் போதெல்லாம் ஏராளமான டிஎம்சி நீர் வலுக்கட்டாயமாக கடலுக்கு அனுப்பப்படும். அப்போதெல்லாம், சேலம் மாவட்ட மக்கள் மத்தியில் கோபம் கொப்பளித்து அடங்கும். இந்த நிலையில், சேலம் மாவட்டத்துக்காரரான பழனிசாமி தமிழக முதல்வரானதும் மேட்டூர் உபரிநீரை தனது எடப்பாடி தொகுதி உட்பட 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கு பயன் தரும் விதமாக 100 ஏரி திட்டத்தை அறிவித்தார்.
இதற்காக ரூ.565 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு மளமளவென பணிகள்...
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என்று பாமக தலைவர் அன்புமணி கூறினார். சேலம் மாவட்டம் மேட்டூரில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் தமிழக மக்கள் உரிமை மீட்பு நடை பயணம் நேற்று நடந்தது. முன்னதாக, உயர்மட்ட மேம்பாலம் கட்ட கோரிக்கை எழுந்துள்ள கொளத்தூரை அடுத்த கோட்டையூரிலும், செட்டிப்பட்டியில் புதிய நீரேற்று திட்டம் அமையவுள்ள இடத்திலும் அவர் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அன்புமணி கூறியதாவது: சேலம் மாவட்டம்...
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நெல்லையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: நடிகருக்குப் பின்னால் செல்வது ஆபத்தானது. அறிவார்ந்த இந்த சமூகம், திரைக் கவர்ச்சிக்கு பின்னால் ஓடுவது அசிங்கமானது.
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்க்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 1.25 கோடி வட இந்தியர்களுக்கு வாக்குரிமை கொடுத்தால் தமிழ் சமூகத்தினர் பாதிக்கப்படுவார்கள். பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் அதிமுக இதற்கு ஆதரவு தெரிவிக்கிறது.
கரூர் விவகாரத்தில் தவெக மாவட்டச் செயலாளர்,...
‘தொண்டர்களை நம்பித்தான் நான் இருக்கேன்..’ – நிர்வாகிகள் பயிற்சி கூட்டத்தில் ஸ்டாலின் உருக்கம்
admin - 0
தமிழகத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் பாஜக.வின் பகல்கனவு, திமுக இந்த மண்ணில் இருக்கும் வரை நிறைவேறாது என்றும் 2026 தேர்தலிலும் திமுக வெற்றி பெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக சார்பில் ‘என் வாக்குச்சாவடி-வெற்றி வாக்குச்சாவடி’ எனும் பெயரில் நிர்வாகிகளுக்கான பயிற்சிக் கூட்டம் மாமல்லபுரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 2019-ம் ஆண்டு முதல் நாம் எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும், மகத்தான...
‘குக்கர்’ தலைவர் அண்மைக் காலமாக எடக்கானவருக்கு எதிராக எக்ஸ்ட்ராவாக நான்கைந்து விசில்களை சேர்த்து அடித்து தாக்கி வருகிறார். அதன் காரணம் இதுதானாம். தடாகக் கட்சி தரப்பில் குக்கர் பார்ட்டிக்காக எடக்கானவரிடம் இறுதிச் சுற்று பேச்சுவார்த்தை நடத்தியவர்கள், “அவர் தான் தேர்தலில் நிற்கவில்லை என்கிறாரே... அப்படி இருக்கையில் அவரையும் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாமே?” என்று சமாதானம் பேசினார்களாம்.
அழுத்தம் தாங்காமல் அந்த சமாதானத்தை ஏற்கும் முடிவுக்கு வந்த எடக்கானவர், “அப்படியானால் அவரோட...
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைத்துவிட்டால் தேனாறும் பாலாறும் ஓடும் என்பதைப் போல முக்கியக் கட்சிகள் அனைத்தும் அதை ஒரு பிரதானப் பிரச்சினையாக பேசி வரும் நிலையில், “மாநில அந்தஸ்துக்கும், மாநிலத்தின் வளர்ச்சிக்கும் சம்பந்தம் இல்லை. மாநில அந்தஸ்து இருந்தால் தான் சிறப்பான ஆட்சி நடத்த முடியும் என்பதெல்லாம் ஒன்றும் கிடையாது” என புதிதாக ஒரு கருத்தைப் பேசி இருக்கிறது புதுச்சேரி அதிமுக.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி அதிமுக...
“இந்த கூட்டணி தத்துவம் எங்களுக்கு சரியாக வரவில்லை!” – உரக்கக் குரல் எழுப்பும் கே.எஸ்.அழகிரி நேர்காணல்
admin - 0
ஆட்சியில் பங்கு என்ற கோஷம் தமிழக காங்கிரஸ் தரப்பில் இப்போது முன்னை விட சத்தமாகக் கேட்கத் தொடங்கி இருக்கிறது. இந்த விஷயத்தில், “அதையெல்லாம் டெல்லி பார்த்துக் கொள்ளும்” என மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சமாளித்தாலும் மற்றவர்கள் விடுவதாய் இல்லை. அந்த வகையில், ஆட்சியில் பங்கு விஷயத்தை அழுத்தமாக பேசிவரும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ‘இந்து தமிழ் திசை’க்காக அளித்த நேர்காணல் இது.
திமுக அரசு மைனாரிட்டியாக இருந்த...
தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் நெல்லின் ஈரப்பதத்தை ஆய்வு செய்த மத்தியக் குழுவினர்
admin - 0
தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் நெல்லின் ஈரப்பத்தை மத்தியக் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையால் நெல் மூட்டைகள் நனைந்துள்ளன. எனவே, 22 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசிடம், தமிழக அரசு அனுமதி கேட்டது.
இதையடுத்து, ஈரப்பதம் தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய அரசு 3 குழுக்களை அமைத்தது. இக்குழுவைச் சேர்ந்த பி.கே.சிங், ஷோபித் சிவாச், ராகேஷ் பரலா ஆகியோர் தஞ்சாவூர்...
ஆளும் கட்சியின் கடலோர மாவட்ட தலைமைப் புள்ளிக்கும் ‘ராஜ’ மந்திரிக்கும் ஆரம்பத்திருந்தே ஒத்துப்போகவில்லை. தான் இருக்க வேண்டிய இடத்தை ‘ராஜ’ மந்திரி ‘குறுக்கு வழியில்’ கோல் போட்டு தட்டிப்பறித்து விட்டதாக மாவட்டப் புள்ளிக்கு மனங்கொள்ளா வருத்தம். இந்தக் கசப்பை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு இருவரும் முஷ்டி தூக்கி நிற்பதால் கழகத்தினரும் இரு பிரிவாக நின்று இம்சை செய்கிறார்களாம்.
மாவட்டப் புள்ளி தனக்கும் ‘எஸ்கார்ட்’ போக்குவரத்து அமையும் அந்தஸ்து வரும் என...










