திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்கா கந்தூரி விழாவுக்கு தடை கோரி வழக்கு: விசாரணை தள்ளிவைப்பு
admin - 0
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்கா கந்தூரி விழாவுக்குத் தடை கோரிய வழக்கின் விசாரணையை ஜன. 2-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த மாணிக்க மூர்த்தி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் கடந்த ஆண்டு நடந்த கந்தூரி விழாவில் அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன.
இதற்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரை...
தவெக கூட்ட நெரிசல் வழக்கு: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு ஆனந்த், ஆதவ் உட்பட 8 பேருக்கு சம்மன்
admin - 0
கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கு விசாரணை தொடர்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் வரும் 29-ம் தேதி ஆஜராகுமாறு தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் கரூர் எஸ்.பி. உட்பட 8 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கை சிபிஐ...
சுனாமி நினைவு தினம் நேற்று 21-ம் ஆண்டாக அனுசரிக்கப்பட்டது. அதை யொட்டி மெரினா மற்றும் காசிமேடு கடற்கரை பகுதிகளில் சுனாமியால் உயிரிழந்தோருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், மீனவ அமைப்புகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
திமுக மீனவரணி சார்பில் அணியின் துணைத் தலைவர் கே.பி.சங்கர் தலைமையில் திருவொற்றியூர் கடலோரப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, மாவட்டச் செயலாளர் சுதர்சனம் உள்ளிட்டோர் கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து...
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை சாந்தோம் தேவாலயத்தில் சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி நேற்று முன்தினம் நள்ளிரவில் கிறிஸ்துமஸ் திருப்பலியை நிறைவேற்றினார்.
தொடர்ந்து நேற்றும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல், பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், மயிலாப்பூர் லஸ் தேவாலயம், ராயப்பேட்டை காணிக்கை அன்னை ஆலயம், எழும்பூர் இருதயஆண்டவர் திருத்தலம்,...
“மதவாத அரசியல் செய்வது திமுக தான்” – பாஜக மாநில துணை தலைவர் டால்பின் ஸ்ரீதர் தடாலடி நேர்காணல்
admin - 0
தற்போதைய அரசியல் சூழல்கள், கூட்டணி வாய்ப்புகள் குறித்து ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காக பாஜக மாநில துணை தலைவர் டால்பின் ஸ்ரீதரிடம் பேசினோம். அவரது கருத்துக்கள் இங்கே.
Q
தவெகவில் இருக்கும் அளவுக்கு பாஜக மீது இளைஞர்களுக்கு ஈர்ப்பு இல்லை என்கிறார்களே?
A
சினிமா கவர்ச்சியில் ‘ஜென் - ஸீ’ முதல் அனைத்து தரப்பினரும் விஜய்-க்கு ரசிகர்களாக மட்டும்தான் இருக்கிறார்கள். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேநேரத்தில்,15 கோடி உறுப்பினர்கள் இருக்கும் பாஜகவின் தேசிய செயல் தலைவராக...
‘இசைமுரசு’ என்று போற்றப்படும் நாகூர் இ.எம்.ஹனீபா நூற்றாண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் 24-ம் தேதி நடைபெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, விசிக துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸின் ‘இசைமுரசு நாகூர் ஹனீபா நூற்றாண்டு மலர்’ மற்றும் ‘இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபா பாடல்கள் முழுத் தொகுதி’ ஆகிய நூல்களை வெளியிட்டார். ஹனீபாவின்...
வண்ணான்குளம், பெரவள்ளூரில் ஏரி ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
admin - 0
கொளத்தூர் அடுத்த வண்ணான்குளம், பெரவள்ளூர் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை செம்பியத்தை சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: கொளத்தூர் ஜிகேஎம் காலனி பகுதியில் உள்ள வண்ணான்குளம் ஏரி, பெரவள்ளூர் ஏரி பகுதியை சேர்ந்த சுமார் 300 ஏக்கர் நிலங்கள் முழுமையாக ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கிஉள்ளன.
இந்த ஏரிகளைச் சுற்றிஉள்ள அரசு புறம்போக்கு...
சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வரும் ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை பல்கலைக்கழகத்தின் 167-வது பட்டமளிப்பு விழா ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த விழாவில், பிஎச்டி பட்டதாரிகள் நேரில் பட்டம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்போது விநியோகம் செய்யப்படுகின்றன. பல்கலைக்கழகத்தின் www.unom.ac.in எனும் இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பட்டமளிப்பு விழாவுக்கான கட்டணமாக ரூ.525 செலுத்த வேண்டும். பூர்த்தி...
சுற்றிச் சுழன்று தேர்தல் பணியாற்றி, சட்டமன்றத் தேர்தலில் வென்று காட்டுவோம் என உளமார உறுதி ஏற்கிறோம் என்று அதிமுக தெரிவித்துள்ளது.
எம்ஜிஆரின் 38வது நினைவு தினத்தை முன்னிட்டு, அதிமுக சார்பில் தொண்டர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”ஏழை, எளிய மக்களின் உயர்வுக்காகவும்; தாய்மார்களின் முன்னேற்றத்திற்காகவும்; தமிழக மக்களின் வளர்ச்சிக்காகவும்; பொற்கால ஆட்சியைத் தந்தவர் எம்.ஜி.ஆர்.
அவர் உருவாக்கிய மகத்தான மக்கள் இயக்கமாம் அதிமுகவை, நம் உயிரினும் மேலாகக் கருதி, எந்நாளும் காப்போம் என...
மதுரை மாவட்டத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட திமுக முடிவு செய்துள்ளதால் கூட்டணி கட்சியினர் தவிப்பில் உள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் கடந்த முறை திமுக, மதுரை வடக்கு, மேற்கு, கிழக்கு, மத்தி, திருமங்கலம், சோழவந்தான், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது.
மதுரை தெற்கு மதிமுகவுக்கும், திருப்பரங்குன்றம் மார்க்சிஸ்ட் கட்சிக்கும், மேலூர் காங்கிரஸுக்கும் ஒதுக்கப்பட்டன. இதில், கூட் டணிக் கட்சிகள் போட்டியிட்ட திருப்பரங்குன்றம், மேலூர்...
